Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கடந்த 6 ஆண்டுகளாக வேட்பாளர்களை நிறுத்தாத காரணத்தால் மமக, கொமதேக உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவு ரத்து
    மாநிலம்

    கடந்த 6 ஆண்டுகளாக வேட்பாளர்களை நிறுத்தாத காரணத்தால் மமக, கொமதேக உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவு ரத்து

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடந்த 6 ஆண்டுகளாக வேட்பாளர்களை நிறுத்தாத காரணத்தால் மமக, கொமதேக உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவு ரத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக வேட்​பாளர்​களை நிறுத்​தாத மமக, கொமதேக உள்​ளிட்ட 42 அரசி​யல் கட்​சிகளின் பதிவை இந்​திய தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது.

    மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டம் 1951, பிரிவு 29–ன்​கீழ் தேர்​தல் ஆணை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட ஒரு கட்​சி, வரு​மானவரி விலக்​கு, பொதுதேர்​தல் சின்​னங்​கள் ஒதுக்​கீட்​டில் முன்​னுரிமை, சின்​னங்​கள் ஒதுக்​கீடு, நட்​சத்​திர பிரச்​சார நியமனம் ஆகிய சலுகைகளை பெற முடி​யும். பதிவு செய்​யப்​பட்ட கட்​சி​யானது மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டபடி தேர்​தல் ஆணை​யத்​தால் நடத்​தப்​படும் தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்த வேண்​டும். பல கட்​சிகள், தேர்​தல்ஆணை​யத்​தால் நடத்தப்​படும்பொதுத்தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தாதது தேர்​தல் ஆணை​யத்​தின் கவனத்​துக்கு வந்​தது.

    இக்​கட்​சிகள் தேர்​தலில் போட்​டி​யி​டா​மல், பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகளுக்கு வழங்​கப்​படும் வரு​மானவரி விலக்கு உள்​ளிட்ட சலுகைகளை மட்​டும் அனுப​வித்து வரு​வது தெரிய​வந்​தது. பல கட்​சிகள், பதிவு செய்த முகவரி​யில் கட்சி அலு​வல​கம் கூட வைக்​காமல் செயல்​பட்டு வந்​த​தாக கூறப்​படு​கிறது. மேலும் இக்​கட்​சிகள் ஆண்டு வரவு, செலவு கணக்​கை​யும் தேர்​தல் ஆணை​யத்​தில் தாக்​கல் செய்​ய​வில்லை என கூறப்​படு​கிறது.

    இந்​நிலை​யில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்​டு​கள் தேர்​தலில் போட்​டி​யி​டாத, பதிவு செய்​யப்​பட்ட, அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்​தல் ஆணை​யம் முடிவு செய்​திருந்​தது. அதனைத் தொடர்ந்​து,தொடர்ந்து 6 ஆண்​டு​களாக பொதுத்​தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தாத பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகளை கண்​டறிந்​து, அவற்​றிடம் உரிய விளக்​கம் கேட்​டு, அது தொடர்​பான அறிக்​கையை தேர்​தல் ஆணை​யத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும் என்று அனைத்து மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​களுக்​கும் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டிருந்​தது.

    அதன்​படி நாடு முழு​வதும் கடந்த 6 ஆண்​டு​களாக தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தாக 474 கட்​சிகள் அடை​யாளம் காணப்​பட்​டு, ஏன் இந்த கட்​சிகளின் பதிவை ரத்து செய்​யக்​கூ​டாது என மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​கள், மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் மூல​மாக விளக்​கம் கேட்​டிருந்​தனர். அந்த விளக்​கங்​களை பரிசீலித்து அவர்​கள் தலைமை தேர்​தல் ஆணை​யத்​துக்கு அறிக்கை தாக்​கல் செய்​திருந்​தனர். அதனடிப்​படை​யில் நாடு முழு​வதும் 474 பதிவு செய்​யப்​பட்ட, அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​சிகளின் பதிவை தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது. இதன்​படி, தமிழகத்​தில் மட்​டும் 42 கட்​சிகளின் பதிவு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

    இதில், எம்​எல்ஏ ஜவாஹிருல்லா தலை​வ​ராக உள்ள மனிதநேய மக்​கள் கட்​சி, எம்​எல்ஏ ஈ.ஆர்​.ஈஸ்​வரனின் கொங்​கு​நாடு மக்​கள் தேசிய கட்​சி, என்​.ஆர்​.தன​பாலனின் பெருந்​தலை​வர் மக்​கள் கட்​சி, ஜான் பாண்​டியனின் தமிழக மக்​கள் முன்​னேற்ற கழகம், தமி​முன் அன்​சா​ரி​யின் மக்​கள் ஜனநாயக கட்​சி, எர்​ணாவூர் நாராயணனின் சமத்​துவ மக்​கள் கழகம், ஸ்ரீதர் வாண்​டை​யாரின் மூவேந்​தர் முன்​னேற்​றக் கழகம் உள்​ளிட்ட கட்​சிகள் இடம்​பெற்​றன. இதில் ஜவாஹிருல்​லா, ஈ.ஆர்​.ஈஸ்​வரன் ஆகியோர் தொடர்ந்து தி​முக சின்​னத்​தில் போட்​டி​யிட்​டு வெற்​றி​பெற்​று வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    சுரண்டை அருகே குளத்தில் தண்ணீர் எடுக்கும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

    September 21, 2025
    மாநிலம்

    தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளங்கள்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

    September 21, 2025
    மாநிலம்

    “நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் கட்சியின் தலைவன்” – திமுகவுக்கு விஜய் பகிரங்க சவால்

    September 21, 2025
    மாநிலம்

    அக்.1 முதல் நயினார் நாகேந்திரன் யாத்திரை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு

    September 20, 2025
    மாநிலம்

    சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு – கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்
    • புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து
    • பார்வையற்ற யாசகரால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது: கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு
    • ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்
    • சுரண்டை அருகே குளத்தில் தண்ணீர் எடுக்கும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.