Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உதவிப் பேராசிரியர் நியமனதுக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
    மாநிலம்

    உதவிப் பேராசிரியர் நியமனதுக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

    adminBy adminJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உதவிப் பேராசிரியர் நியமனதுக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்காமல் மேற்கொள்ளப்பட்ட 5 உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் காலியாக இருந்த 64 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, 5 உதவி பேராசிரியர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் மகேஸ்வரி, மேனகா உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்குகள் நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை வழங்குவது குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தங்களுக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. தங்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ஒப்புதல் வழங்கும்படி கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட வேண்டும்.” என்று வாதிடப்பட்டது.

    அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், “இன சுழற்சி முறை மற்றும் தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை என உரிய நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை. நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரி தான் வழக்கு தொடர முடியும். நியமனம் பெற்றவர்கள் வழக்கு தொடர முடியாது.” என்று வாதிட்டார்.

    அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

    August 17, 2025
    மாநிலம்

    அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

    August 17, 2025
    மாநிலம்

    அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – முழு விவரம்

    August 17, 2025
    மாநிலம்

    நீலகிரி, கோவையில் இன்று கனமழை

    August 17, 2025
    மாநிலம்

    பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி

    August 17, 2025
    மாநிலம்

    தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி திடீர் வருகை!

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
    • சக்கர நாற்காலி கட்டுப்பட்ட பெண் மீண்டும் காலில் இறங்குகிறாள்; இந்த உணவு அவளுக்கு உதவியது என்று கூறுகிறது – டைம்ஸ் ஆப் இந்தியா
    • பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கூகுள் ஜெமினி ஏஐ சேவை
    • அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 
    • எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு முடிவுகள் நாளை வெளியீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.