Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும்: ரூ.1 லட்சம் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி
    மாநிலம்

    ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும்: ரூ.1 லட்சம் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி

    adminBy adminAugust 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும்: ரூ.1 லட்சம் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், பெ. அமுதா ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து ஜூலை 14 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.சத்தியகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முறையாக அரசாணை பிறப்பித்து அரசிதழில் வெளியிடாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது சட்டப்படி செல்லுபடியாகக் கூடியதல்ல; இதற்கு எந்த சட்ட பலமும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு சாதகமான தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளது. இது அரசியல் சாசன கொள்கைகளுக்கு விரோதமானது என்பதால், நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக் குறிப்பை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு முதல் முறையாக தமிழகத்தில் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை என்றும் அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த சட்டமும், விதிகளும் இல்லை எனக் கூறி வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் சந்திப்பு: கீழடி குறித்து கோரிக்கை

    August 7, 2025
    மாநிலம்

    உடுமலை சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் தந்தை, மகன் கைது: நீதிமன்றத்தில் ஆஜர்

    August 7, 2025
    மாநிலம்

    புதுவையில் நெசவுக் கூலி அகவிலைப்படியில் கூடுதலாக 20% உயர்வு: முதல்வர் ரங்கசாமி

    August 7, 2025
    மாநிலம்

    சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் பிடிபட்ட நபர் என்கவுன்ட்டர் ஏன்?- மாவட்ட எஸ்.பி விளக்கம்

    August 7, 2025
    மாநிலம்

    திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலையில் என்கவுன்ட்டர்: மதுரை இந்து மக்கள் கட்சி வரவேற்பு

    August 7, 2025
    மாநிலம்

    எம்.எஸ்.சுவாமிநாதன் வழியில் மாணவர்கள் சமூகப் பணியாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அமெரிக்காவின் இசைக்கு ஏற்ப பிரதமர் மோடி நடனமாடுகிறார்’ – தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
    • பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் சந்திப்பு: கீழடி குறித்து கோரிக்கை
    • முதல் முறை வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 வரை ஊக்கத் தொகை – மத்திய தொழிலாளர் ஆணையர் விளக்கம்
    • உங்கள் வீடு பூச்சி இல்லாதது என்று நினைக்கிறீர்களா? இந்த 5 தவறுகள் ரகசியமாக பிழைகளை அழைக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாக்காளர் மோசடி குற்றச்சாட்டு: சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.