Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை: ‘ஓடிபி’ தடையை விலக்க கோரிய மனு இன்று விசாரணை
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை: ‘ஓடிபி’ தடையை விலக்க கோரிய மனு இன்று விசாரணை

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை: ‘ஓடிபி’ தடையை விலக்க கோரிய மனு இன்று விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை/சென்னை: திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது, ‘ஓடிபி’ (ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பெற விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி, திமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் டி.அதிகரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி எண் பெற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்த தடையை விலக்கக் கோரி, மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி ‘ஓரணியில் தமிழ்நாடு’ பொறுப்பாளர் வினோத், உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். அதில், ‘‘திமுக நடத்திவரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் வாக்காளர்களின் ஆதார் எண் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

    போலி வாக்காளர் சேர்ப்பை தவிர்க்கவும், வாக்காளரின் செல்போன் எண்ணை உறுதிப்படுத்தவும் ஓடிபி எண் அனுப்பப்படுகிறது. இந்த ஓடிபியும் திமுக தளத்துக்குள் நுழைவதற்கு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. மனுதாரர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர். திமுக மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கு தனி செயலி பயன்படுத்தப்படுகிறது. அதில் வாக்காளர்கள் அவர்களாக அளிக்கும் தகவல்களை தவிர வேறு எந்த விவரங்களும் பெறப்படுவ தில்லை. யாரிடமும் தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் கோருவதில்லை.

    இதை ஏற்பவர்களுக்கு மட்டுமே ஓடிபி அனுப்பப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் தரவு அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் தனியுரிமை மீறல் மற்றும் தரவு மீறல் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஓடிபி எண் பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    ஆர்.எஸ்.பாரதி அறிக்கை: இதற்கிடையே திமுக நிர்வாகிகளுக்கு அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது. மேலும் ‘ஓடிபி’ மட்டும் கேட்காமல் உறுப்பினர் சேர்க்கையை மேற் கொள்ள அனுமதித்துள்ளது.

    அதன்படி ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை அனைவரும் ‘அப்டேட்’ செய்ய வேண்டும். ‘ஓடிபி’ கேட்கும் முறை தற்போது இல்லை. செல்போன் எண் கட்டாயம். தற்போது ஒரு குடும்பத்துக்கு ஒரு போன் எண்ணில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களைச் சேர்க்கலாம். வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கும் அனைத்து செல்போன் எண்களையும் பெற்றுக் கொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘தனிநபர் வருமானம் அதிமுக ஆட்சியை காட்டிலும் இருமடங்கு வளர்ச்சி’ – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    July 23, 2025
    மாநிலம்

    பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

    July 23, 2025
    மாநிலம்

    நல்ல திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் இடமாறுதல் செய்யப்படுவது உண்டு: நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து

    July 23, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத திமுக தேர்தல் வாக்குறுதி: போக்குவரத்து ஓய்வூதியர்கள் தர்ணா

    July 23, 2025
    மாநிலம்

    சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விவகாரம்: ஏடிஜிபி ஜெயராம் நாளை ஆஜராக சம்மன்

    July 23, 2025
    மாநிலம்

    கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி பாட​வேளையை கடன் வாங்காதீர்கள்: உதயநிதி வேண்டுகோள்

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கருப்பன் வரான் வழி மறிக்காதே…’ – சூர்யாவின் ‘கருப்பு’ டீசர் எப்படி?
    • ‘தனிநபர் வருமானம் அதிமுக ஆட்சியை காட்டிலும் இருமடங்கு வளர்ச்சி’ – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    • ஒரு செல்லப்பிள்ளை வெள்ளெலி பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
    • 3-வது நாளாக தொடரும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
    • ராமேசுவரம் கோயிலில் ரூ.1.14 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.