Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“என்னிடம் யாரெல்லாம் பேசினர் என்பது சஸ்பென்ஸ்” – செங்கோட்டையன் விவரிப்பு
    மாநிலம்

    “என்னிடம் யாரெல்லாம் பேசினர் என்பது சஸ்பென்ஸ்” – செங்கோட்டையன் விவரிப்பு

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “என்னிடம் யாரெல்லாம் பேசினர் என்பது சஸ்பென்ஸ்” – செங்கோட்டையன் விவரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஈரோடு: “அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள். ஒருமித்த கருத்துகள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது கூற இயலாது” என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    அதிமுக முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி ‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அந்தப் பணியை 10 நாட்களுக்குள் செய்ய வேண்டும்’ என கெடு விதித்தார். இதையடுத்து அவர் வகித்து வந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகியவற்றை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்து உத்தரவிட்டார்.

    இந்தப் பரபரப்பான சூழலலில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சார பயணத்தை தொடங்குவதற்காக சேலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு காரில் கிளம்பி சென்றார். அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிப்பதற்காக 2 நாட்களுக்கு முன்பே செங்கோட்டையன் கார் மூலம் சென்னை கிளம்பி சென்றார். இதனால் ஒருங்கிணைப்பு சம்பந்தமாக ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனை செங்கோட்டையன் சந்திக்க உள்ளதாக தகவல் பரவியது.

    இந்நிலையில், சென்னையில் இருந்து திரும்பிய செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்று இருந்தேன். சென்னை சென்றவுடன் என்னுடைய சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று வீடு திரும்பியிருக்கிறேன்.

    சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. அதுபோன்ற தவறான செய்திகள் வந்தவுடன் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு இது குறித்து தெரிவித்து இருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருக்கிறது.

    எம்ஜிஆரின் கனவு, ஜெயலலிதா சட்டப்பேரவையில் உரையாற்றும்பொழுது 100 ஆண்டு காலம் இந்த இயக்கம் நிலைத்திருக்கும் என்று கூறினார். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்து தொண்டர்கள் உள்ள இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக, எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என இரண்டு நோக்கத்தோடுதான் அன்று எனது கருத்தை தெரிவித்து இருந்தேன்.

    என்னை பொறுத்தவரையில் குறிக்கோள் ஒன்றுதான். அந்த குறிக்கோளின் அடிப்படையில் ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடமும் நான் பேசவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்” என்று செங்கோட்டையன் கூறினார்.

    ஒருங்கிணைப்புப் பணி எந்த அளவில் உள்ளது என்ற கேள்விக்கு, “பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள். ஒருமித்த கருத்துகள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது கூற இயலாது. ஆகவே, எல்லோருடைய உள்ளங்களிலும் இருப்பது அதுதான். எல்லோருடைய மனதிலும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை தான் இருக்கிறது.

    ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்பு கொண்டார்களா என்பதை இப்போது சொல்வது சரியாக இருக்காது. யார் பேசினார்கள், யார் பேசவில்லை என்பது இப்போது சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை. வாய்ப்பு இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்” என்று செங்கோட்டையன் கூறினார். அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அடித்து ஆடும் அன்புமணி… அடுத்து என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்?

    September 25, 2025
    மாநிலம்

    செல்வப்பெருந்தகையின் விசுவாசம் பற்றி பேச பழனிசாமிக்கு தகுதியில்லை: ஆ.ராசா

    September 25, 2025
    மாநிலம்

    கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கோரி விசிக துண்டு பிரசுரம்

    September 25, 2025
    மாநிலம்

    கல்பாக்கம் அருகே பக்கிங்காம் கால்வாயில் தூய்மை பணிகள்

    September 25, 2025
    மாநிலம்

    வள்ளி கும்மி கலைஞர் பாலுவுக்கு கலைமாமணி விருது வழங்க விசிக எதிர்ப்பு

    September 25, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணிகளை புறக்கணித்து வருவாய் துறையினர் போராட்டம்

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆல்கஹால் மாற்று: உங்கள் கல்லீரலை காயப்படுத்தாத பானங்கள்
    • அடித்து ஆடும் அன்புமணி… அடுத்து என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்?
    • கர்ப்ப பாணியை எப்போதும் மறுவரையறை செய்த ரிஹானாவின் சிறந்த மகப்பேறு தோற்றம்!
    • செல்வப்பெருந்தகையின் விசுவாசம் பற்றி பேச பழனிசாமிக்கு தகுதியில்லை: ஆ.ராசா
    • அதிர்ச்சியூட்டும்! புற்றுநோய் இறப்புகள் 2050 க்குள் 75% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.