Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – நடவடிக்கையும் சர்ச்சையும்
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – நடவடிக்கையும் சர்ச்சையும்

    adminBy adminSeptember 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – நடவடிக்கையும் சர்ச்சையும்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள்’ வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் நில அளவை ஊழியர்களைப் பலிகடா ஆக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக.29-ம் தேதி காலை ‘உங்களு டன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமாரை இடமாற்றம் செய்தும், அலுவலகத்தில் அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையையும் மாவட்ட ஆட்சியர் எடுத்தார்.

    தொடர்ந்து திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வட்டாட்சியர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

    வட்டாட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத தால் 2 வாரங்களாகியும், மனுக்களைத் திருடிய நபரைக் கண்டறிய முடியாமல் போலீஸார் திணறுகின்றனர். இதனிடையே திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில் பணிபுரியும் முதுநிலை வரைவாளர் சரவணனுக்கு 17 ‘பி’-ன் கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவுட்சோர்சிங்கில் பணிபுரியும் புல உதவியாளர் அழகுப் பாண்டியை பணிநீக்கம் செய்யவும் நில அளவைத்துறை உதவி இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதாகக் கூறப் படுகிறது.

    போலீஸ் விசாரணை முடி வடையாத நிலையில் நில அளவை ஊழியர்களைப் பலிகடா ஆக்க முற்சிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நில அளவைத் துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று முறையிட்டனர். மேலும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலச் செயலாளர் அருள்ராஜ் வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலர், வருவாய்த் துறைச் செயலர் ஆகியோருக்கு அனுப்பிய மனு வில் கூறியிருப்பதாவது: ஆக.26-ம் தேதி சமர்ப்பிக்கப் பட்ட பட்டா மாறுதல் கோப்பு களுக்கு ஆக.26 இரவு, ஆக.27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வட்டாட்சியர் ஒப்புதல் அளித்தார்.

    ஆக.28-ம் தேதி காலை சில நத்தம் பட்டா உட்பிரிவு கோப்புகளை மட்டுமே நில அளவைப் பிரிவிடம் திருப்பிக் கொடுத்தார். மீதிக் கோப்புகளைக் கொடுக்கவில்லை. நில அளவைப் பிரிவிடம் கொடுத்த கோப்புகளில் எதுவும் காணாமல் போகவில்லை. ஆனால், முதுநிலை வரைவாளர் சரவணன் மற்றும் லெட்சுமிபிரியா ஆகியோருக்கு விளக்கம் கேட்டு 17 ‘ஏ’ குறிப்பாணை வழங்கப் பட்டது. கோட்டாட்சியர் முறையாக விசாரிக்கவில்லை.

    அதோடு போலீஸ் விசா ரணை முடிவடையாத நிலையில் ஒருதலைப்பட்சமாக சந்தேக அடிப்படையில் நில அளவை ஊழியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். அதை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வெளிநாட்டு முதலீடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இபிஎஸ்

    September 9, 2025
    மாநிலம்

    அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடன் பேசியது என்ன? – செங்கோட்டையன் விவரிப்பு

    September 9, 2025
    மாநிலம்

    “திமுக அரசு செய்வது சமூக நீதி துரோகம்” – கர்நாடக சாதிவாரி கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி அன்புமணி சாடல்

    September 9, 2025
    மாநிலம்

    திருப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முன்னேற்பாடுகள் இல்லாததால் நெரிசல் – பொதுமக்கள் அவதி

    September 9, 2025
    மாநிலம்

    “சூழ்ச்சி அரசியலால் தமிழக வளர்ச்சியை தடுக்க முடியவில்லை” – முதல்வர் ஸ்டாலின்

    September 9, 2025
    மாநிலம்

    அமமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வெளிநாட்டு முதலீடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இபிஎஸ்
    • இடுப்பு ஆரோக்கியம்: சிறுநீர் கழிக்கும் போது பெண்கள் இதைச் செய்வதை நிறுத்த வேண்டும்: பெண்களுக்கு இடுப்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் குளியலறையின் தவறுகளை நிபுணர் எச்சரிக்கிறார்
    • “சிறையில் வாழ முடியவில்லை… எனக்கு விஷம் கொடுங்கள்!” – நீதிபதியிடம் நடிகர் தர்ஷன் முறையீடு
    • அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடன் பேசியது என்ன? – செங்கோட்டையன் விவரிப்பு
    • மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது- மற்றும் மாத்திரை அல்லது எண்ணெய், இது எடுக்க சிறந்த வழியாகும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.