Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, January 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஊட்டி தாவரவியல்‌ பூங்காவில்‌ 2-ம்‌ சீசனுக்கான நடவுப்பணிகள்‌ தொடக்கம்: 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு
    மாநிலம்

    ஊட்டி தாவரவியல்‌ பூங்காவில்‌ 2-ம்‌ சீசனுக்கான நடவுப்பணிகள்‌ தொடக்கம்: 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு

    adminBy adminJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஊட்டி தாவரவியல்‌ பூங்காவில்‌ 2-ம்‌ சீசனுக்கான நடவுப்பணிகள்‌ தொடக்கம்: 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணிகள் தொடங்கியது.

    நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால், இதுவே முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால், இவ்விரண்டு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது.

    முதல் சீசன் போது, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனைக் காண தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.

    அதேபோல், இரண்டாம் சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தாத போதிலும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், தொட்டிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்நிலையில், இரண்டாம் சீசனுக்கான நாற்று நடவு பணிகள் இன்று தொடங்கியது.

    நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா மலர் நாற்றுக்கள் நடவு பணிகளை தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘இரண்டாம் சீசனுக்காக கொல்கத்தா, காஷ்மீர்‌, பஞ்சாப்‌, புனே போன்ற இடங்களிலிருந்து இன்கா மேரி கோல்டு, பிரெஞச்‌ மேரிகோல்டு, ஆஸ்டர்‌, வெர்பினா, ஜூபின்‌, கேணீடிடப்ட்‌, காஸ்மஸ்‌, கூபியா, பாப்பி, ஸ்வீட்‌ வில்லியம்‌, அஜிரேட்டம்‌, கிரைசாந்திமம்‌, கலண்டுலா, லெக்கைசம்‌, சப்னேரியா போன்ற 60 வகைகளில்‌ பல்வேறு வகையான விதைகள்‌ பெறப்பட்டு சுமார்‌ 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்ச் செடிகள்‌ இரண்டாவது சீசனுக்காக மலர்ப்பாத்திகளில்‌ நடவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 15 ஆயிரம் தொட்டிகளில்‌ சால்வியா, டெய்சி, டெல்பினியம்‌, டேலியா, ஆந்தூரியம்‌, கேலா லில்லி போன்ற 30 வகையான மலர்ச்செடிகள்‌ நடவுப்‌ பணியும்‌ துவக்கி வைக்கப்பட்டது. இம்மலர்த்‌ தொட்டிகள்‌ மலர்க்காட்சித்‌ திடலில்‌ அடுக்கி வைக்கப்பட்டு சுற்றுலாப்‌ பயணிகள்‌ மற்றும்‌ பொது மக்களின்‌ கண்களுக்கு விருந்தாக ஒரு மாத காலம்‌ வரை திறந்து வைக்கப்பட உள்ளது.

    இந்த ஆண்டு இரண்டாம்‌ சீசனுக்காக செப்டம்பர்‌ மாதம்‌ இரண்டாம்‌ வாரத்தில்‌ மலர் அலங்காரங்கள் தொடங்கப்படவுள்ளது. இதனை காண சுமார்‌ 3 லட்சம்‌ சுற்றுலா பயணிகள்‌, பொதுமக்கள்‌ செப்டம்பர்‌ மற்றும்‌ அக்டோபர்‌ மாதங்களில்‌ வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர். இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை இணை இயக்குநர்‌ சிபிலா மேரி, உதவி இயக்குநர்கள் நவநீதா, ஜெயலட்சுமி, பைசல், அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இயற்கையான முறையில் உங்கள் வீட்டை புதிய வாசனையுடன் வைத்திருப்பது எப்படி: எளிய காற்றோட்டம், சமையலறை, சலவை மற்றும் சுத்தமான மற்றும் இனிமையான வீட்டிற்கு விரைவான குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் 2026: முதல் 10 இடங்களில் ஆதிக்கம் செலுத்தும் 38 நாடுகள் மற்றும் இந்தியா தரவரிசையில் இருக்கும்
    • வேகவைத்த பிறகு குளிர்ந்த நீரில் முட்டைகளை வைக்க வேண்டாம்: கடின வேகவைத்த முட்டைகளை அழிக்கும் எளிய தவறு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் மிகப்பெரிய கடல் பாம்பு 12 மீட்டர் ராட்சத சுறாக்களை சாப்பிட்டிருக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆய்வகங்கள் எதையும் தவறாகச் சொல்வதற்கு முன்பே தைராய்டு பிரச்சனை தொடங்குகிறது: மருத்துவர்கள் ஆரம்ப அறிகுறிகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.