Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஒட்டுகேட்பு கருவி பொருத்திய விவகாரம்: தனியார் நிறுவன ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை – ராமதாஸ் தகவல்
    மாநிலம்

    ஒட்டுகேட்பு கருவி பொருத்திய விவகாரம்: தனியார் நிறுவன ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை – ராமதாஸ் தகவல்

    adminBy adminJuly 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒட்டுகேட்பு கருவி பொருத்திய விவகாரம்: தனியார் நிறுவன ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை – ராமதாஸ் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: வீட்​டில் ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்ட விவ​காரத்​தில், தனி​யார் நிறுவன ஆய்​வுக்​குப் பின்​னர், உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார்.

    கடலூர் மாவட்​டம் விருத்​தாசலத்​தில் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம் பேசிய நிறு​வனர் ராம​தாஸ், “தைலாபுரத்​தில் எனது வீட்​டில் எனது நாற்​காலிக்கு அருகே அதிநவீன ஒட்​டு​கேட்​புக் கருவி பொருத்​தப்​பட்​டுள்​ளது. லண்​டனில் இருந்து வாங்​கப்​பட்ட, விலை மதிப்​புமிக்க இக்​கரு​வியை 2 நாட்​களுக்கு முன்​பு​தான் கண்​டு​பிடித்​தோம். யார் வைத்​தது, எதற்​காக வைத்​தார்​கள் என ஆய்வு நடை​பெறுகிறது” என்​றார்.

    இந்​நிலை​யில், திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள ராம​தாஸ் இல்​லத்​தில், ஒட்​டு​கேட்பு கரு​வியை ஆய்வு செய்​தவற்​காக தனி​யார் நிறு​வனத்​தைச் சேர்ந்த 5 துப்​பறி​யும் நிபுணர்​கள் நேற்று வந்​தனர். இக்​குழு​வினர் 3 மணி நேரம் ஒட்​டு​கேட்பு கரு​வியை ஆய்வு செய்​தனர்.

    பின்​னர் ராம​தாஸ் கூறும்​போது, “என்னை சந்​திக்க பாட்​டாளி சொந்​தங்​கள் வந்து கொண்டே இருக்​கிறார்​கள். இதனால் நான் கூடு​தல் மகிழ்ச்​சி​யுடன் இருக்​கிறேன். எனது வீட்​டில் வைக்​கப்​பட்ட ஒட்​டு​கேட்​புக் கரு​வியை தனி​யார் நிறுவன துப்​பறி​யும் குழு​வினர் ஆய்வு செய்து வரு​கின்​றனர். அவர்​கள் அளிக்​கும் ஆய்வு அறிக்​கை​யின் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். தைலாபுரத்​துக்கு வந்து தாயை மகன் (அன்​புமணி) சந்​தித்​துள்​ளார். பாமக பொதுக்​குழு கூட்​டத்தை கூட்​டு​வதற்​கான காலம் இன்​னும்​ வரவில்​லை” என்​றார்​.

    சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள்: பாமக செய்​தித் தொடர்​பாளர் வழக்​கறிஞர் கே.​பாலு நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மூத்த அரசி​யல் தலை​வ​ரான ராம​தாஸ் வீட்​டில் ஒட்​டுக்​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டது உண்​மையெனில், அது கண்​டிக்​கத்​தக்​கது. இதன் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார், நோக்​கம் என்ன என்ற விவரங்​களை மக்​களுக்கு தெரிவிக்க வேண்​டியது அரசின் கடமை.

    எனவே, சைபர் பாது​காப்பு வல்​லுநர்​களை உள்​ளடக்​கிய உயர்​நிலைக் குழுவை அமைத்து விசா​ரித்​து, பின்​னணி​யில் உள்​ளவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    குறையாத வெயிலின் தாக்கம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

    July 13, 2025
    மாநிலம்

    சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாற்று பாலம்!

    July 13, 2025
    மாநிலம்

    ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ : 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்தார் இபிஎஸ்

    July 13, 2025
    மாநிலம்

    சென்னை மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோவில் பயணிக்க ஒரே பயணச்சீட்டு – விரைவில் செயலி அறிமுகம்

    July 13, 2025
    மாநிலம்

    ‘கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ – ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து

    July 13, 2025
    மாநிலம்

    ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குறையாத வெயிலின் தாக்கம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
    • உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் தவிர்க்க 10 உணவுகள் மற்றும் பானங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஒரு நேரத்தில் ஒரு பிஞ்ச்’: ஐ.சி.எம்.ஆர் இந்தியாவில் அதிக உப்பு உட்கொள்ளலை பெரிய சுகாதார அபாயமாகக் கொடியது; நகர்ப்புற நுகர்வு கிட்டத்தட்ட இரட்டிப்பாக யார் வரம்பில் | இந்தியா செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாற்று பாலம்!
    • வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களில் சமைப்பது பாதுகாப்பானதா? அதன் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.