Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வரும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு
    மாநிலம்

    ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வரும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு

    adminBy adminSeptember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வரும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை 6-வது ஆண்டாக நனவாக்கி வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 632 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

    நீட் தேர்வு வருவதற்கு முன்பு, தமிழகத்தில் ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். குறிப்பாக, 2014-15-ம் ஆண்டில் 38 பேரும், 2015-16-ம் ஆண்டில் 36 பேரும், 2016-17-ம் ஆண்டில் 34 அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒற்றை இலக்கமாக குறைந்தது: நீட் தேர்வுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது. 2017-18-ம் ஆண்டில் 3 பேரும், 2018-19-ம் ஆண்டில் 5 பேரும், 2019-20-ம் ஆண்டில் 6 பேரும், 2020-21-ம் ஆண்டில் 11 அரசு பள்ளி மாணவர்களால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது.

    நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்து, படிப்புக்கான முழு செலவையும் அரசு ஏற்பதாக அறிவித்தது.

    ஏழை மக்களிடம் வரவேற்பு: இத்திட்டம் ஏழை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பொறியியல், கால்நடை, ஆயுஷ், சட்டம், வேளாண் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. குறிப்பாக, நீட் தேர்வுக்கு முன்பு இருந்ததைவிட, அரசுப் பள்ளிகளில் படிக்கும் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்து டாக்டராகி வருகின்றனர். 2020-21-ம் ஆண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் 435 பேரும், 2021-22-ம் ஆண்டில் 555 பேரும், 2022-23-ம்ஆண்டில் 584 பேரும், 2023-24-ம் ஆண்டில் 625 பேரும், 2024-25-ம் ஆண்டில் 625 பேரும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

    நடப்பாண்டில் முதல் சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மேலும் 19 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறவுள்ளனர்.

    இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டில் மொத்தம் 632 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவுள்ளனர். 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மூலம் 6-வது ஆண்டாக கூலித்தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர், ஏழை விவசாயி போன்ற அடித்தட்டு சாமானியர்களின் பிள்ளைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாகி வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கடந்த 4 ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட 37 தமிழறிஞர்களின் நூல்கள்: அமைச்சர் பிடிஆர் தகவல்

    September 22, 2025
    மாநிலம்

    சிறந்த நிர்வாகத்துக்கு குடிமைப் பணியாளர்கள்தான் முதுகெலும்பு: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்

    September 22, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

    September 21, 2025
    மாநிலம்

    இதுவரை அதிகரித்த வரியை குறைத்த ஒரே அரசு பாஜக தான்: நயினார் நாகேந்திரன்

    September 21, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? – சு.வெங்கடேசன் கேள்வி

    September 21, 2025
    மாநிலம்

    ‘விஜய் அரசியலுக்கு வந்தார்; அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங் சென்றார்’ – தமிழிசை

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கடந்த 4 ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட 37 தமிழறிஞர்களின் நூல்கள்: அமைச்சர் பிடிஆர் தகவல்
    • சிறந்த நிர்வாகத்துக்கு குடிமைப் பணியாளர்கள்தான் முதுகெலும்பு: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்
    • 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பெயர் பட்டியலில் விவரங்களை சரிபார்க்க வேண்டும்: தேர்​வுத் ​துறை உத்​தர​வு
    • ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வரும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு
    • 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | IND vs PAK சூப்பர் 4

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.