Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கூடாது: சீமான், வேல்முருகன் வலியுறுத்தல்
    மாநிலம்

    கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கூடாது: சீமான், வேல்முருகன் வலியுறுத்தல்

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கூடாது: சீமான், வேல்முருகன் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கூடாது என சீமான், தி.வேல்முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

    ‘தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி’ என்று மநீம கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கோரி கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக நீதிமன்றமும், கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இவ்விவகாரத்தில் மன்னிப்பு தான் தீர்வு என வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்ததாவது:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கமல்ஹாசன் ஒரு வரலாற்று உண்மையை தான் சொல்கிறார். தமிழோடு சமஸ்கிருதம் கலந்து பேசி, பேசி அதிலிருந்து பிரிந்து பிறந்த மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள். இப்போதும் கூட அக்கா, அம்மா போன்ற தூய தமிழ் சொற்கள் கன்னடத்தில் இருக்கின்றன. இதை ஏற்க மனமில்லை. கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை என்றால் அதற்கான அதிகாரப்பூர்வ சான்று காட்டினால் அனைவரும் அமைதியாகிவிட போகிறார்கள்.

    அதைவிடுத்து, கமல்ஹாசன் நடித்த ‘தக்ஃலைப்’ படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. இதை வேண்டுமென்றே தான் செய்கின்றனர். தமிழ், தமிழர் என்றாலே கர்நாடாகாவினருக்கு ஒரு வெறுப்பு. இவ்விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன செய்துவிடுவார்கள்? நீதிபதி மட்டும் என்ன மொழியியல் வல்லுநரா? எனவே கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கூடாது.

    தவாக தலைவர் தி.வேல்முருகன்: கமல்ஹாசன் விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்படுகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், பாஜக மாநிலத் தலைவரும் தெரிவிக்கும் கருத்துக்கள் தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது.

    அதேபோல் நீதிபதியாக இருப்பவரும் ஒரு கன்னடராக இருந்து மட்டுமே தீர்ப்பளித்துள்ளார். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி கமல்ஹாசன் பேசியது சரியே. அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். ‘தக்ஃலைப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியாக தடைவிதித்தால், இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரும் கன்னட திரைப்படமும் வெளியாகாது.

    விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்பி: கமல்ஹாசன் சொன்னது அரசியல் கூற்றல்ல. தமிழ்த்தாய் வாழ்த்தை நமக்குத் தந்த தமிழறிஞர் சுந்தரனாரின் கருத்தைத் தான் கமல்ஹாசன் கூறியுள்ளார். அனைத்துவிதமான வெறுப்பு அரசியலுக்கும் ஊற்றுக் கண்ணாகத் திகழும் பிற்போக்குவாதிகளின் சூழ்ச்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகள் பலியாகிவிடக்கூடாது. இதில் விழிப்போடு இருந்து திராவிட ஒற்றுமையை கர்நாடக முதல்வர் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ‘தல்ஃலைப்’ படத்தை கர்நாடகவில் வெளியிட தடையிட்டால், பெங்களூர் நிறுவனம் தயாரித்து, நடிகர் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தை தமிழகத்தில் வெளியிட தடைக்கோருவோம் என சமூக வலைதளங்கில் நெட்டிசன்கள் பரப்பி வரும் செய்திகள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுகதான் ஐசியூ-வில் உள்ளது: உதயநிதிக்கு பழனிசாமி பதிலடி

    September 12, 2025
    மாநிலம்

    ஆசிரியர் ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

    September 12, 2025
    மாநிலம்

    ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்

    September 12, 2025
    மாநிலம்

    16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

    September 12, 2025
    மாநிலம்

    மதுரை மேயர் இந்திராணியை ஓரங்கட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

    September 12, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுகதான் ஐசியூ-வில் உள்ளது: உதயநிதிக்கு பழனிசாமி பதிலடி
    • ஆசிரியர் ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
    • ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்
    • மாரடைப்பு ஆபத்து: ஜிம்மைத் தொடங்கவா? இளைஞர்களிடையே மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க இருதயநோய் நிபுணர் ஐந்து சோதனைகளை பரிந்துரைக்கிறார்
    • 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.