Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கடத்தூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அத்துமீறும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    மாநிலம்

    கடத்தூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அத்துமீறும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    adminBy adminSeptember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடத்தூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அத்துமீறும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அரூர்: கடத்தூரில் மாணவிகளுக்கு தொல்லை தரும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். இது தவிர கடத்தூரில் இருந்து தருமபுரி, சேலம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயில என தினசரி நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தூர் வழியாக செல்கின்றனர். இவர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி வரும் இளைஞர்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ரவீந்திரன் மற்றும் பெற்றோர் சிலர் கூறியதாவது: “கடத்தூர் பகுதியில் காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் மாணவிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் இளைஞர்களின் அட்டகாசமும் அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் ஹார்ன் அடித்தபடி மிக வேகமாக செல்வது, மாணவிகளை செல்போனில் போட்டோ எடுப்பது, ஆபாசமாக பேசுவது, மாணவிகளை கிண்டல் செய்தபடி பின் தொடர்வது, பேருந்துக்காக காத்திருப்போரிடம் கேலி, கிண்டல் செய்வது என இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.

    இதனை கண்காணித்து அத்துமீறும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தூரில் காவல் நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திருந்தும் இளைஞர்கள் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, போலீஸார் கண்காணிப்பை அதிகரித்து மாணவிகள் சுதந்திரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி நேரங்களில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் சாலையை கடந்து சென்று வர மாணவிகள் சிரமப்படுகின்றனர். பள்ளி நேரங்களில் பாதுகாப்பாக சாலையை கடக்க போக்கு

    வரத்தை சரி செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சசிகுமாரை காவு வாங்கிய கல்குவாரி உரிமைப் பிரச்சினை… – சங்கிலிக்கரடை சுரண்டிக் கொழிக்கும் அரசியல்வாதிகள்!

    September 3, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

    September 3, 2025
    மாநிலம்

    மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    September 3, 2025
    மாநிலம்

    சுற்றுலா திட்டம் செயல்படுத்தவே கச்சத்தீவில் ஆய்வு: இலங்கை அரசு தகவல்

    September 3, 2025
    மாநிலம்

    பிளஸ் 2 தேர்வுக்கான புதிய மையங்கள்: பரிந்துரைகளை சமர்ப்பிக்க தேர்வுத் துறை செப்.15 வரை அவகாசம்

    September 3, 2025
    மாநிலம்

    அக்னிதீர்த்த கடல் பகுதியில் பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சசிகுமாரை காவு வாங்கிய கல்குவாரி உரிமைப் பிரச்சினை… – சங்கிலிக்கரடை சுரண்டிக் கொழிக்கும் அரசியல்வாதிகள்!
    • இயற்கையாகவே வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை எவ்வாறு அகற்றுவது: வல்லுநர்கள் காரணங்கள், தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
    • இதய ஆரோக்கியத்திலிருந்து நீரிழிவு ஆபத்து வரை: ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி கழுத்து அளவு வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.