Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கப்பல் கட்டும் துறையில் 2030-ம் ஆண்டில் உலகின் சிறந்த 10 நாடுகளில் இந்தியா நிச்சயம் இடம்பெறும்: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்
    மாநிலம்

    கப்பல் கட்டும் துறையில் 2030-ம் ஆண்டில் உலகின் சிறந்த 10 நாடுகளில் இந்தியா நிச்சயம் இடம்பெறும்: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்

    adminBy adminSeptember 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கப்பல் கட்டும் துறையில் 2030-ம் ஆண்டில் உலகின் சிறந்த 10 நாடுகளில் இந்தியா நிச்சயம் இடம்பெறும்: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடி: கப்​பல் கட்​டும் துறை​யில் 2030-ம் ஆண்​டில் உலகில் சிறந்த 10 நாடு​களுக்​குள் இந்​தியா இடம் பிடிக்​கும் என்று மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் நீர்​வழித் துறை அமைச்​சர் சர்​பானந்தா சோனோ​வால் கூறி​னார். தூத்​துக்​குடி வஉசி துறை​முகத்​தில் மொத்​தம் ரூ.303 கோடி​யில் பசுமை ஹைட்​ரஜன் முன்​னோடி ஆலை தொடக்க விழா மற்​றும் பல்​வேறு திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது.

    துறை​முக ஆணை​யத் தலை​வர் சுசாந்த குமார் புரோஹித் தலைமை வகித்​தார். தமிழக அமைச்​சர் பி.கீ​தாஜீவன், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் முன்​னிலை வகித்​தனர். மத்​திய அமைச்​சர் சர்​பானந்தா சோனோ​வால் முடிவுற்ற திட்​டப் பணி​களை தொடங்​கி​வைத்​தும், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும் பேசி​னார். விழா​வில், மத்​திய துறை​முகங்​கள் துறைச் செயலர் டி.கே.​ராமச்​சந்​திரன், சிறப்​புச் செயலர் ராஜேஷ் குமார் சின்​கா உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

    விழா​வில் மத்​திய அமைச்​சர் சர்​பானந்தா சோனோ​வால் பேசி​ய​தாவது: கடந்த 11 ஆண்​டு​களில் தமிழகத்​தில் உள்ள 3 பெரிய துறை​முகங்​களுக்கு சாகர் மாலா திட்​டத்​தின் கீழ் ரூ,93,715 கோடியி​லான 98 திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. இதில் 50 திட்​டங்​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. இதுத​விர 3 துறை​முகங்​களை நவீனப்​படுத்த 11 ஆண்​டு​களில் ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. தூத்​துக்​குடி வஉசி துறை​முகம் சூரிய மின்​சக்​தி, காற்​றாலைத் திட்​டங்​கள் மூலம் பசுமை துறை​முக​மாக மாறி​யுள்​ளது. நாட்​டில் 3 துறை​முகங்​கள் பசுமை ஹைட்​ரஜன் மைய​மாக அறிவிக்​கப்​பட்​டன. அதில் தூத்​துக்​குடி​யும் ஒன்​றாகும்.

    தூத்​துக்​குடி துறை​முகத்தை பசுமை ஹைட்​ரஜன் மைய​மாக மாற்​றும் திட்​டத்​தின் முன்​னோடி​யாக, நாட்​டிலேயே முதல் துறை​முக​மாக தூத்​துக்​குடி​யில் பசுமை ஹைட்​ரஜன் உற்​பத்தி முன்​னோடி ஆலை திறக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், நாட்​டிலேயே முதலா​வ​தாக தூத்​துக்​குடி துறை​முகத்​தில் பசுமை மெத்​த​னால் சேமிப்பு மற்​றும் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்​கப்​படு​கிறது. மேலும், தூத்​துக்​குடி​யில் கப்​பல் கட்​டும் தளம் அமைக்​கப்​பட உள்​ளது.

    இதற்​காக தமிழக அரசின் சிப்​காட் நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. கப்​பல் கட்​டும் தளம் திட்​டம் தொடர்​பாக மத்​திய மாநில அரசுகளின் கூட்டு நிறு​வனம் விரை​வில் உரு​வாக்​கப்​படும். இந்த திட்​டம் மூலம் 2,000 பேருக்கு நேரடி​யாக​வும், 5,000 பேருக்கு மறை​முக​மாக​வும் வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

    மேலும், கப்​பல் கட்டும் துறை​யில் 2030-ம் ஆண்​டில் இந்​தியா உலகின் 10 சிறந்த நாடு​களில் ஒன்​றாக​வும், 2047-ல் சிறந்த 5 நாடு​களில் ஒன்​றாக​வும் இருக்​கும். இந்த திட்​டங்​களில் கடலோர சமு​தாய இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில் 37 கடல்​சார் பயிற்சி நிலை​யங்​கள் மூலம் ஆண்​டுக்கு 3.3 லட்​சம் பேருக்கு திறன் மேம்​பாட்டு பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. அமெரிக்க வரி​வி​திப்பை சமாளிக்​கும் வகை​யில் வலு​வான சூழல் நம்​மிடம் உள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார்.

    புரிந்​துணர்வு ஒப்​பந்​தம்: முன்​ன​தாக, தூத்​துக்​குடி​யில் கப்​பல் கட்​டும் தளம் அமைப்​பது தொடர்​பாக வஉசி துறை​முக ஆணை​யம், சிப்​காட் நிறு​வனம் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. துறை​முக ஆணை​யத் தலை​வர் சுசாந்த குமார் புரோஹித், சிப்​காட் மேலாண் இயக்​குநர் செந்​தில்​ராஜ் ஆகியோர்​ ஒப்​பந்​த நகலை பரி​மாறிக்​ கொண்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்: டிஜிபி அலுவலகம் அருகே நடந்தது என்ன?

    September 7, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு: அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்

    September 7, 2025
    மாநிலம்

    பாஜகவின் 25 அணிகளுக்கு அமைப்பாளர்கள் நியமனம்: நயினார் நாகேந்திரன் மகனுக்கு புதிய பொறுப்பு

    September 7, 2025
    மாநிலம்

    மதுரை செல்லும் பயணிகளுக்கு மன உளைச்சல்: சென்னை விமான நிலைய குளறுபடிக்கு தீர்வு காண வலியுறுத்தல்

    September 7, 2025
    மாநிலம்

    தினகரன், ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக்கு திரும்புவார்கள்: அண்ணாமலை நம்பிக்கை

    September 7, 2025
    மாநிலம்

    அதிக விபத்து நடக்கும் இடங்களில் முதலுதவி சிகிச்சை பயிற்சி

    September 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹாலிவுட்டில் வித்யுத் ஜம்வால்: உறுதி செய்தது தயாரிப்பு நிறுவனம்
    • ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: வங்கதேசத்து பெண் உட்பட 12 பேர் கைது
    • டி20-யில் ஆகக்குறைந்த ரன்களுக்குச் சுருண்ட இலங்கை – ஜிம்பாப்வே வெற்றி!
    • இணையத்தில் கசிந்தது ராஜமவுலி பட காட்சி!
    • சந்திர கிரகணம் 2025 நேரடி புதுப்பிப்புகள்: அனைத்து இராசி அறிகுறிகளிலும் சந்திர கிரஹானின் தாக்கம் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.