Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“உ.பி.யை எட்டிப் பார்க்காமல் தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் கவனித்தால் நல்லது” – தமிழிசை
    மாநிலம்

    “உ.பி.யை எட்டிப் பார்க்காமல் தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் கவனித்தால் நல்லது” – தமிழிசை

    adminBy adminJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “உ.பி.யை எட்டிப் பார்க்காமல் தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் கவனித்தால் நல்லது” – தமிழிசை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவள்ளூர்: “முதல்வர் ஸ்டாலின் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை எட்டிப் பார்க்காமல் தமிழ்நாட்டை எட்டிப் பார்த்தால் நல்லது,” என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில், திருவேற்காடு அருகே உள்ள நூம்பல் பகுதியில் மத்திய பாஜக ஆட்சியின் 11 ஆண்டு கால சாதனைகள் விளக்க செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூன் 12) நடைபெற்றது. இதில் பங்கேற்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியது: “பொருளாதாரம், சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பில் உலக அரங்கில் பாரத தேசத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

    2007-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம் இன்று 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் நிதி, கட்டமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது. இப்படி எவ்வளவு நல்லது செய்தாலும், அதை பாராட்டும் மனமில்லாமல் குற்றம்சாட்டும் மன நிலையிலேயே தமிழக முதல்வர் உள்ளார். ஆனால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. அதே நேரத்தில் பாஜக அரசின் சாதனைகளை மக்கள் உணர்ந்துள்ளனர். எல்லா மாநில உறுப்பினர்கள் வரும் நாடாளுமன்றத்தில் தமிழின் அடையாளமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எப்போதெல்லாம் மகுடம் சூட்ட வேண்டுமோ அப்பொதெல்லாம் பிரதமர் மோடி மகுடம் சூட்டி வருகிறார்.

    கீழடி என்ற ஒன்றை வைத்துக் கொண்டு தமிழின் தொன்மையை மறைப்பதற்கு பாஜக அரசு முயற்சி செய்வதை போல பொய்யான குற்றச்சாட்டை கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கீழடியில் அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. கீழடியில் உள்ள தொன்மையான பகுதியை உலக அரங்குக்கு கொண்டு செல்ல மத்திய பாஜக அரசுதான் காரணம்.

    தமிழகத்தில் பல மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் குறைவாக இருக்கிறார்கள். மருத்துவர்களை விடுப்பு எடுக்காமல் பணி செய்ய கூறுகிறார்கள் போன்ற பிரச்சினைகளை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பார்த்தால் நல்லது. தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற அரசு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை எட்டிப் பார்க்காமல் தமிழ்நாட்டை எட்டிப் பார்த்தால் நல்லது,” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம்

    July 29, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

    July 29, 2025
    மாநிலம்

    செவிலியர்களுக்கு திமுக அரசு பக்கபலமாக நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி உறுதி

    July 29, 2025
    மாநிலம்

    கிராமப்புற மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

    July 29, 2025
    மாநிலம்

    நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன?

    July 29, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகள் என்ன? – பட்டியலிட அண்ணாமலை வலியுறுத்தல்

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விவசாயிகளின் சிக்கல்களை பேசும் ‘உழவர் மகன்’
    • பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம்
    • ஒவ்வொரு பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய சிவப்பு உதட்டுச்சாயத்தின் 5 சின்னமான நிழல்கள் – இந்தியாவின் நேரங்கள்
    • செவ்வாய் கிரகங்கள் மற்றும் ஆழமான விண்வெளி பயணங்களில் ஆரோக்கியமான விண்வெளி வீரர் வாழ்க்கைக்கு விண்வெளியில் வளரும் தாவரங்கள் முக்கியம் என்பதை நாசா நிரூபிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹாரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.