Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஊபர் செயலியில் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் இயக்கம்
    மாநிலம்

    ஊபர் செயலியில் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் இயக்கம்

    adminBy adminAugust 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஊபர் செயலியில் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் இயக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மெட்ரோ ரயில் பயணச் சீட்​டு​களை ஊபர் செயலி​யில் பெறும் வசதி தொடங்​கப்​பட்​டுள்​ளது. 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்​தில் ஒரு வழித்​தடத்​தில் டிசம்​பர் மாதத்​தில் ரயில்​கள் இயக்​கப்​படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்​குநர் மு.அ.சித்​திக் தெரி​வித்​தார்.

    சென்னை நந்​தனத்​தில் உள்ள மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் தலைமை அலு​வல​கம் மெட்​ரோஸில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சியில் ஊபர் (UBER) செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணச்​சீட்டு பெரும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்​குநர் மு.அ.சித்​திக் தொடங்​கி​வைத்​தார்.

    சென்னை மெட்​ரோ, ஒஎன்​டிசி மற்​றும் ஊபர் நிறு​வனங்​கள் இணைந்து இந்த திட்​டத்தை செயல்​படுத்​தி​யுள்​ளன. இதில் சென்னையில் உள்ள ஊபர் பயனாளர்​கள், க்யூஆர் அடிப்​படையி​லான பயணச்​சீட்​டு​களை பெறு​வதோடு மெட்ரோ பயண தகவல்களை​யும் ஊபர் செயலி​யில் தெரிந்​து ​கொள்​ளலாம். அறி​முகச் சலுகை​யாக இந்த ஆகஸ்ட் மாதம் முழு​வதும் ஊபர் செயலியைப் பயன்​படுத்தி மெட்ரோ பயணச்​சீட்​டு​களை வாங்​கும் பயணி​கள் 50 சதவீதம் தள்​ளு​படி பெறலாம்.

    மேலும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களி​லிருந்து வேறு இடத்​துக்கோ வேறு இடத்​திலிருந்து மெட்ரோ ரயில் நிலை​யம் வரை​யிலோ பயணிக்க ஊபர் செயலி​யில் கார், ஆட்​டோ, பைக் புக் செய்​தால் அதி​லும் 50 சதவீதம் தள்​ளு​படி வழங்​கப்​படும் என தெரிவிக்கப்பட்​டது.

    கிளாம்பாக்கம் வரை மெட்ரோ: நிகழ்ச்​சிக்​குப் பின் சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்​குநர் சித்​திக் நிருபர்​களிடம் கூறிய​தாவது: மெட்ரோ ரயில் மக்​களைச் சென்​றடைய வேண்​டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வரு​கிறோம். வாட்​ஸ்​-அப், டிஜிட்​டல் பரிவர்த்​தனை செயலிகள் எனப் பல வழிகளில் மெட்ரோ பயணச்​சீட்​டு​களை வழங்கி வரு​கிறோம். தற்​போது ஊபர் உடன் இணைந்​துள்​ளோம். இந்த சேவையை வழங்க நாங்​கள் யாரை​யும் தேர்ந்​தெடுக்​க​வில்​லை.

    அவர்​கள்​தான் எங்​களைத் தேர்ந்​தெடுக்​கிறார்​கள். எங்​களு​டைய பயணச்​சீட்டு நடை​முறை​களை கோரி அதற்கு ஏற்​றார் ​போல்யார் வேண்​டு​மா​னாலும் வந்து மெட்​ரோவுடன் இணைந்து பணி​யாற்​றலாம். கூகுள் மேப்​ஸை​யும் இணைப்​ப​தற்​கான பணிகளை மேற்​கொண்டு வரு​கிறோம். சென்னை விமான நிலை​யம் முதல் கிளாம்​பாக்​கம் வரையி​லான மெட்ரோ ரயில் பணிகளுக்​கான விரி​வான திட்ட அறிக்​கையை மத்​திய அரசுக்கு அனுப்​பி​யுள்​ளோம். அது பரிசீலனை​யில் உள்​ளது.

    மத்​திய அரசின் ஒப்​புதலை எதிர்​பார்த்​துக் கொண்​டிருக்​கிறோம். நிச்​ச​யம் ஒப்​புதல் கிடைக்​கும். அதற்கு தேவை​யான நிலம் எடுக்கும் பணி​களும் மற்ற பணி​களும் நடை​பெற்று வரு​கின்​றன. சென்​னை​யில் வாட்​டர் மெட்ரோ சாத்​தி​யம் தான்.

