Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
    மாநிலம்

    எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

    adminBy adminSeptember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​மாநில அரசே எம்​எல்​ஏக்​கள் தொகுதி மேம்​பாட்டு நிதி​யாக ரூ.3 கோடி வழங்​கும் நிலை​யில், எம்​.பி.க்​கள் தொகுதி மேம்​பாட்டு நிதியை ரூ.10 கோடி​யாக மத்​திய அரசு உயர்த்தி வழங்க வேண்​டும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதற்​காக `திஷா’ குழு​வின் ஆய்​வுக் கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்ற உள்​ள​தாக​வும் அவர் தெரி​வித்​தார்.

    சென்னை தலை​மைச் ​செயல​கத்​தில் முதல்​வர் ஸ்​டா​லின் தலை​மை​யில் மாநில அளவி​லான வளர்ச்​சி, ஒருங்​கிணைப்பு மற்​றும் கண்காணிப்​பு (திஷா) குழுவின் 5-வது ஆய்​வுக்கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் வரவேற்​றார். இக்​கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: மத்​திய அரசின் தீன்​த​யாள் அந்​தி​யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்​வா​தார இயக்​கம் திட்​டத்​தின் கீழ் 45,312 சுயஉதவிக் குழுக்​களுக்கு சுழல்​ நி​தி​யாக ரூ.67.97 கோடி, சமு​தாய முதலீட்டு நிதி​யாக 75,127 சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.801.62 கோடி, நலிவு நிலைக்​குறைப்பு நிதி​யாக 13,546 கிராம வறுமை ஒழிப்​புச் சங்​கங்​களுக்கு ரூ.75.73 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

    முதி​யோர், மாற்​றுத் திற​னாளி​கள், திருநங்​கைகள் மற்​றும் பழங்​குடி​யினரைக் கொண்டு 25,001 சிறப்பு சுயஉதவிக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றின் மூலம் 1 லட்​சத்து 57,316 பேர் பயனடைந்​துள்​ளனர். 2025-26 பட்​ஜெட்​டில் மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்​கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. கடந்த செப். 3-ம் தேதி வரை 1 லட்​சத்து 46,100 சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.13,062 கோடி வங்​கிக் கடன் இணைப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

    நாடாளு​மன்ற உறுப்​பினர் தொகுதி மேம்​பாட்​டுத் திட்​டத்​தில் ரூ.1,274 கோடி நிதி வரப்​பெற்​று, 9,755 பணி​கள் முடிக்​கப்​பட்​டுள்​ளன. 2,290 பணி​கள் முன்​னேற்​றத்​தில் உள்​ளன. தமிழகத்​தில் சட்​டப்​பேரவை உறுப்​பினர் தொகுதி மேம்​பாட்​டுத் திட்​டத்​தில் நிதி​யாண்​டுக்கு ரூ.3 கோடி வீதம், 234 தொகு​தி​களுக்​கும் ரூ.702 கோடி ஒதுக்​கப்​பட்​டு, அடிப்​படை, உட்​கட்​டமைப்பு வசதி​கள் செய்​யப்​படு​கின்​றன. மாநில அரசே எம்​எல்​ஏக்​களுக்கு ரூ.3 கோடி வழங்​கு​வ​தால், எம்​.பி.க்​கள் நிதியை ரூ.10 கோடி​யாக உயர்த்த வேண்​டும். இதை வலி​யுறுத்தி இக்​கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்றி மத்​திய அரசுக்கு அனுப்​பப்​படும்.

    பிரதமரின் `ஒரு துளி நீரில் அதிக பயிர்’ என்ற திட்​டத்​தில் நுண்​நீர் பாசனம் அமைக்க விவ​சா​யிகளுக்கு 55 சதவீதம் மானிய​மும், மற்ற விவ​சா​யிகளுக்கு 45 சதவீதம் மானிய​மும் வழங்​கப்​படு​கிறது. ஆனால், திமுக அரசு கூடு​தல் நிதி ஒதுக்கி 100 சதவீதத்தை சிறு, குறு விவ​சா​யிகளுக்​கும், 75 சதவீதம் மானி​யத்தை இதர விவ​சா​யிகளுக்​கும் வழங்கி வரு​கிறது. 12 சதவீத ஜிஎஸ்​டியை தமிழக அரசே ஏற்​கிறது. இந்த திட்​டத்​தில் கடந்த 2 ஆண்​டு​களில் 1 லட்​சத்து 50,560 ஹெக்​டேர் பரப்​பில் 1 லட்​சத்து 57,279 விவ​சா​யிகள் ரூ.1,312 கோடிக்​கும் அதி​க​மான நிதிப்​பயன்​களை பெற்​றுள்​ளனர்.

