Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கடலூர் அருகே கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து: பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு
    மாநிலம்

    கடலூர் அருகே கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து: பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

    adminBy adminJuly 9, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடலூர் அருகே கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து: பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கடலூர்: கடலூர் அருகே பள்ளி வாக​னம் மீது ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். கடலூரில் உள்ள தனி​யார் பள்ளி வேன் நேற்று காலை தொண்​ட​மாநத்​தம் பகு​தி​யைச் சேர்ந்த 4 மாணவர்​களை ஏற்​றிக் கொண்டு சென்​றது. மஞ்​சக்​குப்​பத்​தைச் சேர்ந்த ஓட்​டுநர் சங்​கர் (47) வேனை ஓட்​டிச் சென்​றார்.

    காலை 7.30 மணி அளவில் செம்​மங்​குப்​பம் பகு​தி​யில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் மீது, விழுப்​புரம்​-மயி​லாடு துறை பயணி​கள் ரயில் எதிர்​பா​ராத​வித​மாக மோதி​யது. இதில் வேன் சுக்​குநூறாக நொறுங்​கி, 50 அடி வரை இழுத்​துச் செல்லப்பட்டது.

    இந்த விபத்​தில் தொண்​ட​மாநத்​தம் விஜயசந்​திரகு​மார் மகன் நிமிலேஷ் (12), சின்​ன​காட்​டு​சாகை திரா​விடமணி மகள் சாரு​ம​தி(16) ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். பலத்த காயமடைந்த சாரு​ம​தி​யின் தம்பி செழியன்( 15), நிமிலேஷின் அண்​ணன் விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்​டுநர் சங்​கர் (47) மற்​றும் விபத்​தில் காயமடைந்​தவர்​களை காப்​பாற்ற ஓடிச் சென்​று, மின்​சா​ரம் பாய்ந்​த​தில் பாதிக்​கப்​பட்ட செம்​மங்​குப்​பம் அண்​ணாதுரை (47) ஆகியோரை அங்​கிருந்​தவர்​கள்மீட்​டு, கடலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். சாரு​ம​தி, நிமிலேஷ் உடல்​களை போலீ​ஸார் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக கடலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

    தகவலறிந்து அரசு மருத்​து​வ​மனை​யில் பள்ளி மாணவர்​களின் பெற்​றோர் மற்​றும் உறவினர்​கள் குவிந்து கதறி அழுதனர். இதற்கிடையே, மேல்​சிகிக்​சைக்​காக புதுச்​சேரி ஜிப்​மர் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்ட செழியன், அங்கு உயிரிழந்தார். விபத்து காரண​மாக விழுப்​புரம்​ மயி​லாடு​துறை பயணி​கள் ரயில் ஆலபாக்​கத்​தில் 4 மணி நேரம் நிறுத்​தப்​பட்​டது.

    அந்த மார்க்​கத்​தில் செல்​லும் திருச்​சி – தாம்​பரம் வாராந்​திர ரயில் சிதம்​பரம் ரயில் நிலை​யத்​தில் நிறுத்​தப்​பட்​டது. சேதமடைந்தமின் பாதை மற்​றும் ரயில் பாதைகள் சரி செய்​யப்​பட்ட பின்​னர், அந்த தடத்​தில் ரயில்​கள் இயக்​கப்​பட்​டன. இந்​நிலையில், கடலூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​வோரை அமைச்​சர் சி.வெ. கணேசன் சந்​தித்து ஆறுதல் கூறினார். மேலும், உயி​ரிழந்த மாணவர்​களின் உடல்​களுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார்.

    ரூ.5 லட்​சம் நிவாரணம்: விபத்​தில் உயி​ரிழந்த மாணவர்​களின் குடும்​பத்​துக்கு ஆறு​தல் தெரி​வித்​துள்ள முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.5 லட்​சம், பலத்த காயமடைந்​தவர்​களுக்கு ரூ.1 லட்​சம், லேசான காயமடைந்​தவர்​களுக்கு ரூ.50 ஆயிரம் நிவா​ராணம் வழங்​கப்​படும் என அறி​வித்​துள்​ளார்.

