Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்

    adminBy adminJuly 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை மக்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமை சிதம்​பரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்​கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விடு​பட்​ட​வர்​கள் இதில் விண்​ணப்​பிக்​கு​மாறு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: மக்​களின் குறை​களை நேரடி​யாக கேட்​டறி​யும் திட்​டம் தொடங்​கப்​படும் என்று சட்​டப்​பேரவை கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, தமிழகத்​தில் உள்ள அனைத்து நகர்ப்​புற, ஊரக பகு​தி​களில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டம் தொடங்​கப்​படு​கிறது. தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கு​வது​தான் இதன் நோக்​கம்.

    இத்​திட்​டத்​தின்​கீழ் நகர்ப்​புறங்​களில் 3,768 முகாம்​கள், ஊரகப் பகு​தி​களில் 6,232 முகாம்​கள் என 10 ஆயிரம் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும். இதில் முதல் முகாமை, கடலூர் மாவட்​டம் சிதம்​பரம் நகராட்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்​கிறார். அதை தொடர்ந்​து, அனைத்து மாவட்​டங்​களி​லும் நவம்​பர் வரை முகாம் நடை​பெறும்.

    நகர்ப்​புறங்​களில் 13 துறை​களை சார்ந்த 43 சேவை​களும், ஊரகப் பகு​தி​களில் 15 துறை​களை சார்ந்த 46 சேவை​களும் வழங்​கப்​படும். அத்​துடன், மருத்​துவ முகாம்​களும் நடத்​தப்​படும். மேலும், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகு​தி​யுள்ள விடு​பட்ட பெண்​கள் இருந்​தால், முகாம் நடை​பெறும் நாளில் அங்கு சென்று விண்​ணப்​பத்தை அளிக்​கலாம். மகளிர் உரிமை தொகை திட்​டத்​துக்​கான விண்​ணப்​பம் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் மட்​டுமே வழங்​கப்​படும். இந்த முகாம்​களில் பெறப்​படும் விண்​ணப்​பங்​கள் மீது 45 நாட்​களில் உரிய நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

    முகாம் நடை​பெறும் நாள், இடம்குறித்த விவரங்​கள், அங்கு வழங்​கப்​படும் அரசு துறை​களின் திட்​டங்​கள், சேவை​கள், அதில் பயனடைவதற்​கான தகு​தி​கள், தேவைப்​படும் ஆவணங்​கள் குறித்து தன்​னார்​வலர்​கள் வீடு வீடாக சென்​று, தெரி​விப்​பார்​கள். தகவல் கையேடு, விண்​ணப்​பத்​தை​யும் வழங்​கு​வார்கள். இந்த பணி ஜூலை 7-ம் தேதி (நாளை) தொடங்க உள்​ளது. 3 மாதங்​கள் தொடர்ச்​சி​யாக நடைபெறும் இப்​பணி​யில் ஒரு லட்​சம் தன்​னார்​வலர்​கள் ஈடு​படுகின்றனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான விதி​களில் சில தளர்​வு​கள் அளிக்​கப்​பட்டு சமீபத்​தில் அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, அரசுத் துறை​களில் சிறப்பு கால​முறை ஊதி​யம் பெற்று தற்​போது ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களை சேர்ந்த ஓய்​வூ​தி​யர் அல்​லாத பெண்​கள் விண்​ணப்​பிக்​கலாம். அரசுத் துறை​களில் மானி​யம் பெற்று நான்​கு சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களை சேர்ந்த பெண்​களும் உரிமைத் தொகை பெற தகு​தி​யானவர்​கள்.

    அதே​போல, இந்​திரா காந்தி தேசிய விதவை ஓய்​வூ​தி​யம், ஆதர​வற்ற விதவை​கள் ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களில் ஓய்​வூ​தி​யம் பெறாத பெண்​கள் விண்​ணப்​பிக்​கலாம். கணவ​னால் கைவிடப்​பட்ட, 50 வயதுக்கு மேலாகி​யும் திரு​மண​மா​காத பெண்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களில்​ மற்​ற பெண்​கள்​ விண்​ணப்​பிக்​கலாம்​ என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “தமிழ்நாட்டில் பாஜக ஒருக்​காலும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து!” – அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா அதிரடி

    July 6, 2025
    மாநிலம்

    பாஜகவுக்கு தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் ஸ்டாலின் கருத்து

    July 6, 2025
    மாநிலம்

    அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து: என்ன காரணம்?

    July 6, 2025
    மாநிலம்

    திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சனம்

    July 6, 2025
    மாநிலம்

    ரயில் முன்பதிவு பட்டியல் 8 மணி நேரத்துக்கு முன் வெளியீடு

    July 6, 2025
    மாநிலம்

    திருப்புவனம் வழக்கில் தொடர்புபடுத்தி அவதூறு: காவல்நிலையத்தில் பாஜக பெண் நிர்வாகி புகார்

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பீனிக்ஸ் – திரை விமர்சனம்
    • “தமிழ்நாட்டில் பாஜக ஒருக்​காலும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து!” – அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா அதிரடி
    • டெல்லியில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு எதிரொலி: பழைய சொகுசு கார்கள் குறைந்த விலையில் விற்பனை
    • பாஜகவுக்கு தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் ஸ்டாலின் கருத்து
    • ஒவ்வொரு நாளும் நீங்கள் உண்மையில் எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? (குறிப்பு: இது நீங்கள் நினைப்பதை விட குறைவு) | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.