Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»எத்தனை முறை வந்தாலும் எங்களுக்காக என்ன செய்தார் முதல்வர்? – தடாலடி கேள்வி எழுப்பும் தருமபுரி பாஜக!
    மாநிலம்

    எத்தனை முறை வந்தாலும் எங்களுக்காக என்ன செய்தார் முதல்வர்? – தடாலடி கேள்வி எழுப்பும் தருமபுரி பாஜக!

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எத்தனை முறை வந்தாலும் எங்களுக்காக என்ன செய்தார் முதல்வர்? – தடாலடி கேள்வி எழுப்பும் தருமபுரி பாஜக!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கடந்தமுறை அதிமுக கூட்டணி தான் கைப்பற்றியது. இம்முறை அதை உடைக்க நினைக்கிறது திமுக. அதற்காகவே இதுவரை அரசு முறை பயணங்களையும் சேர்த்து 6 முறை இந்த மாவட்டத்துக்கு வருகை புரிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும், இம்முறையும் இங்கே திமுக கூட்டணிக்கு வேலை இல்லை என்கிறது அதிமுக கூட்டணி.

    அண்​மை​யில் தரு​மபுரிக்கு வருகை தந்த முதல்​வர், இந்த மாவட்​டத்​துக்கு கடந்த நாலரை ஆண்​டு​களில் பலமுறை வந்து போயிருப்​ப​தையே பெரு​மித​மாக பேசி​னார். இதை விமர்​சிக்​கும் எதிர்க்​கட்​சிகள், “கடந்த முறை மாவட்​டத்​தில் 5 தொகு​தி​களும் கைநழு​விப் போனது​போல் இம்​முறை​யும் போய்​விடக் கூடாது என்​ப​தற்​காகவே தரு​மபுரிக்கு அடிக்​கடி வந்து போகி​றார் முதல்​வர். ஆனால், எத்​தனை முறை வந்​தோம் என்​பதை விட மாவட்​டத்​துக்​காக என்ன செய்​தோம் என்​பது தான் முக்​கி​யம்” என்​கி​றார்​கள்.

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய தரு​மபுரி மாவட்ட பாஜக முன்​னாள் தலை​வ​ரான பாஸ்​கர், “மகளிர் உரிமைத் தொகை திட்​டம், இணை​ய​வழி பயிர்க் கடன் திட்​டம் ஆகிய​வற்றை தரு​மபுரி மாவட்​டத்​தில் தான் தொடங்கி வைத்​த​தாக முதல்​வர் பெரு​மையோடு சொல்​கி​றார். இவற்​றைத் தொடங்கி வைக்க தரு​மபுரிக்கு ஏன் வரவேண்​டும்​… கோட்​டை​யில் இருந்​த​படியே தொடங்கி வைத்​திருக்​கலாமே? இதைத் தவிர்த்து இந்த மாவட்​டத்​துக்கு மட்​டுமே ஆன சிறப்​புத் திட்​டங்​கள் எதை​யும் ஸ்டா​லின் தரவில்​லை​யே?

    சிறிதும் பெரிது​மாக மாவட்​டத்​தில் 8 அணை​கள் இருந்​தும் போதிய நீர்​வளம் இல்​லை. இதனால், வளமான விளைநிலங்​கள் இருந்​தும் விவ​சா​யம் செய்​ய​முடிய​வில்லை. அதனால் இங்​குள்ள மக்​கள் பிழைப்​புத் தேடி வெளி மாவட்​டங்​களுக்​கும் மாநிலங்​களுக்​கும் போகி​றார்​கள். ஒகேனக்​கல் உபரி நீரேற்​றும் திட்​டத்​தைச் செயல்​படுத்​தி​னால் மழைக் காலத்​தில் மாவட்​டத்​தின் அனைத்து நீர்​நிலை​களும் பஞ்​சமில்​லாமல் நிரம்​பி​விடும். ஆனால், இதற்​காக திமுக ஆட்சி இது​வரை சிறு துரும்​பைக்​கூட கிள்​ளிப் போட​வில்​லை.

    இளைஞர்​களுக்கு வேலை வாய்ப்​பளிக்​கும் சிப்​காட் திட்​டத்​துக்கு இது​வரை ஒரே ஒரு சாலை மட்​டுமே போட்​டிருக்​கி​றார்​கள். நாலரை ஆண்​டு​களில் இது மட்​டுமே அவர்​களால் முடிந்​திருக்​கிறது. இந்த லட்​சணத்​தில், வெளி​நாடு​களில் இருந்து தமி​ழ​கத்​துக்​கான தொழில் முதலீடு​களை அதிக அளவில் ஈர்த்​துள்​ள​தாக அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா ஜம்​பமடிக்​கி​றார்.

