Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திட்ட விவரம் அடங்கிய பலகை கட்டாயம்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்
    மாநிலம்

    கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திட்ட விவரம் அடங்கிய பலகை கட்டாயம்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்

    adminBy adminJune 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திட்ட விவரம் அடங்கிய பலகை கட்டாயம்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மனைப்பிரிவு மற்றும் கட்டுமானத் திட்டங்கள் உள்ள இடங்களில், அவற்றின் திட்ட விவரங்கள் அடங்கிய தகவல் பலகை கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், தங்களது குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதுதவிர, நில மேம்பாட்டாளர்கள் மனைப் பிரிவு திட்டங்களை அறிவித்து, விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் மக்கள் கூடும் இடங்கள், உயரமான கட்டிடங்கள் என பொதுமக்கள் பார்வையில்படும் இடங்களில் திட்டங்கள் தொடர்பான விளம்பரப்பதாகைகளை வைக்கின்றனர். இதில், திட்டம் தொடர்பான சில தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.

    இந்நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் அண்மையில் ஓர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி, கட்டுமானம் மற்றும் மனைத் திட்டங்களில், அவற்றின் அமைவிடங்களில் இரண்டு அடிக்கு, நான்கு அடி என்ற அளவில், திட்டம் தொடர்பான விவரங்கள் அடங்கிய விவரப் பலகையை கட்டாயம் அமைக்க வேண்டும்.

    அதில், மேம்பாட்டாளர் பெயர், திட்டத்தின் பெயர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையப் பதிவு விவரம், பதிவு அடிப்படையில் திட்டப் பணிகள் முடிவடையும் நாள், ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதள முகவரி ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த தகவல் பலகை மற்ற விளம்பரப் பலகையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது. தனியாக வைக்கப்படுவதுடன், பொதுமக்கள் எளிதில் படிக்கும் வகையில் அதற்கான எழுத்துருக்கள் இருக்க வேண்டும்.

    ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்த பின்னர், அந்த தகவல் பலகை நிறுவப்பட்டால், கட்டுமானப் பொறியாளர் சான்றிதழ், திட்ட புகைப்படம் ஆகியவையும் இடம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களை சுரண்டுகிறது தமிழக அரசு” – அன்புமணி

    September 12, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதில் ரூ.5 கோடி முறைகேடு: கிருஷ்ணசாமி

    September 12, 2025
    மாநிலம்

    பாஜக அரசு மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: செல்வப்பெருந்தகை

    September 12, 2025
    மாநிலம்

    அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

    September 12, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கள்ளச்சாராயம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் திமுக தலைகுனிய வைத்து கொண்டிருக்கிறது: தமிழிசை விமர்சனம்

    September 12, 2025
    மாநிலம்

    தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களை சுரண்டுகிறது தமிழக அரசு” – அன்புமணி
    • தேங்காய் நீர் எதிராக விளையாட்டு பானங்கள்: இது விளையாட்டு வீரர்களுக்கான இறுதி நீரேற்றம் ரகசியம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘சார்லி சுதந்திரமான பேச்சுக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய தியாகியாக மாறிவிட்டார்’: சார்லி கிர்க்கின் எக்ஸ் கைப்பிடி அவரது மரணத்தை துக்கப்படுத்துகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாக்காளர் பட்டியலில் பெயர்: சோனியாவுக்கு எதிரான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி
    • இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதில் ரூ.5 கோடி முறைகேடு: கிருஷ்ணசாமி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.