Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உயிரிழந்ததை உறுதி செய்த பிறகும் அஜித்குமார் உடலை போலீஸார் எடுத்து சென்றனர்: நீதிபதியிடம் அரசு மருத்துவர்  கூறியது என்ன?
    மாநிலம்

    உயிரிழந்ததை உறுதி செய்த பிறகும் அஜித்குமார் உடலை போலீஸார் எடுத்து சென்றனர்: நீதிபதியிடம் அரசு மருத்துவர்  கூறியது என்ன?

    adminBy adminJuly 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உயிரிழந்ததை உறுதி செய்த பிறகும் அஜித்குமார் உடலை போலீஸார் எடுத்து சென்றனர்: நீதிபதியிடம் அரசு மருத்துவர்  கூறியது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்கு​மார் உயிரிழந்​துவிட்​டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்ன​தாக கூறி, போலீஸார் தங்கள் வாகனத்தில் எடுத்து சென்றனர் என்று மதுரை மாவட்ட நீதிபதியிடம் அரசு மருத்துவர் சாட்சி​யம் அளித்துள்ளார்.

    சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அடுத்த மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (27). நகை திருட்டு புகார் தொடர்​பான விசா​ரணை​யின்​போது, தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் இவர் உயி​ரிழந்​தார். இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதி​மன்ற நீதிபதி ஜான் சுந்​தர்​லால் சுரேஷ் விசா​ரணை நடத்​தி, அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

    இதை தொடர்ந்​து, மாவட்ட நீதிபதி ஜான் சுந்​தர்​லால் சுரேஷ் கடந்த 2-ம் தேதி திருப்​புவனம் காவல் நிலை​யம் அருகே உள்ள நெடுஞ்​சாலைத் துறை ஆய்வு மாளி​கை​யில் தங்​கி, விசா​ரணையை தொடங்​கி​னார். அன்​றைய தினம் சிவகங்கை ஏடிஎஸ்பி சுகு​மாறன், திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார் ஆகியோர், வழக்கு தொடர்​பான ஆவணங்​களை நீதிப​தி​யிடம் ஒப்​படைத்​தனர். தொடர்ந்​து, கோயில் பணி​யாளர்​கள், ஆட்டோ ஓட்​டுநர் உட்பட பலரிடம் 12 மணி நேரத்​துக்​கும் மேலாக நீதிபதி விசா​ரணை நடத்​தி​னார்.

    2-வது நாளில் (ஜூலை 3) கோயில் பணி​யாளர்​கள் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசா​ணை நடத்​தி​னார். அஜித்​கு​மாரின் தாய் மால​தி, சகோ​தரர் நவீன்கு​மார் வாக்​குமூலம் அளித்​தனர்.இந்​நிலை​யில், 3-வது நாள் விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி ஜான் சுந்​தர்​ லால் சுரேஷ் காலை 8.45 மணி அளவில் விசா​ரணையை தொடங்​கி​னார். திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனை​யில் சம்பவ நாளன்று பணி​யில் இருந்த மருத்​து​வர் கார்த்​தி​கேயன், அஜித்​கு​மாரை போலீ​ஸார் ஏற்​றிச் சென்ற ஆட்டோ ஓட்​டுநர் அய்​ய​னார், மடப்​புரம் காளிகோயில் முன்பு பழக்​கடை நடத்​தும் வியா​பாரி​கள், திருப்​புவனம் காவல் நிலைய சிறப்பு எஸ்​.ஐ. சிவக்​கு​மார், அஜித்​கு​மார் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் சதாசிவம், ஏஞ்​சல் ஆகியோரிடம் நீதிபதி விசா​ரணை நடத்​தி​னார்.

    அஜித்​கு​மாரை முதலில் திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனைக்​கு​தான் போலீ​ஸார் கொண்டு சென்​றுள்​ளனர். அங்கு பரிசோ​தித்​து, அவர் உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். ஆனாலும்,பிரேத பரிசோதனைக்கு அனுப்​பாமல், உடலை போலீ​ஸார் எடுத்​துச் சென்​றுள்​ளனர். இந்த தகவலை மாவட்ட நீதிப​தி​யிடம் திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர் கார்த்​தி​கேயன் நேற்று சாட்​சி​ய​மாக தெரி​வித்​துள்​ளார்.

    இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் அரசு மருத்​து​வர் கார்த்​தி​கேயன் கூறிய​தாவது: ஜூன் 28-ம் தேதி மாலை 6.35 மணிக்கு திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனைக்கு ஆட்​டோ​வில் அஜித்​கு​மாரை போலீ​ஸார் கொண்டு வந்​தனர். நான் பரிசோ​தித்​த​போது, அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​டார் என்பதை அறிந்​து, போலீ​ஸாரிடம் தெரி​வித்தேன். பின்​னர், உடலை பிரேதப் பரிசோதனை அறை​யில் வைக்​கு​மாறு கூறினேன். ஆனால், தனிப்​படை ​போலீ​ஸார், உயர்அதி​காரி​கள் சொன்​ன​தாக கூறி, உடலைஅவர்​களது வாக​னத்​தில் எடுத்​துச் சென்​றனர். இதை நீதிப​தி​யிடம் தெரி​வித்தேன்.இவ்​வாறு அவர் கூறி​னார்.

    மடப்​புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் அய்​ய​னார் கூறும்​போது, ‘‘எனது ஆட்​டோ​வில்​தான் போலீ​ஸார் அஜித்​கு​மாரை ஏற்​றி, திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்​டு​சென்​றனர். அஜித்​கு​மாரை 4 போலீ​ஸார் தூக்கி வந்​தனர். அப்​போது அவரது உடலில் எந்த அசை​வும் இல்​லை. கண்​கள் மூடி இருந்​தன. அவர் உயி​ரிழந்​து​விட்​ட​தாக போலீ​ஸாரும் பேசிக் கொண்​டனர். இதை நீதிப​தி​யிடம் தெரி​வித்​தேன்’’ என்​றார். தனிப்​படை போலீ​ஸார் கொடூர​மாக தாக்​கிய​தில் விசா​ரணை​யின்​போதே அஜித்​கு​மார் உயி​ரிழந்​துள்​ளார். ஆனால், போலீ​ஸார் அதை மறைக்​கும் வித​மாக, ‘‘நாங்​கள் விசா​ரிக்​கும்​போது, அஜித்​கு​மார் தப்​பியோட முயன்று கீழே விழுந்​து​விட்​டார். அப்​போது அவருக்கு வலிப்பு ஏற்​பட்​ட​தால், ஆட்​டோ​வில் திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனைக்​கும், அங்​கிருந்து சிவகங்கை தனி​யார் மருத்​து​வ​மனைக்​கும் கொண்டு சென்​றோம். பின்​னர் மதுரை தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​ற​போது, அவர் இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் உறுதி செய்​தனர்’’ என்று ஆரம்​பத்​தில் கூறி​யிருந்​தனர். இந்த நிலை​யில், முதலில் திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு வந்​த​போதே, அஜித்​கு​மார் உயி​ரிழந்​து​விட்​டார் என்​பது தற்​போது அரசு மருத்​து​வரின் சாட்​சி​யம் மூலம் உறுதியாகியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காதர் மொய்தீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

    July 5, 2025
    மாநிலம்

    புதிய ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    July 5, 2025
    மாநிலம்

    கொறடா பதவியில் இருந்து பாமக எம்எல்ஏ அருளை மாற்றுமாறு கடிதம்: அவரே நீடிப்பார் என ராமதாஸும் கடிதம் அளிப்பு

    July 5, 2025
    மாநிலம்

    கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டம்

    July 5, 2025
    மாநிலம்

    திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களுக்கு ஏபிஆர்ஓ பணி வழங்குவதா? – பழனிசாமி குற்றச்சாட்டு

    July 5, 2025
    மாநிலம்

    மத்திய அரசு வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காதர் மொய்தீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
    • மூளை செயல்பாடு மற்றும் அவற்றின் இயற்கை மூலங்களை அதிகரிக்கும் 6 ஊட்டச்சத்துக்கள்
    • புதிய ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    • கொறடா பதவியில் இருந்து பாமக எம்எல்ஏ அருளை மாற்றுமாறு கடிதம்: அவரே நீடிப்பார் என ராமதாஸும் கடிதம் அளிப்பு
    • கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.