Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை: துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் வேலு வலியுறுத்தல்
    மாநிலம்

    கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை: துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் வேலு வலியுறுத்தல்

    adminBy adminSeptember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை: துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் வேலு வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்​தில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்கை எட்ட‘நீலப் பொருளா​தா​ரம்’ அதாவது கடல்​வழி வணி​கத்தை மேலும் ஊக்​குவிக்க வேண்​டியது நம் கடமை என்று துறை​முக மேம்​பாட்​டாளர்​களிடம் அமைச்​சர் எ.வ.வேலு வலி​யுறுத்​தி​னார்.

    சென்னை தி.நகரில் நீலப் பொருளா​தார மாநாடு நடை​பெற்​றது. இம்​மா​நாட்டை பொதுப்​பணி​கள், நெடுஞ்​சாலைகள் மற்​றும் சிறு துறை​முகங்​கள் துறை அமைச்​சர் எ.வ.வேலு தொடங்கி வைத்​தார்.

    அப்​போது அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தின் கடற்​கரை பன்​னாட்​டுக் கப்​பல்​கள் செல்​லும் வழித்​தடத்​துக்கு மிக அரு​காமை​யில் உள்ள பகு​தி​யாகும். 14 கடலோர மாவட்​டங்​கள் கொண்ட தமிழகத்​தின் கடற்​கரைப் பகு​தியை பல்​வேறு தரப்​பினரும் பயன்​படுத்​துகின்​றனர். குறிப்​பாக கடற்​கரை பகு​தி​யிலேயே குடி​யிருந்து மீன்​பிடித்தொழில் செய்து வரும் மீனவர்​கள் வசிக்​கின்​றனர். இதுத​விரமீன்​பிடி துறை​முகங்​கள், மீன்​வளர்ப்​புப் பண்​ணை​கள், வணிக ரீதி​யாக மத்​திய மற்​றும் மாநில அரசின் கட்​டுப்​பாட்​டில் உள்ள துறை​முகங்​கள், பொழுது​போக்கு கடற்​கரைப் பகு​தி​கள் (Beaches), உள்ளன.

    மேலும் சுற்​றுச்​சூழல் பாது​காப்பு பகு​தி​களான அலையாத்தி காடு​கள், ஆமை​கள் முட்​டை​யிடும் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா பவளப்பாறை​கள் நிறைந்த பகு​தி​கள்,பறவை​கள் சரணால​யங்​கள், வரலாற்று முக்​கி​யத்​து​வம் வாய்ந்த வழி​பாட்​டுத் தலங்​கள், கடலோர தொழில் பூங்​காக்​கள், கலங்​கரை விளக்​கங்​கள் தமிழக கடற்​பகு​தி​களில் அமைந்​துள்​ளன.

    உலகள​வில் 80 சதவீத வணி​க​மும், மிக நீண்ட 11 ஆயிரம் கிலோ மீட்​டர் நீள கடற்​கரை பகு​தி​யைக் கொண்ட நம் நாட்​டில் சுமார் 95 சதவீத வணி​க​மும் கடல்​வழி​யாக நடை​பெறுகிறது. தமிழகத்​தில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்கை எட்ட கடல்​வழி வணி​கத்தை மேலும் ஊக்​குவிக்க வேண்​டியது நம் கடமை. அதற்கு வணி​கத் துறை​முகங்​கள், மீன்​பிடித் துறை​முகங்​கள், கடல்​சார் சுற்​றுலா மேம்​பாடு, கப்​பல் கட்​டு​தல் மற்​றும் பழுது​பார்த்​தல் ஆகிய துறை​களில் நாம் மேலும் முன்​னேற்​றமடைய திட்​டங்​களை வகுக்க வேண்​டும். கடல் மார்க்​க​மாக கப்​பல்​கள் மூலம் கொண்டு செல்​லும் சரக்கு போக்​கு​வரத்து செல​வு, சாலை மற்​றும் ரயில் மூல​மாக கொண்டு செல்ல ஆகும் செலவை விட மிகக் குறை​வான​தாகும்.

    சென்னை – கன்னி​யாகுமரி சாலை​யும், கிழக்கு கடற்​கரைச் சாலை​யும் நம் கடலோர வணி​கத் துறை​முகங்​கள் மற்​றும் மீன்​பிடி துறை​முகங்​களுக்கு எளி​தான சாலை இணைப்பை வழங்​கு​கின்​றன. தமிழக கடற்​கரை பகு​தி​களுக்கு ரயில் இணைப்​பும் போதிய அளவில் உள்​ளது. இதை துறை​முக மேம்​பாட்​டாளர்​கள் கருத்​தில் கொண்டு துறை​முகங்​களை அமைக்​க​வும், தொழில் தொடங்​க​வும் முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். மாநாட்​டில், சென்னை மற்​றும் காம​ராஜர் துறை​முக ஆணை​யத்​தின் தலை​வர் சுனில் பாலி​வால், நெடுஞ்​சாலைத் துறை செயலர் இரா.செல்​வ​ராஜ், தமிழ்​நாடு கடல்​சார் வாரிய தலைமை செயல் அலு​வலர் தி.ந.வெங்​கடேஷ் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: அரசாணை வெளியீடு

    September 19, 2025
    மாநிலம்

    புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க டிஜிபி-க்கு அனுமதி அதிகாரம்

    September 19, 2025
    மாநிலம்

    டெட் தேர்வு வழக்கில் தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

    September 19, 2025
    மாநிலம்

    ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் மட்டுமல்ல; கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் கூறியது என்ன?

    September 19, 2025
    மாநிலம்

    நேபாள கலவரத்தின்போது மக்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

    September 19, 2025
    மாநிலம்

    “தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர்” – ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: அரசாணை வெளியீடு
    • உங்கள் உட்புற தாவரங்கள் உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்த முடியுமா: அறிவியல் என்ன சொல்கிறது, நீங்கள் என்ன செய்ய முடியும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க டிஜிபி-க்கு அனுமதி அதிகாரம்
    • நகங்களில் நெயில் பாலிஷ் விளைவுகள்: விஞ்ஞானம் வெளிப்படுத்துகிறது மற்றும் உங்கள் நகங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி கெடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.