Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்
    மாநிலம்

    கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

    adminBy adminSeptember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் கடந்த 5-ஆம் தேதி நடந்த விபத்தில், பயங்கர சத்தத்துடன் நச்சுப் புகை வெளியேறி அருகில் இருந்த குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 90 பேர் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், மயக்கம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே தொழிற்சாலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்கு நடுவில் உள்ள கடலூர் சிப்காட் தொடங்கியதிலிருந்தே அடிக்கடி விபத்துக்கள் நடப்பதும், நச்சு வாயுக்கள் வெளியேறுவதுமாக அருகாமையில் உள்ள பச்சையாங்குப்பம், சங்கொலிக்குப்பம், குடிகாடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    விபத்துக்கள் மட்டுமல்லாது அவ்வப்போது நெருப்புக் கனல் போல, பெரும் புகை மண்டலம் எழும்புவதை பார்க்கும் மக்கள் தினமும் அச்சத்துடனே வாழ்கின்றனர். மேலும் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றிலும், நீரோடைகளிலும் கலப்பதால் நிலத்தடி நீரும், விவசாயமும், மீன் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல சாகுபடி மூலம் வருவாய் ஈட்டி வந்த விவசாயிகள் தற்போது தொழிற்சாலைகளுக்கு வெறும் 150, 200 ரூபாய்க்கு செக்யூரிட்டி வேலைக்கு செல்கின்றனர்.

    கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த 4 உயிரிழப்புக்கு பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் இங்கு கூட்டுக்குழு அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றது. ஆனால் அந்த கூட்டுக்குழுவின் ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனிடையே 2021-ல் நடந்த 4 உயிர்ப்பலிகளுக்குப் பிறகும், 2023, 2024 ஆண்டுகள் மற்றும் நடப்பு 2025-ல் மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் கூட விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகளும், உடல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

    பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறும் போது மட்டும் தொழிற்சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார அமைப்புகள் வேலை செய்வது போல் தீவிரம் காட்டுகின்றன. ஆனால் மற்ற காலங்களில் நடைபெறும் சிறு விபத்துக்கள், பாதிப்புகள், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை.

    மேலும் இதுபோன்ற விபத்துகளின் போது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அபாயகரமான ரசாயனங்கள் குறித்து கடலூர், சிதம்பரம், புதுச்சேரியில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு கூட தெரிவிப்பதில்லை. இதனால் மாற்று மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக பெற முடியாமல் உயிர்களுக்கு ஆபத்து நேர்கிறது.

    எனவே, நச்சு வாயுக்கள் வெளியேறுவது, விபத்துக்கள் நடப்பது போன்ற சமயங்களில் அருகில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாக, விபத்துக்கு தகுந்த மாதிரி அபாய சங்குகள் மாறி மாறி ஒலிக்கப்பட வேண்டும். பாதிப்புகளை தடுக்க தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், பொதுமக்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்த வேண்டும்.

    தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகள், நோய்ப் பரவல்கள், நோய்களின் தன்மைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். மேலும் எந்தெந்த தொழிற்சாலைகள் எந்தெந்த விதமான வேதிப்பொருட்களை, வாயுக்களை, கழிவுகளை வெளியேற்றுகின்றன. அவைகள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றனவா? என்பவற்றை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பொள்ளாச்சியில் விவசாய, தொழில் துறை அமைப்புகளுடன் இபிஎஸ் கலந்துரையாடல்

    September 10, 2025
    மாநிலம்

    ரேபரேலியில் பாஜகவினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

    September 10, 2025
    மாநிலம்

    தேர்தல்வரை பசி, தூக்கம், ஓய்வின்றி உழைப்போம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல்

    September 10, 2025
    மாநிலம்

    கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகரின் பேரனுக்கு ஐகோர்ட் ஜாமீன்

    September 10, 2025
    மாநிலம்

    சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    September 10, 2025
    மாநிலம்

    விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பொள்ளாச்சியில் விவசாய, தொழில் துறை அமைப்புகளுடன் இபிஎஸ் கலந்துரையாடல்
    • பெல்லா பிராய்ட் யார்? சிக்மண்ட் பிராய்டின் வழித்தோன்றல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மொத்த சந்திர கிரகணத்தின் போது இரத்த மூன் உயரும்போது பால்வீதி ஒளிரும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அணியில் பும்ராவை பயன்படுத்துவதில் லாஜிக் ஓட்டைகள் – அஜய் ஜடேஜா சாடல்
    • நடிகர் சங்க தேர்தலை நடத்த என்ன சிக்கல்? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.