Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
    மாநிலம்

    இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

    adminBy adminJuly 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்​கான பொதுப் பிரிவு கலந்​தாய்வு இன்று (ஜூலை 14) முதல் தொடங்​கு​கிறது. முதல் சுற்​றில் 39,145 மாணவர்​கள் பங்​கேற்க உள்​ளனர். தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 417 பொறியியல் கல்​லூரி​களில் இளநிலை படிப்​பு​களுக்கு ஒரு லட்​சத்து 90,166 அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள் உள்​ளன.

    இவற்றை நிரப்​புவதற்​கான கலந்​தாய்வு தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநரகம் மூலம் இணைய வழி​யில் நடத்​தப்​படு​கிறது. அதன்படி நடப்​பாண்டு கலந்​தாய்​வில் பங்​கேற்க 3.02 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களில் 2 லட்​சத்து 41,641 மாணவர்​கள் கலந்தாய்​வில் பங்​கேற்க தகு​திபெற்​றனர். இவர்​களுக்​கான தரவரிசைப் பட்​டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளி​யானது.

    தொடர்ந்து பொறி​யியல் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வு கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்​கியது. முதல்​கட்​ட​மாக முன்​னாள் ராணுவ வீரரின் குழந்​தைகள், மாற்​றுத் திற​னாளி​கள், விளை​யாட்​டுப் பிரிவு மாணவர்​கள் ஆகியோ​ருக்​கான சிறப்​புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11-ம் தேதி வரை நடை​பெற்​றது. சிறப்​புப்​பிரி​வில் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடங்​கள் இருந்த நிலையில், அதில் 994 இடங்​களில் மட்​டுமே நிரம்​பின. இதில் 125 இடங்​கள் அரசுப் பள்ளி மாணவ, மாணவி​களுக்​கான 7.5 சதவீத ஒதுக்​கீட்​டில் நிரம்​பின.

    இதையடுத்து பொதுப் பிரிவுக்​கான கலந்​தாய்வு இன்று (திங்​கள்) முதல் தொடங்​கு​கிறது. முதல் சுற்று கலந்​தாய்வு ஜூலை 26-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதில் 39,145 மாணவர்​கள் பங்​கேற்க உள்​ளனர். மாணவர்​கள் தங்​களுக்கு பிடித்​த​மான கல்லூரிகளை ஜூலை 16-ம் தேதிக்​குள் தேர்வு செய்ய வேண்​டும்.

    இவர்​களுக்​கான தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை ஜூலை 17-ம் தேதி காலை​யில் வெளி​யிடப்​படும். அதற்கு மறு​நாள் (ஜூலை 18) மாலை 5 மணிக்​குள் ஒப்​புதல் அளித்து மாணவர்​கள் உறுதி செய்ய வேண்​டும். அப்​போது​தான் இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்கப்​படும். மேலும், இறுதி ஒதுக்​கீடு ஆணை பெற்ற மாணவர்​கள் ஜூலை 23-ம் தேதிக்​குள் கல்​லூரி​களில் சேர வேண்​டும்.

    இதற்​கிடையே கலந்​தாய்​வின்​போது விருப்​ப​மான கல்​லூரி​களை தேர்வு செய்​தல், தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை பெறு​தல், அதை உறு​தி​செய்து இறுதி ஒதுக்​கீட்டு ஆணை பெறு​வது என உரிய வழி​காட்​டு​தல்​களை பின்​பற்றி மாணவர்​கள் செயல்பட வேண்​டும். இதுதொடர்​பான கூடு​தல் விவரங்​களை எனும் வலைத்​தளத்​தில் அறிந்து கொள்​ளலாம். மொத்​தம் 3 சுற்றுகளாக நடை​பெறவுள்ள இந்த கலந்​தாய்வு ஆக. 20-ம் தேதி​யுடன் நிறைவு பெற​விருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்

    July 14, 2025
    மாநிலம்

    மக்களிடம் எடுபடுகிறதா எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம்? – ஒரு பார்வை

    July 14, 2025
    மாநிலம்

    திருவள்ளூர் ரயில் விபத்து: வழித்தடங்கள் சீரமைப்பு பணி நிறைவு: விரைவு, மின்சார ரயில் சேவை தொடங்கியது

    July 14, 2025
    மாநிலம்

    தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

    July 14, 2025
    மாநிலம்

    தாடண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் தூய்மைப் பணி மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

    July 14, 2025
    மாநிலம்

    மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு கணக்கீட்டு கருவியை மின்வாரியம் கொள்முதல் செய்து தர மின் ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உ.பி.யில் திருமண இணையதளம் மூலமாக 25 பெண்களை ஏமாற்றிய போலி ராணுவ அதிகாரி கைது
    • குடும்பப் படம் எடுப்பது தான் கடினம்: இயக்குநர் பாண்டிராஜ்
    • பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்
    • பருவமழையின் போது முடி வீழ்ச்சி ஏன் அதிகரிக்கிறது, அதைப் பற்றி நீங்கள் என்ன செய்ய முடியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நியூயார்க்கில் பூமியில் இதுவரை கண்டிராத சேத்த்பிஸ் டு ஏலம் மிகப்பெரிய செவ்வாய் பாறை; இது எங்கள் கிரகத்திற்கு எப்படி வந்தது என்பது இங்கே | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.