Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க” – ஊட்டி தாவரவியல் பூங்காவில் வாக்கு சேகரித்​த முதல்வர்
    மாநிலம்

    “உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க” – ஊட்டி தாவரவியல் பூங்காவில் வாக்கு சேகரித்​த முதல்வர்

    adminBy adminMay 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க” – ஊட்டி தாவரவியல் பூங்காவில் வாக்கு சேகரித்​த முதல்வர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஊட்டி: ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் புகழ்​பெற்ற 127-வது மலர்க் கண்​காட்​சியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த 3-ம் தேதி கோடை விழா கோத்​தரி காய்​கறி கண்​காட்​சி​யுடன் தொடங்​கியது. தொடர்ந்​து, 127-வது மலர்க் கண்​காட்சி நேற்று தொடங்​கியது.

    கண்​காட்சி வரும் 25-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தக் கண்​காட்​சி​யில் சுற்​றுலாப் பயணி​களைக் கவரும் வகை​யில் ஜெர்​மனி​யம் சைக்​ளோபின் பால்​சம், புதிய ரக ஆர்​னமெண்​டல்​கேல், ஓரியண்​டல் லில்​லி, பேன்சி மேரி​கோல்​டு, ஜினி​யா, டெல்​முனி​யம் உள்​ளிட்ட 275 வகை​யான, 7.5 லட்​சம் மலர்ச் செடிகள் பூங்​கா​வின் பல்​வேறு பகு​தி​களில் நடவு செய்​யப்​பட்​டுள்​ளன. மேலும், மலர் மாடம் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் 45 ஆயிரம் மலர்த் தொட்​டிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன.

    விழா​வின் முக்​கிய அம்​ச​மாக சோழர்​களின் பெரு​மையை விளக்​கும் வகை​யில் ராஜ​ராஜ சோழனின் அரண்​மனை உரு​வம் 2 லட்​சம் கார்​னேசன் மற்​றும் ரோஜா, கிரை​சாந்​தம் மலர்​களால் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல, கரி​கால​னால் கட்​டப்​பட்ட கல்​லணை உரு​வம் 65 ஆயிரம் மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மொத்​தம் 7 லட்​சத்​திற்​கும் அதி​க​மான மலர்​களால் பட்​டத்து யானை, அன்​னப்​பறவை படகு உள்​ளிட்ட அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

    கள்​ளிச்​செடி மாளிகை மற்​றும் கண்​ணாடி மாளிகை புதுப்​பிக்​கப்​பட்​டு, அரிய​வகை தாவரங்​கள் மற்​றும் மலர்ச் செடிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன. தாவர​வியல் பூங்கா முழு​வதும் வண்ண விளக்​கு​கள் மற்​றும் தோரணங்​களால் அழகுபடுத்​தப்​பட்​டுள்​ளது. வழக்​க​மாக 5 நாட்​கள் நடக்​கும் மலர்க் கண்​காட்சி இம்​முறை 11 நாட்​கள் நடப்​ப​தால், பூந்​தொட்​டிகள் மற்​றும் மலர்ச் செடிகளின் எண்ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டு உள்ளது.

    மலர்க் கண்​காட்​சியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று காலை தொடங்​கி​வைத்​துப் பார்​வை​யிட்​டார். அமைச்​சர்​கள் எம்​ஆர்​கே. பன்​னீர்​செல்​வம், மு.பெ.​சாமி​நாதன், அரசு கொறடா கா.​ராமச்​சந்​திரன், நீல​கிரி எம்​.பி. ஆ.ராசா முன்​னிலை வகித்​தனர். தொடர்ந்​து, புதுப்​பிக்​கப்​பட்ட கண்​ணாடி மாளி​கையை முதல்​வர் திறந்​து​வைத்​து, கோத்​தர், தோடர் பழங்​குடி​யினர்​களின் கலை நிகழ்ச்​சிகளை கண்டு ரசித்​தார்.

    நிகழ்​வில், மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்​யா, வேளாண் துறைச் செயலர் வ.தட்​சிணா​மூர்த்​தி, தோட்​டக்​கலை இயக்​குநர் குமார​வேல் பாண்​டியன், எஸ்​.பி. என்​.எஸ்​.நிஷா, ஊட்டி எம்​எல்ஏ ஆர்​.கணேஷ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். தொடக்க விழாவுக்​குப் பின்​னர், மலர்​களால் செய்​யப்​பட்ட அரண்​மனை, கல்​லணை உள்​ளிட்​ட​வற்றை சுற்​றுலாப் பயணி​கள் ஆர்​வத்​துடன்​ செல்ஃபி எடுத்​து மகிழ்​ந்​தனர்​.

    வாக்கு சேகரித்த முதல்வர்… மலர்க் கண்​காட்​சியை மனைவி துர்கா உடன் பார்வையிட்ட முதல்வர், ஆயிரக்​கணக்​கான மலர்​களைக் கொண்டு வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள அரியணை​யில் அமர்ந்து புகைப்​படங்​கள் எடுத்​துக் கொண்டார். அப்போது, ‘உதயசூரியனுக்கு ஓட்​டுப் போடுங்க’ என்று பூங்​கா​வில் இருந்​தவர்​களிடம் முதல்வர் கேட்​டுக் கொண்​டார். மலர் அரியணை​யில் அமர்ந்து 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு வாக்கு சேகரித்​தது அனைவரின் கவனத்தையும்​ ஈர்​த்​தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மின்வாரியத்தில் மாற்றுத் திறனாளிகள் பதவி உயர்வில் சலுகை அறிவிப்பு

    July 14, 2025
    மாநிலம்

    ஜூலை 24-ம் தேதி முதல் 36 தொகு​திகளில் இபிஎஸ் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்

    July 14, 2025
    மாநிலம்

    திருவண்ணாமலை மாநகராட்சி முதல் மேயருக்கு செங்கோல் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி

    July 14, 2025
    மாநிலம்

    சங்க கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பதில் தகராறு: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினரிடையே மோதல்

    July 14, 2025
    மாநிலம்

    பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்​: கொமதேக ஈஸ்வரன் அறிவிப்பு

    July 14, 2025
    மாநிலம்

    இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 2030-க்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டம்
    • இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
    • இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை கைது செய்தது அமெரிக்கா
    • மின்வாரியத்தில் மாற்றுத் திறனாளிகள் பதவி உயர்வில் சலுகை அறிவிப்பு
    • கொழுப்பு கல்லீரல் தரம் 1 மற்றும் தரம் 2 க்கு இடையிலான வேறுபாடு: இரண்டையும் மாற்றியமைக்க நான்கு புள்ளி சூத்திரம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.