Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஏஜி டிஎம்எஸ் உட்பட 3 மெட்ரோ நிலைய நுழைவு வாயிலில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரத்தை மாற்ற முடிவு
    மாநிலம்

    ஏஜி டிஎம்எஸ் உட்பட 3 மெட்ரோ நிலைய நுழைவு வாயிலில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரத்தை மாற்ற முடிவு

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏஜி டிஎம்எஸ் உட்பட 3 மெட்ரோ நிலைய நுழைவு வாயிலில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரத்தை மாற்ற முடிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது.

    இதன் ஒரு பகுதியாக, நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரங்களை, திறந்த முறையில் செயல்படும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியங்கி கட்டண நுழைவு வாயிலில் புதிய முறை சோதனை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. இதுபோல, மேலும், சில நிலையங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில், அனைத்து தானியங்கி கட்டண நுழைவு வாயில்களும் காலை 8 மணிமுதல் 11 மணிவரை மற்றும் மாலை 5 மணிமுதல் 8 மணிவரை திறந்த முறையில் (Normally Open) செயல்படுகின்றன. இது, நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணத்தை எளிதாக்கவும், பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கும் நேரத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

    இந்த முறையில், தானியங்கி கட்டண நுழைவு வாயில்களின் கதவுகள் திறந்த நிலையில் இருக்கும். இதனால் பயணிகள் விரைவாகக் கடந்து செல்ல முடியும். எனினும், பயணக் கட்டணத்தை சரிபார்ப்பை உறுதிசெய்யும் வகையில், பயணிகள் தங்கள் பயண அட்டை அல்லது க்யூஆர் பயணச்சீட்டை தானியங்கி கட்டண நுழைவு வாயில்களில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது பச்சை விளக்கு தெரியும். இதையடுத்து, பயணிகள் தானியங்கி கட்டண நுழைவு வாயிலை கடந்து செல்லலாம்.

    சிவப்பு விளக்கு தெரிந்தால் அல்லது எந்த பதிலும் கிடைக்காவிட்டால், பயணிகள் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் அல்லது பயணச்சீட்டு கவுன்ட்டர்களில் பயணச்சீட்டை சரிபார்க்க வேண்டும்.

    இதுபோல, ஏஜி டிஎம்எஸ், விமான நிலையம் மெட்ரோ, அரசினர் தோட்டம் மெட்ரோ ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த மாத இறுதிக்குள் தானியங்கி கட்டண நுழைவு வாயிலில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் இந்த மாற்றம் செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விவசாயிகள் விண்ணப்பித்ததும் பயிர் கடன் வழங்கும் திட்டம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கம்

    August 17, 2025
    மாநிலம்

    எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறியதாக அமலாக்கத் துறை மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு

    August 17, 2025
    மாநிலம்

    டிட்டோஜேக் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நாளை பேச்சுவார்த்தை

    August 17, 2025
    மாநிலம்

    “தோற்றுப் போனால் அதிமுக வாக்கு வங்கியை பாஜக கபளீகரம் செய்துவிடும்!” – திமுகவில் இணைந்த வா.மைத்ரேயன் நேர்காணல்

    August 17, 2025
    மாநிலம்

    ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? – அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

    August 17, 2025
    மாநிலம்

    “சாதி தான் என் முதல் எதிரி!” – திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன் பேச்சு

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மீண்டும் இணைகிறது ‘அக்யூஸ்ட்’ டீம்!
    • விவசாயிகள் விண்ணப்பித்ததும் பயிர் கடன் வழங்கும் திட்டம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கம்
    • சிறுநீரக சேதம் மற்றும் உயர் பிபி: நீங்கள் நினைப்பதை விட இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகங்கள் ஏன் அதிகம் இணைக்கப்பட்டுள்ளன
    • ஹாக்கியில் இந்தியன் வங்கி வெற்றி!
    • இந்தியில் ரீமேக் ஆகிறது ‘பெருசு’!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.