Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminJune 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை சட்டரீதியாக வழங்கி கடமையை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சமக்ர சிக்க்ஷா திட்டத்தில் இருந்து இந்த நிதியை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

    கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை எனக்கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் அமைப்பின் நிர்வாகியான வே.ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. கடந்த 2021 முதல் 2023 வரை மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையிலும் தமிழக அரசு தனது பங்களிப்பு நிதியைக் கொண்டு சமாளித்தது. தற்போது சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது’’ என்றார்.

    அப்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்பதால் கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தொகை ஒதுக்கப்படவில்லை’’ என தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

    கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் நோக்கமே அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான கல்வி தடையின்றி சென்றடைய வேண்டும் என்பதுதான். எனவே கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கி, மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

    கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை தேசிய கல்விக் கொள்கை மற்றும் சமக்ர சிக்க்ஷா திட்டத்துடன் இணைக்க எந்த அவசியமும் இல்லை. சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அதுதொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

    2024-25-ம் நிதியாண்டில் சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.3 ஆயிரத்து 586 கோடி ஒதுக்கப்பட வேண்டும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.2 ஆயிரத்து 151 கோடி. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதி ரூ.200 கோடி. எனவே இந்த ரூ.200 கோடியை ஒதுக்கி கொடுப்பதில் மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இருக்காது.

    அதேபோல கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை சமக்ர சிக்க்ஷா திட்டத்தில் இருந்து நீக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து, கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய நிதியை சட்டரீதியாக ஒதுக்க வேண்டும். இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி உரிய காலக்கெடுவுக்குள் அந்த தொகையை தமிழக அரசு 25 சதவீத இடஒதுக்கீட்டுக்காக தனியார் பள்ளிகளுக்கு எந்தவொரு பாரபட்சமும் காட்டாமல் பிரித்து வழங்க வேண்டும்.

    அதேபோல மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை எனக்கூறி காலம் தாழ்த்தாமல், சட்டரீதியாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உரிய காலக்கெடுவுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

    August 20, 2025
    மாநிலம்

    தேவாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ பாடல் ஒலிபரப்பு? – குமரி போலீஸார் தீவிர விசாரணை

    August 20, 2025
    மாநிலம்

    மதுரையில் நாளை தவெக 2-வது மாநில மாநாடு

    August 20, 2025
    மாநிலம்

    குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்: ஆக.31-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்

    August 20, 2025
    மாநிலம்

    பிரச்சார கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக அனுப்பப்படுவார்: இபிஎஸ் எச்சரிக்கை 

    August 20, 2025
    மாநிலம்

    முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்
    • 9-5 வேலையை ஆரோக்கியமாக மாற்ற 4 உதவிக்குறிப்புகள், ஒரு சிறந்த அமெரிக்க இருதய அறுவை சிகிச்சை நிபுணரின் கூற்றுப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
    • படப்பிடிப்பில் விபரீதம்: குழந்தைகள் உள்பட 120 பேர் மருத்துவமனையில் அனுமதி
    • கூந்தலுக்கான மண்டு கி இம்லி: முடி வளர்ச்சிக்கு பாபாப் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது – இந்தியாவின் நேரங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.