ராமேசுவரம்: கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் கச்சத்தீவு உரிமை தொடர்பாக நடிகர் விஜய் கூறிய கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஜித ஹேரத், “கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தற்போது தென்இந்தியாவில் தேர்தல் காலம் என்பதால், அரசியல் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.
இந்தப் பிரச்சினை ஏற்கெனவே பலமுறை தேர்தல் மேடைகளில் பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வந்த ஒன்று தான். மேலும், இதுபோன்ற அரசியல் கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டிய தேவைஇல்லை” என்றார்.