    நெடுஞ்சாலைத் துறை​யும், சிறு துறை​முகங்​கள் துறை​யும் அதற்​கான பணி​களை முன்​னெடுத்​துள்​ளன; பொறுத்​திருந்து பார்ப்​போம். மதுரை, கோவை நிலம் எடுப்பு கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் சேவை 2 ஆண்​டு​களில் படிப்​படி​யாக மெட்​ரோ​விடம் மாற்​றப்​படும். இந்த மாதம் அல்​லது அடுத்த மாதம் தொடக்​கத்​தில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​திடப்​படும்.

    முதலில் ரயில் நிலை​யங்​களை மேம்​படுத்​தும் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். அதைத் தொடர்ந்து ரயில் பெட்​டிகளை மாற்​று​வது என பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். முழு​மை​யாகப் பணி​கள் முடிய இரண்​டரை ஆண்​டு​களாகும். அது​வரை புறநகர் ரயில்​கள் வழக்​கம்​போல இயங்​கும். மதுரை, கோவை​யில் நிலம் எடுப்பு பணி​களுக்கு 2 ஆண்​டு​கள் ஆகும். இப்​போது நிலத்தை அடையாளம் காணும் பணி, அரசின் ஒப்​புதலைப் பெறு​வது ஆகிய பணி​களைத் தொடங்​கி​விட்​டோம்.

    மத்​திய அரசின் ஒப்​புதல் கிடைக்க கால​தாமதம் ஏதும் இல்​லை; வழக்​க​மான காலம்​தான் எடுக்​கிறது. 2-ம் கட்ட மெட்ரோ பணி​யில் ஒரு வழித்​தடம் டிசம்​பர் மாதம் பொது​மக்​களின் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​படும். அடுத்​தடுத்த 6 மாதங்​களில் அடுத்​தடுத்த வழித்​தடங்​களை பயன்​பாட்​டுக்​குக் கொண்டு வரு​வோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

    இந்​நிகழ்ச்​சி​யில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அமைப்​பு​கள் மற்​றும் இயக்​கம் இயக்​குநர் மனோஜ் கோயல், தலைமை ஆலோ​சகர் கோபி​நாத் மல்​லையா (இயக்​கம் மற்​றும் பராமரிப்​பு). தொழில்​நுட்ப ஆலோ​சகர் மனோகரன், ஊபர் நிறு​வனத்​தின் மூத்த இயக்​குநர் மணி​கண்​டன் தங்​கரத்​தினம், ஒஎன்​டிசி நிறு​வனத்​தின் துணைத் தலை​வர் நிதின் நாயர், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் மற்​றும் ஊபர் நிறு​வனத்​தின்​ உயர்​ அலு​வலர்​கள்​ மற்​றும்​ பணி​யாளர்​கள்​ உடனிருந்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முதல்முறை வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை

    August 8, 2025
    மாநிலம்

    எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம்: தலைமை நீதிபதி அறிவிப்பு

    August 8, 2025
    மாநிலம்

    பிரேமலதா, ஓபிஎஸ் உடனான சந்திப்பு: கூட்டணிக்குள் சேர்க்கவா… கூட்டணிக் கட்சிகளை அடக்கவா?

    August 8, 2025
    மாநிலம்

    சென்னையில் இருந்து போத்தனூர், செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்

    August 8, 2025
    மாநிலம்

    துணைவேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு; விசாரணை தள்ளிவைப்பு

    August 8, 2025
    மாநிலம்

    அதிமுக கொள்கை வேறு, கூட்டணி வேறு: பழனிசாமி திட்டவட்டம்

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரக்ஷா பந்தன் 2025: நீங்கள் ராக்கியைக் கட்டியெழுப்பிய பிறகு, உடன்பிறப்புகளுடன் இதை எரிய வைக்க நீங்கள் செய்யக்கூடிய 6 விஷயங்கள் இங்கே: சமையல், மேக்ஓவர் மற்றும் பல!
    • பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முதல்முறை வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை
    • இந்த அன்றாட சமையலறை மூலப்பொருள் இயற்கையாகவே பிளேக்கை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமாக இருக்கலாம்: இங்கே எப்படி – இந்தியாவின் நேரங்கள்
    • எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம்: தலைமை நீதிபதி அறிவிப்பு
    • அருணாச்சல பிரதேசத்தில் அடுத்த லே ஆக மாறுவதற்கு முன்பு செய்ய வேண்டிய அனுபவங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.