Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    மாநிலம்

    இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    adminBy adminJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

    ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குச் சென்ற படகு உரிமையாளர் ஜஸ்டின் மற்றும் மீனவர்கள் சைமன், சேகர், மோபின், டென்சன் ஆகியோர் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 5 மீனவர்களையும் சிறைபிடித்து, அவர்களது படகைப் பறிமுதல் செய்தனர். கைதான 5 மீனவர்களும் நேற்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை ஆக. 7-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதேபோல, ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகை, புத்தளம் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

    படகிலிருந்த டிகோசன், முருகேசன், களஞ்சியராஜ், ஆனந் தன், பாலமுருகன், முருகதாஸ், கோட்டைசாமி, சக்திவேல், மாரியப்பன் ஆகிய 9 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர். அனைவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய் யக்கோரி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    விடுவிக்க நடவடிக்கை… தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வேதனை அளிக்கிறது.

    இலங்கை சிறைகளில் 68 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 235 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வாழ்வில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தேர்தல் ஆணையத்தை கண்டித்து நெல்லையில் செப்​.7-ல் காங்கிரஸ் மாநாடு

    August 28, 2025
    மாநிலம்

    தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    August 28, 2025
    மாநிலம்

    கையில் இருப்பது மந்திரக்கோலா, மருத்துவக்கோலா? – பிரேமலதாவும் கையில் கரகோல் வைத்திருக்கும் ‘கணக்கு’ என்ன?

    August 28, 2025
    மாநிலம்

    “பாமக அழிவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது!” – காடுவெட்டி குருவின் மகள் காட்டமான நேர்காணல்

    August 28, 2025
    மாநிலம்

    கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

    August 28, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக சரிவு

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மீன்வள மீன் முதல் நாய்கள் வரை: வெவ்வேறு செல்லப்பிராணி விலங்குகளுக்கு கிராம்பு (எண்ணெய்) பயன்படுத்தப்படும் 5 வழிகள்
    • கிள la கோமா அறிகுறிகள்: 6 ஆரம்ப அறிகுறிகள் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது, யார் அதிக ஆபத்தில் உள்ளனர் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் பற்றி எலோன் மஸ்கின் தைரியமான கூற்று: ‘லாஸ் ஏஞ்சல்ஸை 30 நிமிடங்களில் சிட்னிக்கு பறக்கவும்’ | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
    • 5 மருந்துகள் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் மூலம் எடுக்கக்கூடாது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.