    கேட் கீப்​பர் கைது: அப்​பகுதி மக்​கள் கூறும்​போது, “ரயிவேல் கேட் மூடா​மல் இருந்​ததால் விபத்து நேரிட்டது. கேட் கீப்​பர் சரி​யான நேரத்​தில் கேட்டை மூடி​யிருந்​தால் இந்த விபத்தை தவிர்த்​திருக்​கலாம். இந்த ரயிலுக்கு முன்பு செல்​லும் திருச்செந்​தூர் எக்​ஸ்​பிரஸ் ரயில் சென்​ற​போதும் ரயில்வே கேட் திறந்​திருந்​தது” என்​றனர். இதற்​கிடையே, கேட் கீப்​ப​ரான உத்தர பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த பங்​கத் சர்​மாவை (32) பணி​யிடை நீக்​கம் செய்து தெற்கு ரயில்வே உத்​தர​விட்​டது. பின்​னர் அவரை போலீ​ஸார் கைது செய்தனர்.

    கடலுார் அரசு மருத்துவமனையின் முன்

    கதறி அழும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்.

    தெற்கு ரயில்வே விளக்​கம்: தெற்கு ரயில்வே சார்​பில் வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில், “முதல்​கட்ட விசா​ரணை​யில், வேன் வந்​த​போது கேட் மூடப்​பட்​டிருந்​ததும், வேன் ஓட்​டுநர் வலி​யுறுத்​தி​ய​தால் கேட் கீப்​பர் ரயில்வே கேட்டை திறந்​ததும் தெரிய​வந்​துள்​ளது. அவரைப் பணியி​லிருந்து நீக்​கு​வதற்​கான நடவடிக்​கைகள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. லெவல் கிராசிங் பகு​தி​யில் முழு ரயில்வே நிதி​யுத​வி​யுடன் சுரங்​கப் பாதை அமைக்க அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது.

    ஆனால், கடந்த ஓராண்​டாக மாவட்ட ஆட்​சி​யர் அனு​மதி வழங்​க​வில்​லை. இந்த துர​திரு​ஷ்ட​வசமான சம்​பவத்​துக்கு மன்​னிப்பு கேட்​டுக்​கொள்​கிறோம். விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் குடு​ம்​பத்​துக்கு தலா ரூ.5 லட்​சம், பலத்த காயமடைந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ரூ.2.5 லட்​சம், மற்​றவர்​களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்​கப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

    ஆளுநர், துணை முதல்வர், தலை​வர்​கள் இரங்கல்: மாணவர்​கள் உயி​ரிழப்​புக்கு ஆளுநர், துணை முதல்​வர் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

    ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: பள்ளி வேன் மீது ரயில் மோதி​ய​தில் அப்​பாவிக் குழந்​தைகள் உயி​ரிழந்​தது வேதனை அளிக்​கிறது. அவர்​களது குடும்​பங்​களுக்கு நெஞ்​சார்ந்த இரங்​கல். காயமடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய வேண்​டிக் கொள்​கிறேன்.

    துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: பள்​ளிக் குழந்​தைகளின் உயி​ரிழப்பு வேதனையைத் தரு​கிறது. விபத்​தில் பிள்​ளை​களை இழந்து தவிக்​கும் பெற்​றோருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

    அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: பள்ளி மாணவர்​கள் உயி​ரிழந்​துள்ள செய்தி அதிர்ச்சி தரு​கிறது. உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தா​ருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

    தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: ஈடு​கட்ட முடி​யாத இந்த பேரிழப்​பில் இருந்து மீண்​டு​வர, பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு இறைவன் துணை நிற்​கட்​டும்.

    இதே​போல, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், பாமக தலை​வர் அன்​புமணி, திக தலை​வர் கி.வீரமணி, தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னையில் பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம்: மாதிரி வடிவமைப்பை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்

    July 9, 2025
    மாநிலம்

    ஹஜ் பயணத்துக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

    July 9, 2025
    மாநிலம்

    தேர்தல் படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன்: பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் திட்டவட்டம்

    July 9, 2025
    மாநிலம்

    ராமதாஸ் நடத்திய கூட்டம் சட்டவிதிகளுக்கு முரணானது: அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

    July 9, 2025
    மாநிலம்

    தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி: கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி

    July 9, 2025
    மாநிலம்

    மருந்து ஆய்வாளர் காலி பணியிடங்களை அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்: மும்பை பட்டயக் கணக்காளர் தற்கொலை
    • சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: ‘பன் பட்டர் ஜாம்’ இயக்குநர் உருக்கம்
    • சென்னையில் பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம்: மாதிரி வடிவமைப்பை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்
    • உணவுக்குப் பிறகு ‘ச un ன்ஃப்-மிஷ்ரி’ ஐ மெல்லுவது ஏன் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மர்மமான பொருள் சனியில் மோதியிருக்கலாம், வானியலாளர்கள் இன்னும் துப்புகளைத் தேடுகிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.