Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»எழும்பூர் ஈவெரா சாலை முதல் உயர் நீதிமன்றம் வரை… – சென்னை பாரம்பரிய கட்டிடங்கள் வழித்தடம்
    மாநிலம்

    எழும்பூர் ஈவெரா சாலை முதல் உயர் நீதிமன்றம் வரை… – சென்னை பாரம்பரிய கட்டிடங்கள் வழித்தடம்

    adminBy adminAugust 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எழும்பூர் ஈவெரா சாலை முதல் உயர் நீதிமன்றம் வரை… – சென்னை பாரம்பரிய கட்டிடங்கள் வழித்தடம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை எழும்பூர் ஈவெரா சாலை முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐரோப்பியர்களின் வருகையால் பொருளாதார தலைமை பீடமாக சென்னை வளர்ந்தது.

    காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவின் முதல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதும் சென்னை தான். ஐரோப்பியர்களின் வருகை, காலனி ஆதிக்கத்தின் சுவடுகளாக இன்றும் பாரம்பரிய கட்டிடங்கள் சென்னை மாநகரை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன. இக்கட்டிடங்கள் வரலாறு, சமூக கலாச்சார மதிப்பு, வடிவமைப்பு, கட்டுமான பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் அடிப்படையில் கட்டிடக் கலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

    ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற பாரம்பரிய இடங்கள் குறித்து, இன்றைய தலைமுறைகள் தெரிந்துகொள்ள ‘ஹெரிடேஜ் வாக்’ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதுபோல இந்திய பகுதிகளில் அவ்வளவாக நடத்தப்படுவதில்லை.

    அதனால் மாநகராட்சி சார்பில் பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த எழும்பூர் ஈவெரா சாலை முதல் பாரிமுனை வரையிலான சாலை மற்றும் பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலை வரை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    அதற்காக இந்த சாலைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக எழும்பூர் ரயில் நிலையம் முதல் ஈவெரா சாலை வழியாக பாரிமுனை வரையிலான வழித்தடத்தை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. இந்த சாலையில் எழும்பூர் ரயில் நிலையம், புனித ஆண்ட்ரூ ஆலயம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொது அரங்கம், சென்னை சென்ட்ரல், சென்னை உயர்நீதிமன்றம் ஆகிய பாரம்பரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன.

    இக்கட்டிடங்களின் பாரம்பரிய முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ரிப்பன் மாளிகை எதிரில் உள்ள பூங்கா ரயில் நிலைய சுவற்றில் ரூ.11.21 லட்சம் செலவில் பாரம்பரிய கட்டிடங்களின் ஓவியங்களை வரைய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக இருந்து வரும் பாரம்பரிய பழமையான கட்டிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை நகரத்தின் பண்பாட்டையும், கட்டிடக்கலை மரபையும் பிரதிபலிக்கின்றன. இதை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த மாநகராட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.

    அதற்காக, ஈவெரா சாலையில் உள்ள ரிப்பன் மாளிகை எதிரில் பாரம்பரிய கட்டிடங்கள் குறித்த சுவரோவியங்கள் வரைய இருக்கிறோம். அதனை தொடர்ந்து, பாரம்பரிய சின்னங்கள் குறித்த விழிப்புணர்வு கருப்பொருளுடன் சுவரோவியங்கள் வரைதல், அறிவுப்பலகைகள் நிறுவுதல் உள்ளிட்ட புதுப்புது யோசனைகளுடன் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் செயல்படுத்த வரும் நிறுவனங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அவற்றால் முடிந்த முயற்சிகளை இந்த வழித்தடத்தில், விதிகளுக்கு உட்பட்டு செய்யலாம். எழும்பூர் முதல் பாரிமுனை வரையிலான வழித்தடத்தை மேம்படுத்திய பிறகு, மெரினா காமராஜர் சாலை வழித்தடம் மேம்படுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘அதிமுக போகும் போக்கே சரியில்லை’ – திமுகவில் இணைந்த கார்த்திக் தொண்டைமான் பேட்டி

    August 6, 2025
    மாநிலம்

    சிறப்பு எஸ்ஐ மகனுக்கு அரசு வேலை வழங்க மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ கோரிக்கை

    August 6, 2025
    மாநிலம்

    தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்: அன்புமணி

    August 6, 2025
    மாநிலம்

    சாதிய கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கோரி முதல்வரிடம் விசிக, இடதுசாரிகள் கூட்டாக மனு

    August 6, 2025
    மாநிலம்

    சிறப்பு எஸ்ஐ கொலைக் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு: மேற்கு மண்டல ஐஜி தகவல்

    August 6, 2025
    மாநிலம்

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆவின் பால் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு: அமைச்சர் தகவல்

    August 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் இலக்கை விஞ்சி 1.95 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி!
    • உங்கள் குடல் ஆரோக்கியம் உங்கள் வைக்கோல் காய்ச்சலை எவ்வாறு தூண்டக்கூடும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அதிமுக போகும் போக்கே சரியில்லை’ – திமுகவில் இணைந்த கார்த்திக் தொண்டைமான் பேட்டி
    • டெஸ்டிகுலர் புற்றுநோய் அறிகுறிகள் ஆண்கள் பெரும்பாலும் இழக்கிறார்கள்: அபாயங்கள், சிகிச்சை விருப்பங்கள் மற்றும் எதைப் பார்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.