Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேரணி, கருத்தரங்கம்: போட்டியில் வென்றவர்களுக்கு சுகாதார துறை பாராட்டு
    மாநிலம்

    உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேரணி, கருத்தரங்கம்: போட்டியில் வென்றவர்களுக்கு சுகாதார துறை பாராட்டு

    adminBy adminJuly 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேரணி, கருத்தரங்கம்: போட்டியில் வென்றவர்களுக்கு சுகாதார துறை பாராட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: உலக மக்​கள்​தொகை தினத்​தையொட்​டி, சுகா​தா​ரத் துறை சார்​பில் பேரணி, விழிப்​புணர்வு போட்​டி, கருத்​தரங்​கம் நடை​பெற்​றன.

    39-வது உலக மக்​கள்​தொகை தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, செம்​மொழி பூங்​கா​வில் விழிப்​புணர்வு பேரணியை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார். தேனாம்​பேட்டை டிஎம்​எஸ் வளாகத்​தில் பேரணி நிறைவடைந்​தது. பின்​னர், அமைச்​சர் தலை​மை​யில்அதி​காரி​கள், ஊழியர்​கள் விழிப்​புணர்வு உறு​தி​மொழி ஏற்​றனர். தொடர்ந்து கருத்​தரங்​கம் நடந்தது. இளம் பரு​வத்​தினருக்​கான விழிப்​புணர்வு நல கையேடு, குடும்​பநல விளக்க கையேடு​களை வெளி​யிட்ட அமைச்​சர், விழிப்​புணர்வு போட்​டி​யில் வெற்றி பெற்ற செவிலிய மாணவி​களுக்கு பாராட்டு சான்​றிதழ், கேட​யங்​களை வழங்​கி​னார்.

    அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:‘ஆரோக்​கிய​மான போதிய இடைவெளி​யுடன் பிள்​ளைப் பேறு, திட்​ட​மிட்ட பெற்​றோருக்​கான அடை​யாளம்’ என்​பதே இந்த ஆண்​டின் மக்​கள்​தொகை தின கருப் பொருள். தமிழக சுகா​தா​ரத் துறை எடுத்த பல்​வேறு நடவடிக்​கைகளால், பேறு காலத்​தில் தாய்​மார்​கள் உயி​ரிழப்பு விகிதம் 39.4 சதவீதம் அளவுக்குகுறைந்​துள்​ளது. சிசு உயிரிழப்பு விகிதம் 1,000-க்கு 7.7 என்ற அளவில் குறைந்​துள்ளது.

    கிருஷ்ணகிரி, தரு​மபுரி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் குழந்தைதிரு​மணம் பெரிதும் கட்​டுப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதற்கான விழிப்​புணர்​வுக்​காக இளம் பரு​வத்​தினருக்​கான கையேடு, குடும்ப நலத்திட்ட கையேடு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

    சுகா​தா​ரத் துறை செயலர் செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண் தம்​பு​ராஜ், தமிழ்​நாடு சுகா​தார அமைப்பு திட்ட இயக்​குநர் வினீத், குடும்ப நலஇயக்​குநர் சித்​ரா, மருத்​து​வக்கல்வி, ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) தேரணி​ராஜன், பொது சுகா​தா​ரம், நோய் தடுப்பு மருந்துதுறை கூடு​தல் இயக்குநர் சோமசுந்​தரம், துணை இயக்குநர்சங்​கரேஸ்​வரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

    September 15, 2025
    மாநிலம்

    வக்பு சட்டம் | ஆட்சியர் அதிகாரம் உள்ளிட்ட சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

    September 15, 2025
    மாநிலம்

    அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இன்று ஊறு ஏற்பட்டுள்ளது – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

    September 15, 2025
    மாநிலம்

    அண்ணாவின் 117வது பிறந்த நாள்: இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் மரியாதை

    September 15, 2025
    மாநிலம்

    “எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள்” – விஜய்யை மறைமுகமாக சாடிய ராஜேந்திர பாலாஜி

    September 15, 2025
    மாநிலம்

    விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாள்: நாளை முதல்வர் மலர் தூவி மரியாதை

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள வக்பு சட்ட விதிகள் குறித்து அரசு ஆராயும்: கிரண் ரிஜிஜு
    • “விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து
    • உங்கள் பற்களை சேதப்படுத்திய பிறகு கழுவுகிறதா? ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245 மி.மீ மழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மாயம்
    • வக்பு சட்டம் | ஆட்சியர் அதிகாரம் உள்ளிட்ட சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.