Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..! – சரத்குமாரை தூண்டிவிட்டு பாண்டியராஜனுக்கு பள்ளம் பறிக்கிறாரா பாலாஜி?
    மாநிலம்

    ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..! – சரத்குமாரை தூண்டிவிட்டு பாண்டியராஜனுக்கு பள்ளம் பறிக்கிறாரா பாலாஜி?

    adminBy adminSeptember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..! – சரத்குமாரை தூண்டிவிட்டு பாண்டியராஜனுக்கு பள்ளம் பறிக்கிறாரா பாலாஜி?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜியோ, “விருதுநகரை கேட்டு வாங்குங்கள்; உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன்” என்று பாஜக-வில் இருக்கும் நடிகர் சரத்குமாரை கொம்பு சீவுவதாகச் சொல்கிறார்கள்.

    ​

    விருதுநகர் மேற்கு மாவட்ட அதி​முக எல்​லைக்​குள் உள்ள விருதுநகர் தொகு​தி​யில் மாஃபா பாண்​டிய​ராஜனும், ராஜ​பாளை​யம் தொகு​தி​யில் பாஜக சார்​பில், முன்​னாள் அதி​முக எம்​எல்​ஏ-​வான கோபால்​சாமி​யும் போட்​டி​யிட ஆயத்​த​மாகி வரு​கி​றார்​கள். இவர்​கள் இரு​வரை​யுமே தனக்கு ஆகாது என்​ப​தால் ஒரே கல்​லில் ரெண்டு மாங்​காய் அடிக்க ஆயத்​த​மாகி வரு​கி​றார் ராஜேந்​திர பாலாஜி.

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட அதி​முக மூத்த நிர்​வாகி​கள் சிலர், “மாஃபா பாண்​டிய​ராஜன் சென்​னையை விட்​டு​விட்டு மீண்​டும் விருதுநகர் அரசி​யலுக்கு திரும்​பியது ராஜேந்​திர பாலாஜிக்கு பிடிக்​கவே இல்​லை. அதனால் அவருக்கு எதி​ராக பொது​வெளி​யிலேயே வார்த்தைகளில் மறை​முக​மாக வெடித்​தார் பாலாஜி. இது தொடர்​பாக கட்​சித் தலைமை அவரை அழைத்து கண்​டித்​ததும், ‘நான் பாண்​டிய​ராஜனைக் குறிப்​பிட்​டுப் பேச​வில்​லை’ என மறுத்​தார். பாலாஜி இப்​படி மிரட்​டல் தொனி​யில் பேசி​யது பாண்​டிய​ராஜனுக்கு தொழில் ரீதி​யாக​வும் சில சங்கடங்களை ஏற்​படுத்​தி​யது.

    இந்த நிலை​யில், கீழடி அகழாய்வு அறிக்கை திருப்பி அனுப்​பப்பட்ட விவ​காரத்தில் அதி​முக-வை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது. அதற்கு, அதிமுக ஆட்​சியில் தொல்​லியல் துறையை கையில் வைத்​திருந்த பாண்​டிய​ராஜன் மூலம் பதிலடி கொடுத்தார் இபிஎஸ். திமுக-வின் கேள்விகளுக்கு புள்ளி விவரத்​துடன் பாண்​டிய​ராஜன் அளித்த பதி​லும், அவர் எழுப்பிய எதிர் கேள்வி​களும் திமுக-​வினரின் வாயை அடைத்தது. இந்த நிலை​யில், அண்​மையில் விருதுநகர் மாவட்​டத்​துக்கு இபிஎஸ் பிரச்​சாரப் பயணம் வந்த போது பாண்​டிய​ராஜன் கலந்​து​கொள்​ள​வில்லை.

    பாண்​டிய​ராஜனைப் போலவே அதி​முக-வில் ராஜேந்திர பாலாஜியால் ஓரம்​கட்​டப்​பட்​டவர் கோபால்​சாமி. அதனால் பாஜக-வில் இணைந்து இப்போது மாநில துணைத் தலை​வராக இருக்​கி​றார். இவர் இம்முறை ராஜ​பாளை​யத்தில் போட்​டியிட தனது நண்பர் நயினார் மூலம் முயன்று வரு​கி​றார். இதையும் விரும்பாத பாலாஜி, ராஜ​பாளை​யத்​துக்குப் பதிலாக பாஜக-வுக்கு விருதுநகர் தொகுதியை ஒதுக்​கி​விட்டால் பாண்​டிய​ராஜன், கோபால்சாமி இரு​வ​ருக்குமே சீட் கிடைக்​காமல் செய்​து​விடலாம் என கணக்குப் போடு​கி​றார்.

