Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் அஜித்குமார் கொலை வழக்கில் மக்களை ஏமாற்ற முடியாது” – வானதி சீனிவாசன்
    மாநிலம்

    “எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் அஜித்குமார் கொலை வழக்கில் மக்களை ஏமாற்ற முடியாது” – வானதி சீனிவாசன்

    adminBy adminJuly 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் அஜித்குமார் கொலை வழக்கில் மக்களை ஏமாற்ற முடியாது” – வானதி சீனிவாசன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: “எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் திருபுவனம் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கில் ஏமாற்ற முடியாது. முழு உண்மை வெளிவர வேண்டும்,” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதில், சிவகங்கை மாவட்டம், திருபுவனம் கோயில் காவலாளி அஜித்குமார் (27) உயிரிழந்துள்ளார். இது ஒரு கொலை என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த 2020 ஜூன் 22-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ‘லாக் அப் மர்ம மரணங்களுக்கு, உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்’ மக்களாட்சியா? அல்லது திரைமறைவு போலீஸ் ஆட்சியா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    ஆனால், தற்போது திருபுவனம் கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறை விசாரணையின் போது கொல்லப்பட்ட விவகாரத்தில், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தனக்கு, எந்த சம்பந்தமும் இல்லாதது போன்றும், இதற்கு முழுக்க முழுக்க காவல் துறையினர் மட்டுமே காரணம் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. அஜித்குமாரை சட்ட விரோதமாக விசாரிக்க உத்தரவிட்ட அந்த அதிகார மையம் யார்? என்பது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே காவல் துறையினர், சட்டப்படி செயல்படாமல், திமுக நிர்வாகிகளின் உத்தரவுப்படி செயல்படுகிறார்கள் என்பது தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அஜித்குமார் கொலையிலும் இது உறுதியாகி உள்ளது. அஜித்குமார் கொலைக்கு அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருந்துள்ளது. எனவே, இதற்கு காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.

    சில அமைச்சர்களை அனுப்பி, அஜித்குமார் குடும்பத்துடன் பேசி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. காவலாளி அஜித்குமார் கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்று தர வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்: திருப்புவனம் சம்பவத்தில் திடீர் திருப்பம்

    July 3, 2025
    மாநிலம்

    காவலாளி கொலை அரச பயங்கரவாதம்: திருமாவளவன் கண்டனம்

    July 3, 2025
    மாநிலம்

    சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் கட்சி பதவி பறிப்பு: அன்புமணி திடீர் நடவடிக்கை

    July 3, 2025
    மாநிலம்

    சீமானுக்கு எதிராக டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

    July 3, 2025
    மாநிலம்

    போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகள் அனைத்தும் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு

    July 3, 2025
    மாநிலம்

    6 மாதங்களுக்கு முன் நடந்த வேறொரு சம்பவம்: விசாரணை கைதி மீது தாக்குதல்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அருந்ததி’ மகா புனிதவதியான கதை!
    • நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்: திருப்புவனம் சம்பவத்தில் திடீர் திருப்பம்
    • இந்த 5 பண்டைய மூளை ஹேக்குகள் இன்னும் வேலை செய்கின்றன; இங்கே ஏன் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கதாநாயகியாக அறிமுகமாகிறார் மோகன்லால் மகள்!
    • காவலாளி கொலை அரச பயங்கரவாதம்: திருமாவளவன் கண்டனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.