Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»எப்எல்- 2 மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    எப்எல்- 2 மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminAugust 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எப்எல்- 2 மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: எப்எல்-2 உரிமம் பெற்று நடத்தப்படும் மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருச்சி பிரதான சாலைகளில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 300 மனமகிழ் மன்றங்கள் உள்ள நிலையில் திருச்சியில் மட்டும் 13 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. மதுவிலக்கு துறை தகவல் படி பார்த்தால் தமிழகத்தில் 125 எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் செயல்படுகிறது.

    ஆனால் உண்மையில் அதை விட கூடுதல் எண்ணிக்கையில் எப்எல்- 2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் செயல்படுகின்றன. இதனால் சட்டவிரோதமாக இயங்கி வரும் எப்எல்-2 மதுபான கூடங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இந்த மதுபான கூடங்கள் எப்எப்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி உண்டு. ஆனால் பெரும்பாலான மதுபான கூடங்கள் அதிகாலை 3 மணி வரை செயல்படுகிறது.

    மதுபான கூடங்களில் ஏராளமான சட்டவிரோத நடவடிக்கைளும் நடைபெறதாக புகார்கள் வருகின்றன. இருப்பினும் போலீஸார் மதுபான கூடம் நடத்துவோரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர. இதனால் தமிழகத்தில் எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்களில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு விற்பனை செய்வதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரிய கிளாட் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது குற்றம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றனர். மனுதாரர் தரப்பில், மது விற்பனைக்கு ரசீது வழங்குவதில்லை. சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் நீதிபதிகள், சட்டவிரோதமாக மது விற்பனை யாருக்கு செய்யப்பட்டாலும் அது குற்றமே. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மதுவிலக்கு துறையின் உதவி ஆணையர் நடவடிக்கை எடுப்பதில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    எனவே, திருச்சி மாவட்டத்தில் எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்களில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் தொடர்பாக திருச்சி மாவட்ட மதுவிலக்கு உதவி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திடீர் ரத்து, அடிக்கடி தாமதம்: எப்போது சீராகும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை?

    August 8, 2025
    மாநிலம்

    தனியார் விளம்பர பேரிகார்டுகளை அகற்றக் கோரிய வழக்கு: நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    August 8, 2025
    மாநிலம்

    காரைக்குடி மாநகராட்சி மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

    August 8, 2025
    மாநிலம்

    பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் இன்று வெளியிடுகிறார்

    August 8, 2025
    மாநிலம்

    “பாமக எனும் ஆலமரத்தை கோடரியால் வெட்ட அன்புமணி முயற்சி!” – ராமதாஸ் வேதனை

    August 8, 2025
    மாநிலம்

    சென்னை: போலீஸ் பெயரில் போலி அடையாள அட்டையுடன் வலம் வந்த நகைக்கடை உரிமையாளர் கைது

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இளைஞர்கள் அதிக திரை நேரத்திலிருந்து இதய ஆரோக்கிய அபாயங்களை எதிர்கொள்கின்றனர்: தாக்கத்தைப் புரிந்துகொள்வது மற்றும் உங்கள் இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது – இந்தியாவின் நேரங்கள்
    • திடீர் ரத்து, அடிக்கடி தாமதம்: எப்போது சீராகும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை?
    • வாரத்திற்கு இரண்டு முறை அல்லது அதற்கு மேற்பட்ட உணவு அல்லது உணவு விநியோகமா? உங்கள் உடலுக்கு இது என்ன செய்கிறது என்பது இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தனியார் விளம்பர பேரிகார்டுகளை அகற்றக் கோரிய வழக்கு: நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    • மிளகுக்கீரை Vs ஸ்பியர்மிண்ட்: அவற்றின் சுவை, நறுமணம், சுவை மற்றும் சுகாதார நன்மைகளில் முக்கிய வேறுபாடுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.