Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை விரிவாக்கம்: திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம்
    மாநிலம்

    ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை விரிவாக்கம்: திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம்

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை விரிவாக்கம்: திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஒக்​கி​யம் மடுவு நீர்​வழிப் பாதை​யில் நடை​பெறும் விரி​வாக்​கப் பணி​களை ஆய்வு செய்த சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் எம்​.ஏ.சித்​திக், பணி​களை திட்​ட​மிட்ட காலத்​துக்கு முன்பே முடிக்க இலக்கு நிர்​ண​யித்​துள்​ள​தாக தெரி​வித்​தார்.

    கடந்த 2023-ல் ‘மிக்​சாம்’ புய​லால் ஏற்​பட்ட வெள்​ளத்தை அடுத்​து, அதிக மழைப்​பொழி​வைத் தாங்​கும் திறன் இல்​லாத நிலை​யில் ஒக்​கி​யம் மடுவு பாலம் இருந்​தது தெரிந்​தது. அதாவது இந்த நீர்​வழிப்​பாதை 90 மீட்​டர் அளவிலும், குறைந்த உயரம் கொண்​ட​தாக​வும் இருந்​தது.

    இதனைச் சரி செய்​யும் பொருட்டு தமிழக அரசு மற்​றும் நீர்​வளத் துறை​யுடன் கலந்​தாலோ​சித்த பிறகு, நீர்​வழிப்​பாதையை 205 மீட்​ட​ராக​வும், கூடு​தலாக 1.5 மீட்​டர் உயரத்தை அதி​கரிக்​க​வும் முடிவு செய்​தது. அதன்​படி, ஒக்​கி​யம் மடுவு பாலத்​தின் விரி​வாக்​கப் பணி​களை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் மேற்​கொண்டு வரு​கிறது. தற்​போது 90 மீட்​ட​ராக இருந்த நீர்​வழிப் பாதை, 120 மீட்​ட​ராக மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், இப்​பணி​கள் நிறைவு பெற்​றவுடன், பாலத்​தின் முழு அளவு 205 மீட்​ட​ராக இருக்​கும்.

    80 சதவீத பணி நிறைவு: பாலத்​தின் 3 நீர்​வழிப்​பாதைகளும் கட்டி முடிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, பாலத்​தின் மேல்​பக்க நீர்​வழிப்​பாதை முழு​மை​யாக சுத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் கீழ்ப்​புற நீர்​வழிப்​பாதை​யில் 80 சதவீதம் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. மீத​முள்ள பகு​தி​கள் செப்​. 8-ம் தேதி வாக்​கில் சுத்​தம் செய்​யப்​படும்.

    பாலம் அமைக்​கும் பணி​கள் இரு​புற​மும் நடை​பெறுகின்​றன. பாலம் கட்டி முடிக்​கப்​பட்​டதும், புதிய பாலம் பொது பயன்​பாட்​டுக்​காக தற்​போதைய சாலை​யுடன் இணைக்​கப்​படும். இந்​நிலை​யில் ஒக்​கி​யம் மடுவு நீர்​வழிப் பாதை​யில் நடை​பெறும் பணி​களை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் எம்​.ஏ.சித்​திக் ஆய்வு செய்​தார்.

    இந்த ஆய்​வின்​போது, திட்ட இயக்​குநர் தி.அர்ச்​சுனன், பொது மேலா​ளர் (வழித்​தடம்) செல்​வம் மற்​றும் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் உயர் அலு​வலர்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் உடனிருந்​தனர். ஆய்​வின்​போது, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் எம்​.ஏ.சித்​திக் கூறிய​தாவது:

    வெள்ள அபாயம் குறையும்: ஒக்​கி​யம் மடுவு நீர்​வழிப் பாதை திட்​ட​மிடப்​பட்ட காலத்​துக்கு முன்பே முடிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது இரவு பகலாகப் பணி நடை​பெற்று வரு​கிறது. பணி​கள் முடிந்​ததும், இந்த பாலம் நீரின் ஓட்​டத்தை குறிப்​பிடத்​தக்க வகை​யில் மேம்​படுத்​தும். மேலும் அரு​கிலுள்ள பகு​தி​களில் வெள்ள அபா​யத்​தைக் குறைத்​து, பள்​ளிக்​கரணை மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் வசிக்​கும் மக்​களுக்கு வெள்​ளப் பா​திப்​பு​களி​லிருந்து தீர்​வை அளிக்​கும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மின்வாரிய ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு

    September 3, 2025
    மாநிலம்

    386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார்

    September 3, 2025
    மாநிலம்

    தொழில்நுட்பக் கோளாறு: திருச்சி – சார்ஜா ஏர் இந்தியா விமானம் ரத்து; பயணிகள் அவதி

    September 3, 2025
    மாநிலம்

    மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

    September 3, 2025
    மாநிலம்

    முதன்முறையாக கச்சத்தீவுக்கு பயணம்: இலங்கை அதிபர் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

    September 3, 2025
    மாநிலம்

    ராமதாஸ் வெளியிட்ட பாமக புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் அன்புமணி புகைப்படம் புறக்கணிப்பு

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ’கட்டா குஸ்தி 2’ படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்
    • மின்வாரிய ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு
    • சிறந்த ஆக்ஸிஜன் ஓட்டத்திற்கு நடக்கும்போது முயற்சிக்க 5 சுவாச நுட்பங்கள்
    • அமெரிக்காவின் வரிவிதிப்பு உயர்வால் சுயசார்பு இந்தியா சபதம் ஏற்கும் பிரச்சாரத்தை தொடங்கும் பாஜக
    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.