Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»எண்ணூர் விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
    மாநிலம்

    எண்ணூர் விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

    adminBy adminSeptember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எண்ணூர் விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: எண்ணூர் அனல் மின நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

    இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும், மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

    உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    நடந்தது என்ன? – திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் 2×660 MW மெகா வாட் திறனுடைய எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. பாரதமிகு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் இந்தக் கட்டுமான பணியில் 3,000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தற்போது, சுமார் 70 சதவீத பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்டுமான பணியில், அனல் மின் நிலைய முகப்பு பகுதி அமைக்கும் பணியில் இன்று மாலை சுமார் 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, திடீரென இரும்பு கம்பிகளால் ஆன முகப்பு பகுதியில் உள்ள சாரம் சரிந்து விழுந்தது. இதில், படுகாயமடைந்த பலரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மற்றவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், சிலர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விஜய் கட்சியை ‘வளைக்கும்’ அரசியல் சதிவலையை பாஜக விரிக்கிறது: இந்திய கம்யூ.

    October 1, 2025
    மாநிலம்

    தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு – சர்ச்சை கருத்தால் நடவடிக்கை

    October 1, 2025
    மாநிலம்

    எண்ணூர் கட்டிட விபத்து: பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    September 30, 2025
    மாநிலம்

    விஜய்யின் வீடியோ உரை ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டது: பெ.சண்முகம்

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் துயரம்: பாஜக சதியை முறியடிக்க காங்கிரஸுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் விளக்கம்: பழனிசாமி சாடலும், தங்கம் தென்னரசு பதிலும்

    September 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜய் கட்சியை ‘வளைக்கும்’ அரசியல் சதிவலையை பாஜக விரிக்கிறது: இந்திய கம்யூ.
    • பப்பாளி நன்மைகள்: காலை உணவுக்கு பப்பாளி ஒரு கிண்ணத்தை வைத்திருக்க 7 காரணங்கள்
    • தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு – சர்ச்சை கருத்தால் நடவடிக்கை
    • டெல்லி/என்.சி.ஆரில் ரவன் தஹான் பார்க்க 6 சிறந்த இடங்கள் – இந்தியாவின் டைம்ஸ்
    • எண்ணூர் கட்டிட விபத்து: பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.