Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கடலூரில் தொடர் கனமழை: குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் விளைநிலங்கள் சேதம்
    மாநிலம்

    கடலூரில் தொடர் கனமழை: குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் விளைநிலங்கள் சேதம்

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடலூரில் தொடர் கனமழை: குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் விளைநிலங்கள் சேதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, வேப்பூர், பண்ருட்டி, அண்ணாமலைநகர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழை தண்ணீர் ஆறு போல ஓடியது, தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் கூடலையாத்தூர், முடிகண்டநல்லூர்,கானூர், பேரூர், காவாலகுடி, மழவராயநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறுவை பருவ நெல் நடவு செய்யப்பட்ட வயல்கள் சுமார் 250 ஏக்கர் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் சரியான வடிகால் வசதி இல்லாததால் மழை தண்ணீர் வடியாமல் விளைநிலங்கள் மூழ்கியுள்ளன.

    கடன் வாங்கி போர்வெல்லில் குறுவை விவசாயம் செய்துள்ளோம். தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

    மாவட்டத்தில் மழையளவு: அண்ணாமலை நகரில் 117 மிமீ, லால்பேட்டையில் 107 மிமீ, வேப்பூரில் 107 மிமீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 89.1 மிமீ, சிதம்பரத்தில் 85.8 மிமீ, விருத்தாசலத்தில் 76 மிமீ, காட்டுமன்னார்கோவிலில் 75.4 மிமீ, புவனகிரியில் 59 மிமீ, பரங்கிப்பேட்டடையில் 55.4 மிமீ, சேத்தியாத்தோப்பில் 54 மிமீ, கடலூரில் 40 மிமீ, பண்ருட்டியில் 36 மிமீ, குறிஞ்சிப்பாடியில் 27 மிமீ மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்பக்காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் இந்த மழை மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திண்டுக்கல் சீனிவாசனுக்காக ஓரங்கட்டப்படுகிறாரா நத்தம் விசுவநாதன்..?

    September 24, 2025
    மாநிலம்

    881 கவுரவ விரிவுரையாளர்களுக்கு தற்காலிக பணி; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் கோவி.செழியன்

    September 24, 2025
    மாநிலம்

    இருக்கன்குடி மாரியம்மன் கோயில் விவகாரம்: அரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

    September 24, 2025
    மாநிலம்

    மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை: ஜாய் கிரிசில்டா ஐகோர்ட்டில் தகவல்

    September 24, 2025
    மாநிலம்

    சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

    September 24, 2025
    மாநிலம்

    உபரி வருவாய் ஈட்டுவதில் குஜராத், உ.பி.யை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்: தமிழக பாஜக

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சரியான அளவு தண்ணீரை குடிப்பது பக்கவாதம் மற்றும் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திண்டுக்கல் சீனிவாசனுக்காக ஓரங்கட்டப்படுகிறாரா நத்தம் விசுவநாதன்..?
    • கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு மற்றும் எடை மேலாண்மைக்கு பாதாம் பால்; அதன் ஆரோக்கிய நன்மைகளைக் கண்டறியவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாட்ஸ்அப் மெசேஜ்களை துரிதமாக மொழிபெயர்க்கும் அம்சம்: பயன்படுத்துவது எப்படி?
    • 881 கவுரவ விரிவுரையாளர்களுக்கு தற்காலிக பணி; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் கோவி.செழியன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.