Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இளம்பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைத்தது: பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதல்வர், தலைவர்கள் வரவேற்பு
    மாநிலம்

    இளம்பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைத்தது: பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதல்வர், தலைவர்கள் வரவேற்பு

    adminBy adminMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இளம்பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைத்தது: பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதல்வர், தலைவர்கள் வரவேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பொள்​ளாச்சி வழக்​கின் தீர்ப்பை முதல்​வர், தலை​வர்​கள் வரவேற்​றுள்​ளனர். பெண்​களுக்கு இழைக்​கப்​பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்​திருக்​கிறது என அவர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.பொள்​ளாச்​சி​யில் இளம்​பெண்​கள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 9 பேருக்கு சாகும்​ வரை சிறைத் தண்​டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. இதற்கு முதல்​வர் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வரவேற்றுள்​ளனர்.

    முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: பொல்​லாத அதி​முக நிர்​வாகி உள்​ளிட்ட குற்​ற​வாளி​களால் நிகழ்த்​தப்​பட்ட பெருங்​கொடுமைக்கு நீதி

    கிடைத்​திருக்​கிறது. அதி​முக குற்​ற​வாளி அடங்​கிய கூடாரத்​தைப் பாது​காக்க முயற்​சித்த ‘சார்’கள் மானமிருந்​தால் வெட்​கித் தலைகுனியட்​டும்.

    தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: பெண்​கள் பாது​காப்பை உருக்​குலைக்​கும் குற்​றா​வாளி​கள் நீதி​யின் பிடி​யில் இருந்து என்​றும் தப்​பிக்க முடி​யாது. தமிழகத்​தில் பெண்களுக்கு எதி​ரான குற்​றங்​களும், போக்சோ வழக்​கு​களும் தொடர்ந்து அதி​கரித்து வரும் நிலை​யில் குற்​றமிழைக்க முற்​படும் கயவர்​களுக்கு ஓர் எச்​சரிக்கை மணி​யாக இத்​தீர்ப்பு இருக்​கும்.

    முன்​னாள் ஆளுநர் தமிழிசை: மலர் போன்று இருந்த பெண்​கள் கசக்கி வீசப்​பட்ட பொள்​ளாச்சி வழக்​கில் குற்​ற​வாளி​களுக்கு சாகும் வரை ஆயுள் தண்​டனை அளிக்​கப்​பட்ட தீர்ப்பு பெண்​களுக்கு எதி​ரான கொடுமை​களை தீர்த்து வைக்​கட்​டும்.

    இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் முத்​தரசன்: பாலின சமத்​து​வத்தை நோக்​கிய பயணத்​தில் கோவை மகளிர் நீதி​மன்​றத்​தின் தீர்ப்பு போராடும் பெண்​களுக்கு வாளும், கேடய​மு​மாக இருக்​கும். இந்த வரலாற்​றுச் சிறப்​பு மிக்க தீர்ப்பை வரவேற்​கிறோம்.

    மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: பாதிக்​கப்​பட்ட பெண்​களின் நீதிக்​கான உறு​தியை வெளிப்​படுத்தி குற்​ற​வாளி​களுக்கு தண்​டனையை உறு​தி​செய்​வது பெண்​களுக்கு பெரும் நம்​பிக்​கையை தரு​வ​தாகும். வன்​முறைக்கு இலக்​காகும் பெண்​களை மவுனித்​துப் போகச் செய்​யும் போக்கை இப்​பெண்​கள் முறியடித்துள்ளனர்.

    பாமக தலை​வர் அன்​புமணி: பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​களில் ஈடு​படு​வோருக்கு மிகக்​கடுமை​யான எச்​சரிக்கை விடுக்​கும் வகை​யில் இந்​தத் தீர்ப்பு வழங்​கப்​பட்​டிருக்​கிறது. என்​றாலும் இது தாம​திக்​கப்​பட்ட நீதி​தான். இதற்​குக் காரணம் போதிய எண்​ணிக்​கை​யில் மகளிர் சிறப்பு நீதி​மன்​றங்​கள் இல்​லாதது. எனவே ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் ஒரு மகளிர் சிறப்பு நீதி​மன்​றத்தை அமைக்க வேண்​டும்.

    தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: கடந்த 6 ஆண்​டு​களுக்​கும் மேல் துணிச்​சலாகப் போராடி, குற்​ற​வாளி​களுக்கு தகுந்த தண்​டனை பெற்​றுத்​தந்த பாதிக்​கப்​பட்ட சகோ​தரி​கள் அனை​வருக்​கும், இந்​தத் தீர்ப்பு ஓரள​வாவது மன ஆறு​தல் அளிப்​ப​தாக அமை​யும் என்று நம்​பு​கிறேன். இந்த வழக்​கில் நியா​யம் கிடைக்​கப் பாடு​பட்ட அனை​வருக்​கும் நன்​றி.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: இந்த தீர்ப்பு கொடுங்காயத்துக்கு இடப்பட்ட மாமருந்து. கூட்டுப் பாலியல் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

    தேமு​திக பொதுச்​செய​லா​ளர்பிரேமல​தா: பொள்​ளாச்சி பாலியல் வழக்​கில் உலகமே பாராட்​டக்​கூடிய தீர்ப்பை கோவை மகளிர் நீதி​மன்​றம் அறி​வித்து இருப்​பதை வரவேற்​கிறோம். இந்த வழக்கை ஒரு உதா​ரண​மாக எடுத்​துக் கொண்டு இனி வருங்​காலங்​களில் இளைஞர்​கள் இது​ போன்ற தவறுகளை செய்​யாமல் கண்​ணி​யத்தோடு இருக்க வேண்​டும்.

    தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: பொள்​ளாச்​சி​யில் நடந்த பாலியல் வன்​கொடுமை செயல் மிரு​கத்​தன​மானது. இது​போன்ற சம்​பவங்​கள் இனி நடக்​கக்​கூ​டாது. தவறான கண்​ணோட்​டத்​துடன் பெண்​களை பார்ப்​பவர்​களுக்​கும், சிந்​திப்​பவர்​களுக்​கும் இத்​தீர்ப்பு பாட​மாக அமை​யும்.

    அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: இந்த தீர்ப்பு பெண்​களிடம் ஈவு இரக்​கமின்றி அவர்​களுக்கு எதி​ரான குற்​றங்​களில் ஈடுபட முயற்​சிக்​கும் ஒவ்​வொரு​வருக்​கும் வழங்​கப்​பட்​டிருக்​கும் எச்​சரிக்கை மணி.

    தவெக தலை​வர் விஜய்: வரவேற்​கத்​தக்க தீர்ப்​பு. ஆனால் தாம​திக்​கப்​பட்ட நீதி, மறுக்​கப்​பட்ட நீதிக்​குச் சமம். எனவே பெண்​கள் மீதான பாலியல் துன்​புறுத்​தல் வழக்​கு​களை விசா​ரிக்க தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதி​மன்​றங்​கள் அமைத்​து, 90 நாட்​களுக்​குள் வி​சா​ரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

    இவர்​களு​டன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? – ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்

    July 3, 2025
    மாநிலம்

    20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன்: வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் நெகிழ்ச்சி

    July 3, 2025
    மாநிலம்

    வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்?- அன்புமணி

    July 3, 2025
    மாநிலம்

    விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைப்பது ஆபத்தானது: ராமதாஸ்

    July 3, 2025
    மாநிலம்

    மதுரை அமமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகி அதிமுகவில் இணையும் நிர்வாகிகள்!

    July 3, 2025
    மாநிலம்

    டிரான்ஸ்பார்மர்கள் முறைகேடு புகார்: செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசுப் பள்ளிகளில் பணிநிரவல் கலந்தாய்வு: ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் வழங்க தடை!
    • பழநி முருகன் கோயிலில் குடும்பத்துடன் நயன்தாரா சுவாமி தரிசனம்
    • காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? – ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்
    • ஆப்டிகல் மாயை- இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது உங்கள் மறைக்கப்பட்ட பலங்களை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பள்ளிக்கல்வித் துறையில் அதிகரிக்கும் காலிப் பணியிடங்கள்: பதவி உயர்வு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.