Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உலகை ஈர்க்கும் மாநிலம் தமிழகம்; தொழில் துறையில் இரட்டை இலக்க வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    மாநிலம்

    உலகை ஈர்க்கும் மாநிலம் தமிழகம்; தொழில் துறையில் இரட்டை இலக்க வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    adminBy adminOctober 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உலகை ஈர்க்கும் மாநிலம் தமிழகம்; தொழில் துறையில் இரட்டை இலக்க வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்​னை​யில் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு துறைக்​கான சர்​வ​தேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தமிழகம் உலகை ஈர்க்​கும் மாநில​மாக உயர்ந்​திருக்​கிறது என்று தெரி​வித்​தார்.

    சென்​னை​யில், டிட்​கோ, பிசிஐ ஏரோஸ்​பேஸ் (பி​ரான்​ஸ்), மற்​றும் தமிழ்​நாடு ஏரோஸ்​பேஸ் தொழில் வளர்ச்சி கூட்​டமைப்பு இணைந்து நடத்​தும் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​துறை சார்ந்த நிறு​வனங்​களுக்​கான – ஏரோ-டெஃப்​-​கான் 25 (AeroDefCon 2025) என்ற மூன்று நாள் சர்​வ​தேச மாநாட்டை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். இம்​மா​நாட்​டில் 19 நாடு​கள் மற்​றும் 300 நிறு​வனங்​கள் பங்​கேற்​றுள்​ளன.

    தொழில்​துறை, கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனங்​களுக்​கிடையே 5,000-க்​கும் மேற்​பட்ட வணிக சந்​திப்பு கூட்​டங்​களும் நடை​பெறுகின்​றன. இம்​மா​நாட்​டின் கண்​காட்​சி​யில் முன்​னணி நிறு​வனங்​கள், நடுத்தர ரக நிறு​வனங்​கள் மற்​றும் பாது​காப்பு பொதுத்​துறை நிறு​வனங்​கள் தங்​கள் அரங்​கு​களை அமைத்​துள்​ளன.

    மாநாட்​டில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: வான்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​துறை சார்ந்த நிறு​வனங்​களுக்​கான – ஏரோ-டெஃப்​-​கான் 25 என்ற இந்த மாநாட்டை தமிழகத்​தில் முதன்​முறை​யாக நாம் தொடங்கி வைத்​திருக்​கிறோம். தமிழகம் இன்​றைய தினம், இந்​தி​யாவை ஈர்க்​கும் நிலை​யில் இருந்​து, உலகை ஈர்க்​கும் மாநில​மாக உயர்ந்​திருக்​கிறது. இப்​படிப்​பட்ட முன்​னோடி​யான மாநாடு​களை நம்​முடைய தொழில்​துறை சார்​பில் நடத்​து​வ​தால்​தான், இந்த மாநாடு​கள் எல்​லாம், உலகள​வில் பேசப்​படு​கிறது. மேலும், அனைத்​து​வித​மான வளர்ந்துவரும் தொழில்​களை​யும் கொண்ட மாநில​மாக தமிழகம் இருப்​ப​தன் அடை​யாளம்தான் இந்த மாநாடு. இது வெறும் கண்​காட்சி இல்​லை. புதிய தொழில்நிறு​வனங்​கள், உற்​பத்​தியாளர்​கள் ஆகியோரை கண்டறிந்​து, அவர்​களிடையேகூட்டு முயற்​சி​யில் புதிய தொழில் ஒப்​பந்​தங்​களை ஏற்படுத்​து​வதற்​கான தளம்.

    தமிழகம் உற்​பத்தி துறை​யில் லீட​ராக மாறிக்​கொண்டு வரு​கிறது. தமிழ்​நாடு பாது​காப்பு தொழில்​துறை வழித்​தடம் எதிர்​காலத்​தில் முக்​கிய பங்​காற்ற இருக்​கிறது. உயர்தர ஜெட் இன்​ஜின் பாகங்​களில் இருந்து, டிரோன்​கள் உற்​பத்தி வரை நடை​பெற இருக்​கிறது. வளர்ந்​து​வரும் விண்​வெளி தொழில்​நுட்​பம் சார்ந்த உற்​பத்தி பிரிவு​கள் இதில் இருக்​கின்​றன. தமிழ்​நாடு பாது​காப்பு தொழில்துறை வழித்​தடத் திட்​டத்தை செயல்​படுத்த தொடங்​கிய​தில் இருந்​து, இது​வரை ரூ.23 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டிருக்​கின்​றன. இதில், ரூ.5 ஆயிரம் கோடி மதிப்​பிலான திட்​டங்​கள் ஏற்​கெனவே செயல்​படுத்​தப்​பட்​டிருக்​கிறது. 2032-க்​குள், ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க நாங்​கள் இலக்கு நிர்​ண​யித்​திருக்​கிறோம். இந்த வழித்​தடத்​தில் இருக்​கும், ஒவ்​வொரு நகர​மும் தனித்​து​வமான மையங்​களாக விளங்​கு​கின்​றன.

