Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஓடிபி பெற்று திமுக நடத்திய உறுப்பினர் சேர்க்கைக்கு விதித்த தடையை நீக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
    மாநிலம்

    ஓடிபி பெற்று திமுக நடத்திய உறுப்பினர் சேர்க்கைக்கு விதித்த தடையை நீக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

    adminBy adminAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஓடிபி பெற்று திமுக நடத்திய உறுப்பினர் சேர்க்கைக்கு விதித்த தடையை நீக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஓடிபி எண்​ணைப் பயன்​படுத்தி ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்​கைக்கு உயர் நீதி​மன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்​கக்​கோரி திமுக தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்துள்​ளது.

    தமிழகம் முழு​வதும் திமுக​வினர் நடத்​தும் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற உறுப்​பினர் சேர்க்கை முகாமின்​போது பொதுமக்களிடமிருந்து ஆதார் உள்​ளிட்ட விவரங்​கள் மூல​மாக ‘ஓடிபி’ எண்​ணைப் பெறக்​கூ​டாது என உயர் நீதி​மன்ற மதுரை கிளை இடைக்​காலத்​தடை விதித்து உத்​தர​விட்​டிருந்​தது.

    இதை எதிர்த்து திமுக வழக்​கறிஞர் அனு​ராதா அற்​புதம் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனு: ஓரணியில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்கை முகாமின்​போது உண்​மைத்​தன்​மையை உறுதி செய்​யவே ஓடிபி பெறப்​படு்கிறது. பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை மனதில் கொண்டு பொது​மக்​களுக்கு திமுக தொல்லை அளித்து வரு​வ​தாகக்​கூறி இது​போன்ற தடைகளை ஏற்​படுத்தி வரு​கிறது.

    திமுக​வில் சேர விருப்​பம் தெரிவிக்​கும் நபர்​களிடம் மட்​டுமே ஓடிபி எண் பெறப்​பட்டு விவரங்​கள் உறுதி செய்​யப்​படு​கின்​றன. இவற்றை கருத்​தில் கொள்​ளாமல் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யும் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது. ஓரணி​யில் தமிழ்​நாடு மூல​மாக உறுப்​பினர் சேர்க்கை என்​பது அது​வும் ஒரு​வகை​யில் வாக்​காளர் சேர்க்​கைக்​கான விழிப்​புணர்வு நடவடிக்​கையே.

    கடந்த ஒரு​மாத​மாக நடத்​தப்​பட்ட உறுப்​பினர் சேர்க்கை முகாம் மூல​மாக இது​வரை 1.7 கோடி பேர் திமுக​வில் உறுப்​பினர்​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். தற்​போது உயர் நீதி​மன்​றத்​தின் ஓடிபி தடை உத்​தர​வால் திமுக​வின் உறுப்​பினர் சேர்க்​கை​யில் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. எனவே இந்த தடையை நீக்க வேண்​டும். இவ்​வாறு கோரி​யிருந்​தார்.இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.எஸ். நரசிம்​மா, ஏ.எஸ்​.சந்​துகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

    அப்​போது திமுக சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன், பாஜக, ஆம் ஆத்மி போன்ற கட்​சிகளைப் போலவே திமுக​வும் தமிழகம் முழு​வதும் ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்கை முகாம்​களை நடத்தி வரு​கிறது. ஆதார் எண்​களைப் கேட்டு பெற​வில்​லை. அரசி​யல் உள்​நோக்​கத்​துடன் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு​வில் கோரப்​ப​டாத தடையை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்​துள்​ளது என்​றார்.

    இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் வழக்கு தொடர்ந்த ராஜ்கு​மார் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பாலாஜி சீனிவாசன், இந்த வழக்கு உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் ஆக.5 அன்று மீண்​டும் விசா​ரணைக்கு வரவுள்​ளது என்​றார். அதையடுத்து நீதிப​தி​கள், தற்​போதைய நிலை​யில் இந்த விவ​காரத்​தில் தலை​யிடு​வது பொருத்​த​மாக இருக்​காது என்​ப​தால் இடைக்​காலத் தடையை நீக்க முடி​யாது எனக்​கூறி தி​முக​வின் மேல்​முறை​யீட்டு மனுவை தள்​ளு​படி செய்​துள்​ளனர். மேலும். இதுதொடர்​பாக உயர்​ நீதி​மன்​ற மதுரை கிளை​யை நாட​வும்​ அறி​வுறுத்​தியுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​ கூட கட்டவில்லை என்பதா? – அன்​புமணிக்கு அமைச்​சர் துரை​முரு​கன் பதில்

    August 5, 2025
    மாநிலம்

    ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

    August 5, 2025
    மாநிலம்

    ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடக்கும் சொத்து பதிவு குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம்

    August 5, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்கள் தற்போதுள்ள பெயர்களிலேயே தொடர அனுமதி கோரி தமிழக அரசு மனு

    August 5, 2025
    மாநிலம்

    புதிய டிஜிபியை தேர்வு செய்வதில் இழுபறி: தேர்வு பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பாததால் தொடரும் குழப்பம்

    August 5, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது: நீதிபதி வேதனை 

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மகேந்திரன் கதாசிரியராக அறிமுகமான ‘நாம் மூவர்’!
    • பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​ கூட கட்டவில்லை என்பதா? – அன்​புமணிக்கு அமைச்​சர் துரை​முரு​கன் பதில்
    • கடலலை மேல் கால் நூற்றாண்டு
    • ரயில் பாதைகளை கடந்தபோது 186 யானைகள் அடிபட்டு உயிரிழப்பு
    • ‘சினிமா பயணம் எனக்கு எளிதாக இல்லை’ – அஜித்குமார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.