    தமிழகத்​தில் 54,449 குழந்​தைகள் மையங்​களில் 22 லட்​சம் குழந்​தைகளுக்​கும், 5.50 லட்​சம் கர்ப்​பிணி​கள், பாலூட்​டும் தாய்​மார்​களுக்​கும் சத்​து​மாவு வழங்​கப்​படு​கிறது. இதனால் 25 சதவீத​மாக இருந்த குழந்​தைகளின் உயரக் குறை​பாடு 11.8 சதவீத​மாக​வும், 14.6 சதவீத​மாக இருந்த மெலிவுத் தன்மை 3.6 சதவீத​மாக​வும், 22 சதவீத​மாக இருந்த குழந்​தைகளின் எடை குறைவு 5.7 சதவீத​மாக​வும் குறைந்​துள்​ளது. இதுத​விர, ஊட்​டச்​சத்தை உறுதி செய்​யும் திட்​ட​த்தில் முதல்​கட்​ட​மாக 1 லட்​சத்து 7,006 ஊட்​டச்​சத்து குறை​பாடுடைய குழந்​தைகளில் 77.3 சதவீதம் பேரும், 2-ம் கட்​டத்​தில் 80.6 சதவீத குழந்​தைகளும் இயல்பு நிலைக்​குத் திரும்​பி​யுள்​ளனர். மத்​திய அரசு தனது நிதியை சரி​யான நேரத்​தில் மாநில அரசுக்கு வழங்க வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.தொடர்ந்​து, அமைச்​சர்​கள் துறை வாரி​யான திட்​டங்​கள் குறித்து விளக்​கினர். குழு​வின் உறுப்​பினர்​களாக உள்​ள எம்​.பி.க்​கள்​, எம்​எல்​ஏக்​கள்​ பங்​கேற்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வேலூர் காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: கிண்டியில் சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    September 20, 2025
    மாநிலம்

    கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் வராதீர்கள் என விஜய் தெரிவிக்கலாமே? – நீதிபதி அறிவுறுத்தல்

    September 19, 2025
    மாநிலம்

    ‘பிங்க்’ பஸ் கண்டிஷனில் தான் திமுக இருக்கிறது: உதயநிதிக்கு இபிஎஸ் பதிலடி

    September 19, 2025
    மாநிலம்

    300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்

    September 19, 2025
    மாநிலம்

    “போலி செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி” – ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

    September 19, 2025
    மாநிலம்

    சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை விமர்சனம்

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆளுமை சோதனை: நீங்கள் முதலில் பார்ப்பது ஒரு மோசமான அல்லது கூர்மையான எண்ணம் கொண்ட நபராக இருந்தால் முதலில் வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 71 வயதான அமெரிக்காவை தளமாகக் கொண்ட என்.ஆர்.ஐ கில்லிங்: திருமணத்தின் வாக்குறுதி, ரூ .40 லட்சம், கடந்த வழக்குகள் என்.ஆர்.ஐ ரூபிந்தர் கவுரின் கொலைக்கு பிணைக்கப்பட்டுள்ளன | லூதியானா நியூஸ் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
    • இந்தியர்கள் ஏன் தங்கள் 20 களில் நரை முடியைப் பெறுகிறார்கள்: காரணங்கள், உணவு உதவிக்குறிப்புகள் மற்றும் தீர்வுகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘11% பண்டைய இந்திய டி.என்.ஏ ‘: தொழிலாளர் தலைவர் பர்விந்தர் கவுரின் பேச்சு வைரலாகிறது; ‘யார் அதிக ஆஸ்திரேலிய’ விவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.