Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உலகிலேயே பழமையான உயிருள்ள மொழி தமிழ்: ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்
    மாநிலம்

    உலகிலேயே பழமையான உயிருள்ள மொழி தமிழ்: ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

    adminBy adminJune 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உலகிலேயே பழமையான உயிருள்ள மொழி தமிழ்: ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உலகிலேயே பழமையான, உயிருள்ள மொழி தமிழ் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம் சூட்டினார்.

    ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ என்ற தொடர் நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசியதாவது: தமிழ்மொழி மிகவும் பழமையான உயிருள்ள மொழி, இலக்கிய செழுமைமிக்கது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படும் மொழி. உலகிலேயே மிகவும் உன்னதமான மொழி என்று சொல்வதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது தமிழ் மொழி. அந்த வகையில், தமிழ் மொழியை தன்னகத்தை கொண்டுள்ள பாரதம் மிகவும் பெருமைப்படுகிறது.

    இவ்வளவு பழையும் செழுமையும் மிக்க தமிழ் மொழி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனிக்காகவும், ஆங்கிலேய அரசு நிர்வாகத்துக்காவும் வேலைவாய்ப்பு நோக்கில் ஆங்கில கல்வி முறையை அறிமுகப்படுத்தினர். நம்மை தாழ்வுமனப்பான்மை மிக்கவர்களாக மாற்ற விரும்பிய அவர்கள் கல்விமுறையை ஒரு கருவியாக தேர்வுசெய்தனர்.

    அதன்மூலம் தாங்கள் விரும்பியவற்றை எல்லாம் நமக்கு கற்றுக்கொடுத்தனர். அவர்கள்தான் மேலானவர்கள் என்றும் அவர்கள் இலக்கியங்கள்தான் மேலானவை என்றும் கற்பித்தனர். தமிழ்மொழியை அடிமைகளின் மொழி என்றனர். ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் அடைந்த பின்னரும் இன்னும் ஆங்கில மோகம் தொடர்கிறது. பிற மொழிகளை கற்கும்போது அவை நம்மொழிகளைவிட மேலானவை என்று கருதுவது விரும்பத்தக்கதல்ல. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில ஆங்கில வழிக்கல்வி உகந்தது என்று ஆங்கிலேயர்கள் பிரச்சாரம் செய்தனர். பழமையும் செழுமையும் உள்ள நமது தாய்மொழியில் அறிவியலையும் தொழில்நுட்பத்தையம் படிக்காமல் ஆங்கில மொழியில்தான் படிக்க வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி. காலனியாதிக்கத்தின் எச்சம் இன்றும் தொடர்கிறது.

    பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க நமது நாகரீகத்தையும் மேற்கத்திய நாகரீகத்தையும் ஒப்பிடக் கூடாது. 2 ஆயிரம் ஆண்டு பழைமையான நமது இலக்கிய படைப்புகளுடன் சில நூறு ஆண்டுகள் பழமையான வெளிநாட்டு படைப்புகளுடன் எப்பிட ஒப்பிட இயலும். வெளிநாட்டினருடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கும் மனோபாவம் முதலில் மாற வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

    முன்னதாக, டெல்லி கலை இலக்கிய பேரவையின் தலைவர் பொன் சங்கரபாண்டியன், செந்தமிழ் சொல்வேந்தர் பேரவையின் தலைவர் பி.பாலமுருகன் ஆகியோர் வரவேற்றனர். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து தமிழறிஞர்களை ஆளுநர் கவுரவித்தார். மலேசியா, சிங்கப்பூர், கத்தார், பக்ரைன், குவைத், சவுதி அரேபியா உட்பட 15 நாடுகளில் இருந்தும் தமிழறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு முன்பாக, ஆளுநர் மாளிகை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘கம்பர் வனம்’ பூங்காவை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்து பார்வையிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது – சென்னை ரிப்பன் மாளிகை பகுதியில் நள்ளிரவில் நடந்தது என்ன?

    August 14, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? – அரசை சரமாரியாக சாடிய விஜய்

    August 14, 2025
    மாநிலம்

    தாம்பரத்தில் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் போராட்டம்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு

    August 14, 2025
    மாநிலம்

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: 27.63 லட்சம் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி

    August 14, 2025
    மாநிலம்

    விளையாட்டு வீரர்களுக்கு ரூ.23.40 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

    August 14, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் வழக்கில் நடந்த வாதமும், உயர் நீதிமன்ற உத்தரவும் – ஒரு பார்வை

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரோஸ்மேரி ஆலை: லுக் -அலைக்ஸிலிருந்து உண்மையான ஒன்றை எவ்வாறு கண்டறிவது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முதல்வர் கோப்பை விளையாட்டு: இணையதள முன்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு
    • ‘கூலி’ ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம் முதல் படக்குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து வரை
    • போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது – சென்னை ரிப்பன் மாளிகை பகுதியில் நள்ளிரவில் நடந்தது என்ன?
    • இரத்த அழுத்தத்தைக் குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள்: வாழைப்பழங்கள் மற்றும் ப்ரோக்கோலி விளக்கினர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.