Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழவைத்த சம்பவம்: திண்டிவனத்தில் 5 பேர் மீது வழக்கு
    மாநிலம்

    இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழவைத்த சம்பவம்: திண்டிவனத்தில் 5 பேர் மீது வழக்கு

    adminBy adminSeptember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழவைத்த சம்பவம்: திண்டிவனத்தில் 5 பேர் மீது வழக்கு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த சம்பவத்தில் நகராட்சி தலைவரின் கணவர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. திண்டிவனம் நத்தைமேடு பகுதி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் மரூர் ராஜா, குண்டர் சட்டத்தில் கைதான சாராய வியாபாரி. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர்.

    இவரது மனைவி ரம்யா, திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர் ஆகஸ்ட் 29-ம் தேதி நகராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு, தெருவிளக்கு தொடர்பான கோப்புகளைத் தேடிக் கொண்டிருந்த இளநிலை உதவியாளர் முனியப்பனிடம், தனக்கு தேவையானபதிவேட்டை ரம்யா கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது கவுன்சிலர் ரம்யாவை முனியப்பன் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக புகார் அளிக்க, ஆணையரின் அறையில் கவுன்சிலர் ரம்யா காத்திருந்தார். அலுவல் பணி காரணமாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் அங்கிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த நகர்மன்றத் தலைவர், நிர்மலாவின் கணவரும் கவுன்சிலருமான ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் கவுன்சிலர் ரம்யாவிடம் இளநிலை உதவியாளர் முனியப்பன் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் வாய் சொல்லால் கேட்டால் போதுமா? என கேள்வி எழுந்ததால் இளநிலை உதவியாளர் முனியப்பன் கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்துள்ளார்.

    இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேலாளர் நெடுமாறனிடம் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் சார்பில் ஜனார்த்தன் நேற்று முன்தினம் மனு அளித்தார். இதற்கிடையே, பெண் கவுன்சிலர் காலில் இளநிலை உதவியாளர் முனியப்பன் விழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.

    அதைத்தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் தலைமையில் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது பட்டியலினத்தைச் சேர்ந்த நகராட்சி ஊழியரை காலில் விழ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    இந்நிலையில் முனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் கவுன்சிலர் ரம்யா, அவரது கணவர் ராஜா, நகர்மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன், திமுக பிரமுகர்கள் காமராஜ், பிர்லா செல்வம் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் திண்டிவனம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் கவுன்சிலர் விளக்கம்: இந்நிலையில், பெண் கவுன் சிலர் ரம்யா திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷிடம் அளித்துள்ள புகாரில், “கோப்புகளை தேடும் பணியில் உதவிக்கு ஒருவரை உடன் வைத்து கொள்ளுமாறு கூறியதற்கு, இளநிலை உதவியாளர் முனியப்பன் என்னிடம் ஒருமையில் பேசினார்.

    இதுதொடர்பாக ஆணையர் (பொறுப்பு) சரவணன் கேட்டு கொண்டதன் பேரில் மனு கொடுக்க காத்திருந்தேன். முனியப்பனுக்கு ஆதரவாக ஆணையர் அறையில் இருந்த அலுவலர்கள் சமாதானம் பேசினர். இந்நிலையில் எனது காலில் முனியப்பன் திடீரென விழுவது போல் விழுந்து, தவறான எண்ணத்

    தில் எனது கால்களை வலது கையால் பிடித்துக் கொண்டு, உடலை இடது கையால் தொட்டார். உடனே சுதாரித்த நான், நாற்காலியை நகர்த்தி போட்டு உட்கார்ந்துவிட்டேன். பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்திய முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண் டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார் முதல்வர்: கமல்ஹாசன்

    September 4, 2025
    மாநிலம்

    வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

    September 4, 2025
    மாநிலம்

    பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

    September 4, 2025
    மாநிலம்

    வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை 

    September 4, 2025
    மாநிலம்

    மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை சுற்றுச்சூழல், மனிதகுல மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

    September 4, 2025
    மாநிலம்

    மேயர்கள் மாற்றத்துக்கு ஊழல் பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலே காரணம்: பழனிசாமி குற்றச்சாட்டு

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார் முதல்வர்: கமல்ஹாசன்
    • முதுகெலும்பு சிக்கல்களைத் தடுக்க நடைபயிற்சி போது தோரணையை மேம்படுத்துவதற்கான 6 வழிகள் – இந்தியாவின் டைம்ஸ்
    • வாட்ச்: ஹவாயின் கிலாவியா எரிமலை மீண்டும் வெடிக்கும்; உருகிய எரிமலைக்கு சாட்சியாக கூட்டம் சேகரிக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: கல்வி நிறுவனங்கள் செப்.7 வரை மூட உத்தரவு
    • யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.