Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»எப்படி இருக்கிறது திருமங்கலம் – வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை? | டிச.25-ல் திறப்பு
    மாநிலம்

    எப்படி இருக்கிறது திருமங்கலம் – வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை? | டிச.25-ல் திறப்பு

    adminBy adminSeptember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எப்படி இருக்கிறது திருமங்கலம் – வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை? | டிச.25-ல் திறப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை திருமங்கலம் – வடுகப்பட்டி 4 வழிச்சாலைப் பணிகள் நிறைவுற்று வரும் டிசம்பர் 25-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்களை இணைக்கும் வகையில் மதுரை-கொல்லம் 4 வழிச்சாலைப் பணிக்கு கடந்த 2023-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இச்சாலைப் பணியில் முதற்கட்டமாக திருமங்கலம்- ராஜபாளையம் இடையிலான 71.6 கி.மீ தூரத்தினை இரண்டாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் திருமங்கலம் முதல் வடுகபட்டி வரையில் சுமார் ரூ.ரூ.541 கோடி மதிப்பீட்டில் 36 கி.மீ தூரத்துக்கு ஏற்கெனவே இருந்த சாலையை 4 வழிச் சாலையாக மாற்றியும், வளைவான சாலைகளை நேராகவும் அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2023 பிப்ரவரி மாதம் தொடங்கிய இப்பணிகள் சுமார் 92 சதவீதம் நிறைவுற்றுள்ளன. வரும் டிசம்பர் மாதம் பிரதமர் திறந்து வைக்கப்பட உள்ள நிலையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட அதிகாரி கூறுகையில், தமிழ்நாடு- கேரளாவை இணைக்கும் இந்த 4 வழிச்சாலை தமிழகத்தில் 129.92 கி.மீ தூரத்தினைக் கொண்டுள்ளது. இதன் மூலம் முக்கிய பொருளாதார மையங்களுக்கிடையே பயண தூரத்தைக் குறைத்து இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் 2 மாநிலங்களுக்கிடையே சரக்கு போக்குவரத்து, சுற்றுலா ஆகியவை மேம்படும்.

    இதில் முதலில் பயன்பாட்டுக்கு வர உள்ள மதுரை திருமங்கலம்- வடுகப்பட்டி வரையிலான 4 வழிச்சாலைப் பணிகளில், இன்னும் 4 சுரங்கப் பாதைகள் மட்டுமே அமைக்கபட உள்ளன. இப்பணியானது கடந்த பிப்ரவரி மாதமே முடிக்க வேண்டிய நிலையில், ஆலம்பட்டி மற்றும் சுப்புலாபுரம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் போராட்டம் காரணமாக தாமதம் ஏற்பட்டது. தற்போது அப்பகுதிகளில் பொதுமக்கள் சென்று வரும் வகையில் 2 சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இந்தச் சாலையில் மொத்தம் பொதுமக்கள், வாகங்கள் செல்லும் வகையில் 16 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தில் முதற்கட்டமாக திருமங்கலம்- வடுகப்பட்டி வரையிலான நான்கு வழிச்சாலைப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும். டிச.25ம் தேதி இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஜிஎஸ்டி வரி குறைப்பை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கலாமே? – மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

    September 23, 2025
    மாநிலம்

    திமுகவின் அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்ததே ஜெயலலிதாதான் – கனிமொழிக்கு இபிஎஸ் பதிலடி

    September 23, 2025
    மாநிலம்

    தமிழகத்தை மோசமான நிதி சீரழிவுக்கு உள்ளாக்கிவிட்டது திமுக – அன்புமணி குற்றச்சாட்டு

    September 23, 2025
    மாநிலம்

    காரைக்குடியில் கழிவுநீரில் இறங்கி அதிமுக கவுன்சிலர் போராட்டம்!

    September 23, 2025
    மாநிலம்

    சாலை விபத்தில் உயிரிழந்த திமுகவினர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் – ஸ்டாலின் வழங்கினார்

    September 23, 2025
    மாநிலம்

    “காய்த்த மரம்தான் கல்லடி படும்” – விஜய் விமர்சனத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜிஎஸ்டி வரி குறைப்பை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கலாமே? – மோடிக்கு ஸ்டாலின் கேள்வி
    • உடல் வாசனையை இயற்கையாகவே அடியுங்கள்: வாசனை திரவியத்தின் ஒரு தெளிப்பு இல்லாமல் நாள் முழுவதும் புதியதாக இருக்க வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திமுகவின் அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்ததே ஜெயலலிதாதான் – கனிமொழிக்கு இபிஎஸ் பதிலடி
    • வாழ்க்கையில் கடினமான நேரங்களை எதிர்கொள்கிறீர்களா? போராட்டங்களை சமாளிக்கவும் சவால்களுக்கு செல்லவும் உதவுவதற்காக பகவத் கீதையிலிருந்து போதனைகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரெபெக்கா ஜோன்ஸ் யார்? ஆண்டிஃபா பி.ஆர் தலைவர் சார்லி கிர்க் என்று அழைத்தார் ஒரு மோசமான நபர் இறுதியாக படுகொலைக்குப் பிறகு சென்றார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.