Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, January 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திக்கும் கூட்டுறவு சங்கம்: சட்டப்பூர்வ நடவடிக்கையை துரிதப்படுத்த முடிவு
    மாநிலம்

    ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திக்கும் கூட்டுறவு சங்கம்: சட்டப்பூர்வ நடவடிக்கையை துரிதப்படுத்த முடிவு

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திக்கும் கூட்டுறவு சங்கம்: சட்டப்பூர்வ நடவடிக்கையை துரிதப்படுத்த முடிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: போக்குவரத்துக் கழகங்களின் ரூ.22 கோடி நிலுவையால் ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திப்பதாக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் தெரிவித்துள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் சென்னையில் உள்ள பணியாளர்கள் கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

    போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதம்தோறும் கடன் மனுக்கள் பெறப்பட்டு, கடன் தொகை வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது கடன் வழங்க முடியாத நிலை இருப்பதாக கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டு காலமாக பல சிரமத்துக்கு இடையே உறுப்பினர்களுக்கு மாதம் தவறாமல் கடன் வழங்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் போக்குவரத்துக் கழகங்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை கடந்த சில மாதங்களாக வழங்கவில்லை.

    அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகம் பிப்ரவரி மாதம் முதல் ரூ.8.60 கோடியும், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாத தவணைத் தொகை ரூ.13.40 கோடி என மொத்தம் ரூ.22 கோடி வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளன. இதனால் அடிப்படை பணிகளான உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவது, கணக்கு முடிப்பது போன்ற பணிகளிலும், உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்வதிலும் கூட்டுறவு சங்கம் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளது.

    போக்குவரத்துக் கழகங்களிடம் பிடித்தம் செய்த பணத்தை விரைந்து பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் சட்டப்பூர்வ நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மே மாதம் விரைவு போக்குவரத்துக் கழக உறுப்பினர்கள் தவிர மற்ற போக்குவரத்துக் கழக உறுப்பினர்களிடமிருந்து கடன் மனு பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

    அதே நேரம், உறுப்பினர்களுக்கு சேமிப்புக்கான வட்டி வழங்குவதற்கு விரைவாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாசா முதன்முதலில் மருத்துவ வெளியேற்றத்தை துவக்கியது: நான்கு விண்வெளி வீரர்கள் ISS இலிருந்து சீக்கிரம் திரும்பினர்; பணி ஒரு மாதத்திற்கும் மேலாக குறைக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இளவரசி லியோனோர்: 150 ஆண்டுகளில் ஸ்பெயினின் முதல் ராணியாக ஆவதற்கு தயாராக உள்ள 20 வயது ஜெனரல் இசட் அரச குடும்பத்தைச் சந்திக்கவும்! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காண்க: மினியாபோலிஸ் எதிர்ப்பு மோதலில் ICE முகவர்கள் ஜன்னலை உடைத்து, ‘ஊனமுற்ற’ பெண்ணை காரில் இருந்து இழுத்துச் சென்றது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘விசாவை தடை செய்யும் நம்பர் ஒன் நாடு…’: 75 நாடுகளுக்கான விசாக்களை அமெரிக்கா முடக்கியதை அடுத்து சீனா முதல் கட்டுப்பாடுகளுக்கு நிக்கி ஹேலி அழைப்பு | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2,000 ஆண்டுகள் பழமையான ரோமன் ஒயின் விஞ்ஞானிகளால் மீண்டும் உருவாக்கப்பட்டு அதன் சுவை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.