    அதனால், மக்களவை தேர்​தலில் உங்கள் மனைவி ராதிகாவை விருதுநகரில் நிறுத்​தியது போல் இம்முறை விருதுநகர் சட்​டமன்றத் தொகு​தியில் நீங்களே போட்​டி​யிடுங்கள் என நடிகர் சரத்​கு​மாரிடம் பாலாஜி பேசிவ​ரு​வ​தாகச் சொல்​கி​றார்கள். ஆனால், விருதுநகரை பாண்​டிய​ராஜனுக்கும் ராஜபாளை​யத்தை கோபால்​சாமிக்கும் ஒதுக்​கா​விட்டால் இரண்டு தொகு​தி​களையுமே திமுக கூட்டணி தான் கைப்​பற்றும் என்பதே கள நில​வரம்” என்​றனர்.

    இதனிடையே, பொது​வெளி​யில் ராஜேந்​திர பாலாஜி மீண்​டும் தன்னை அவமானப்​படுத்​தி​விடக் கூடாது என்​ப​தற்​காகவே மாஃபா பாண்​டிய​ராஜன் இபிஎஸ் பிரச்​சா​ரப் பயணத்​தில் கலந்​து​கொள்​ளாமல் நாகரி​க​மாக தவிர்த்​த​தாக​வும் ஒரு பேச்சு இருக்​கிறது.

    இது குறித்து மாஃபா பாண்​டிய​ராஜனிடம் கேட்​டதற்​கு, “எனது நிறு​வனத்​தின் அடுத்​தகட்ட செயல்​பாடு​கள் தொடர்​பாக மும்​பை​யில் முக்​கிய​மான பணி​யில் இருந்​த​தால் எடப்​பாடி​யா​ரின் பிரச்​சார பயணத்​தில் என்​னால் கலந்து கொள்ள முடிய​வில்​லை. இதுகுறித்து அவரிடம் முன்​கூட்​டியே தெரிவித்​து​விட்​டேன். அவரும் தொழிலைக் கவனிக்​கும்​படி அறி​வுரை சொன்​னார். ஓரிரு வாரங்​களில் விருதுநகர் திரும்​பியதும் வழக்​கம் போல் கட்சிப் பணி​களில் முழு​மூச்​சுடன் ஈடு​படு​வேன்” என்​றார்.

    இம்​முறை ராஜ​பாளை​யத்​தில் போட்​டி​யிடு​வது உறு​தி​தானே என பாஜக துணை தலை​வர் கோபால்​சாமி​யிடம் கேட்​டதற்​கு, “எங்​களுக்கு வெற்றி வாய்ப்​புள்ள தொகு​தி​களில் கூடு​தல் கவனம் செலுத்தி வரு​கி​றோம். ராஜ​பாளை​யத்​தில் நான் எம்​எல்​ஏ-​வாக இருந்​த​போது செய்​து​முடித்த பணி​கள் இன்​ன​மும் மக்​களிடையே பேசப்​படு​கிறது. கூட்​ட​ணி​யில் தொகுதி பங்​கீடு முடிந்த பிறகு, ராஜ​பாளை​யத்​தில் யார் போட்​டி​யிடு​வார் என்​பதும் முடிவாகும்” என்​றார்.

    மாஃபா பாண்​டிய​ராஜனும் கோபால்​சாமி​யும் தங்​களது கட்சி தலை​மை​கள் உத்​தர​வாதம் அளித்த பிறகே விருதுநகரிலும் ராஜ​பாளை​யத்​தி​லும் தேர்தல் பணி​களை தீவிரப்​படுத்தி வரு​கி​றார்​கள். அப்​படி இருக்​கை​யில், ராஜேந்​திர பாலாஜி​யின் ‘ரெண்டு மாங்​காய்’ திட்​டம் கைகூடுமா என்​பதை பொறுத்​திருந்து தான் பார்​க்க வேண்​டும்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆவின் பாலில் கலப்படம்: அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் உட்பட 28 பேர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து

    September 6, 2025
    மாநிலம்

    கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் கவுரவிப்பு

    September 6, 2025
    மாநிலம்

    ஏழைகளை மட்டும் நாய் கடிப்பது ஏன்? – மேனகா காந்தி கடும் குற்றச்சாட்டு

    September 6, 2025
    மாநிலம்

    வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்த நாள்: ஆளுநர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை

    September 6, 2025
    மாநிலம்

    செங்கோட்டையன் ‘வாய்ஸ்’ பின்னணியில் திமுக? – என்னமோ நடக்குது… மர்மமாய் இருக்குது..!

    September 6, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம் கட்ட கூடாது: நீதிமன்றம்

    September 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சமோசா வாங்கி வராத கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கிய மனைவி மீது வழக்கு
    • ‘மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான்’ – ட்ரம்ப் கருத்தும்; பிரதமரின் சூசக பதிலும்!
    • ஆவின் பாலில் கலப்படம்: அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் உட்பட 28 பேர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து
    • 7 பொதுவான காண்டாக்ட் லென்ஸ் தவறுகள்: உங்கள் கண்களை கடுமையான சேதத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட வன்முறை’: கலஸ்தான் குழுக்கள் கனடாவிலிருந்து நிதியைப் பெறுகின்றன; அறிக்கை சிவப்புக் கொடிகளை உயர்த்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.