    இந்த நிகழ்​வில். எங்க ளோடு இணைந்​திருக்​கும் 19-க்​கும் மேற்​பட்ட நாடு​களு​டன் சேர்ந்​து, தொழில் வளர்ச்​சிக்​காக செயல்​படு​வோம். வடிவ​மைப்​பு, மேம்​பாடு, உற்​பத்தி மற்​றும் ஏற்​றுமதி ஆகிய​வற்றுக்​கான முன்​னணி தளமாக தமிழகம் திகழ வேண்​டும். அதற்கு பெரும் ஆதர​வும் தேவை. வானூர்​தி, விண்​வெளி, கப்​பல் உற்​பத்தி மற்​றும் பாது​காப்​புத் துறை​களில் புது​மை​கள் நிறைந்த, ஏற்​றும​திக்கு உகந்த, தன்​னிறைவு பெற்ற, இந்​தி​யாவை உரு​வாக்க பாது​காப்​புத் துறை​யில் பணி​யாற்​றும் அறி​விய​லா​ளர்​களுக்​கும், தொழில் முனை​வோருக்​கும், முதலீட்​டாளர்​களுக்​கும் தமிழக அரசு எப்​போதும் துணை நிற்​கும். இந்​தி​யா​வின் பாது​காப்பை மட்​டுமல்ல, உலக அமை​தி, வளம் மற்​றும் முன்​னேற்​றத்தை இயக்​கும் ஆற்​றலாக​வும் தமிழகம் திகழும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    தொழில் துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா பேசும்​போது, “தமிழ்​நாடு பாது​காப்பு தொழில்​துறை வழித்​தடம் திட்​டத்​தில் சர்​வ​தேச தொழில் நிறு​வனங்​கள் முதலீடு செய்து இணைந்து செயல்​படு​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படும். தமிழ்​நாடு தொழில் வளர்ச்​சிக் கழகம் மூலம் பாது​காப்​பு, சோதனை மற்​றும் ஒருங்​கிணைப்பு மையங்​கள் அமைக்​கப்​படும். புதிய தொழில்​துறை பூங்​காக்​கள் உரு​வாக்​கப்​படும். அடுத்​ததாக 2027-ல் நடை​பெறும் மாநாடு இன்​னும் பெரிய அளவில் நடத்​தப்​படும்” என்​றார்​.

    இந்த மாநாட்​டில் அமைச்​சர் தா.மோ.அன்​பரசன், டி.ஆர்​.​பாலு எம்​.பி., இ.கருணாநிதி எம்​எல்ஏ, கடலோர காவல்​படை​யின் தலைமை இயக்​குநர் பரமேஷ் சிவ​மணி, பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்​பின் விஞ்​ஞானி பி.கே. தாஸ், தொழில் துறை செய​லா​ளர் வி.அருண் ராய், தொழில் வழி​காட்டி நிறுவன மேலாண்மை இயக்​குநர் தாரேஷ் அகமது, டிட்கோ மேலாண்மை இயக்​குநர் சந்​தீப் நந்​தூரி, பிசிஐ ஏரோஸ்​பேஸ் முதன்மை செயல் அலு​வலர் ஸ்டீபன் காஸ்​டெட், மற்றும் உயர்​ அலு​வலர்​கள்​ பங்​கேற்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கடலோர பகுதிகளில் மீட்பு, மாசு தடுப்பு பணியில் ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

    October 8, 2025
    மாநிலம்

    தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் காலமானார்: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

    October 8, 2025
    மாநிலம்

    பேரவைத் தலைவரை காப்பாற்ற பெரிய பிளான்? – ராதாபுரத்துக்காக இரண்டான நெல்லை கிழக்கு மாவட்ட திமுக!

    October 8, 2025
    மாநிலம்

    ‘நல்லா சொன்னாரு நமமுக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா’

    October 8, 2025
    மாநிலம்

    எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு: பின்னணி என்ன?

    October 8, 2025
    மாநிலம்

    தேர்தல் விரோதக் கொலையில் 9 பேருக்கு ஆயுள்: கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

    October 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கடலோர பகுதிகளில் மீட்பு, மாசு தடுப்பு பணியில் ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை
    • வாழை சுகாதார நன்மைகள்: தினமும் இரண்டு வாழைப்பழங்களை சாப்பிடுவது இந்த உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் காலமானார்: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
    • Instagram உரையாடல்களைக் கேட்கிறீர்களா? மக்கள் சமீபத்தில் பேசிய விஷயங்களின் விளம்பரங்களை ஏன் பார்க்கிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பேரவைத் தலைவரை காப்பாற்ற பெரிய பிளான்? – ராதாபுரத்துக்காக இரண்டான நெல்லை கிழக்கு மாவட்ட திமுக!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.