Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் இன்று மதியம் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜராவதற்காக வழக்கு விசாரணை 45 நிமிடங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.

    காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது.

    இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன் இன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார்.

    காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,இந்த சம்பவத்தில் காவல்துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்புள்ளதாகவும் பணம் சம்பந்தப் பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி , பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் மதியம் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜராவதற்காக வழக்கு விசாரணை 45 நிமிடங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக பேச திமுகவினருக்கு ‘தடை’ – மா.செ அறிக்கையால் சலசலப்பு

    August 5, 2025
    மாநிலம்

    கவின் கொலை விவகாரம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை

    August 5, 2025
    மாநிலம்

    தாராபுரம் வழக்கறிஞர் கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரணை அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    August 5, 2025
    மாநிலம்

    பலமான கூட்டணியை அமைக்க முடியாமல் தடுமாறுகிறதா அதிமுக?

    August 5, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் இரண்டாவது உலகத் திரைப்படத் திருவிழா: 3 நாட்கள் இலவசமாக பார்க்கலாம்

    August 5, 2025
    மாநிலம்

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாவுக்கு வர்த்தக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு
    • ‘பராசக்தி’யில் நடிக்க முடியாமல் போனது ஏன்? – லோகேஷ் கனகராஜ் விளக்கம்
    • சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக பேச திமுகவினருக்கு ‘தடை’ – மா.செ அறிக்கையால் சலசலப்பு
    • காலை உணவு நேரம் உங்கள் எடை இழப்பு முயற்சிகளை எவ்வாறு உருவாக்கலாம் அல்லது உடைக்க முடியும், வல்லுநர்கள் வெளிப்படுத்துகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரதமர் மோடியுடன் பிலிப்பைன்ஸ் அதிபர் சந்திப்பு – இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.