    குடிநீர் பற்​றாக்​குறையை போக்​கிட இரண்​டாம் கட்ட ஒகேனக்​கல் குடிநீர் திட்​டத்தை ரூ.8 ஆயிரம் கோடி​யில் மேற்​கொண்டு வரு​வ​தாக முதல்​வர் சொல்​கி​றார். ஆனால், அதற்​கான பணி​கள் எங்கே நடக்​கின்றன என்று யாருக்​கும் தெரிய​வில்​லை. மத்​திய அரசுக்கு நற்​பெயர் கிடைத்​து​விடக் கூடாது என்​ப​தால் பிரதமர் வீடு கட்​டும் திட்​டத்​துக்​கும் பலவழிகளி​லும் முட்​டுக்​கட்டை போடு​கி​றார்​கள். மக்​களுக்​கான திட்​டங்​களை செயல்​படுத்தி இருந்​தாலே முதல்​வர் இங்கு அடிக்​கடி வரவேண்​டிய அவசி​யமே இருக்​காது. அப்​படிச் செய்​யாத​தால் தான் அடிக்​கடி வந்து போகி​றார். ஆனால், மக்​களின் தேவை​களை நிறை​வேற்​றாமல் இன்​னும் எத்​தனை முறை அவர் இங்கு வந்து போனாலும் தரு​மபுரி மக்​கள் ஏமாற​மாட்​டார்​கள்” என்​றார்.


    பாஸ்​கர்

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய திமுக முன்​னாள் எம்​பி-​யான மருத்​து​வர் டி.என்​.​வி.செந்​தில்​கு​மார், “இந்த மாவட்​டத்​தில் கடந்த முறை 5 தொகு​தி​களி​லும் திமுக தோற்​ற​தால் அதை சரிசெய்ய தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தரு​மபுரிக்கு அடிக்​கடி வரு​வ​தாக எதிர்​கட்​சி​யினர் தவறாகப் பிரச்​சா​ரம் செய்​கின்​ற​னர். ஆனால், அவர் முதல்​வர் ஆவதற்கு முன்​பிருந்தே தரு​மபுரிக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கி​றார். வரலாற்​றுச் சிறப்பு மிக்க திட்​டங்​களை தரு​மபுரி மண்​ணில் இருந்து தொடங்கி வைப்​ப​தில் முதல்​வ​ருக்கு தனி பிரி​யம். அதோடு, மாவட்​டத்​துக்​கான பல முக்​கிய திட்​டங்​களை நிறை​வேற்​றி​யும் தந்​துள்​ளார்.

    இன்​னும் பல திட்​டங்​களை நிறை​வேற்​ற​வும் தனி கவனம் செலுத்தி வரு​கி​றார். இதையெல்​லாம் அவர் தேர்​தல் கண்​ணோட்​டத்​தில் செய்​வ​தாக இருந்​தா​லும் அதிலொன்​றும் தவறில்​லை​யே. ஒரு கட்​சி​யின் தலை​வ​ராக, தன் கட்​சிக்கு செல்​வாக்கு குறை​வாக உள்ள பகு​தி​களில் கட்​சியை வலுப்​படுத்​து​வதுடன், மக்​களுக்​கான நலத்​திட்​டங்​களை​யும் வழங்கி வரு​கி​றார். பாஜக-வுக்கு தேர்​தல் நேரத்​தில் மட்​டுமே தமி​ழ​கம் கண்​ணுக்கு தெரி​கிறது. இந்​தச் சூழலில், மக்​கள் நலனில் அக்​கறை கொண்ட எங்​கள் தலை​வரை பாஜக-​வினர் விமர்​சிப்​பது வேடிக்​கை​யாகத்​தான் உள்​ளது” என்​றார்.





    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் செப்.7 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    September 2, 2025
    மாநிலம்

    ‘என்னை சாதிய கண்ணோட்டத்துடன் புறக்கணிக்கிறார்கள்…’ – நீக்கப்பட்ட தென்காசி இளைஞர் காங்கிரஸ் தலைவர் புலம்பல்!

    September 2, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

    September 2, 2025
    மாநிலம்

    செப்.4-ல் மதுரையில் நடக்கவிருந்த மாநாடு தள்ளிவைப்பு: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

    September 1, 2025
    மாநிலம்

    தமிழக பாஜக உட்கட்சி பூசல், வார் ரூம் மோதல்கள்: டெல்லியில் செப்.3-ல் உயர்மட்ட குழு ஆலோசனை

    September 1, 2025
    மாநிலம்

    “தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்கச் சொல்லியும் கூட திமுக கேட்கவில்லை!” – மதுரையில் இபிஎஸ் சாடல்

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் செப்.7 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
    • வரலாறு காணாத புதிய உச்சம்: கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்குகிறது – தங்கம் ஒரு பவுன் ரூ.77 ஆயிரத்தை தாண்டியது
    • காபி மைதானத்தை ஒரு உரமாக பயன்படுத்துவது ஏன் இந்த தாவரங்களுக்கு ஆபத்தானது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘என்னை சாதிய கண்ணோட்டத்துடன் புறக்கணிக்கிறார்கள்…’ – நீக்கப்பட்ட தென்காசி இளைஞர் காங்கிரஸ் தலைவர் புலம்பல்!
    • பெசன் சில்லா வெர்சஸ் கோதுமை ரோட்டி: எடை இழப்பு இலக்குகள் மற்றும் புரத உட்கொள்ளல் ஆகியவற்றிற்கு நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.