Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
    மாநிலம்

    இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

    adminBy adminJune 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இலங்கைக் கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

    வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16 ஆம் தேதி முதல் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

    மீன்பிடித் தடைக்காலம் நிறைவுற்று இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள். அதற்குள், இருமுறை அவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.

    மீனவர்கள் விவரம்: முன்னதாக நேற்று ( சனிக்கிழமை ) காலை வேர்க்கோடு, மண்டபம், ராமேஸ்வரத்தில் இருந்து 466 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், இதில் ஒரு படகில் சென்ற ஜேசு (39), என்.அண்ணாமலை (55). கல்யாணராமன் (45). சையது இப்ரஹிம் (35), செல்வம் (29), காந்திவேல் மற்றும் ஒரு மீனவர் உள்பட 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்தது. தமிழக மீனவர்கள் கைதுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கூடவே, மீனவர் பிரச்சினையில் நிரந்தத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சிதான் அமையும்’ – விஜய பிரபாகரன் கணிப்பு

    June 29, 2025
    மாநிலம்

    திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    June 29, 2025
    மாநிலம்

    திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

    June 29, 2025
    மாநிலம்

    கலாநிதி – தயாநிதி விவகாரம்: சன் குடும்ப மோதல்… கலைஞர் இல்லாத குறையை தீர்ப்பாரா ஸ்டாலின்?

    June 29, 2025
    மாநிலம்

    செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

    June 29, 2025
    மாநிலம்

    புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்: நாளை முறைப்படி அறிவிப்பு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்
    • விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
    • ‘தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சிதான் அமையும்’ – விஜய பிரபாகரன் கணிப்பு
    • முன்கூட்டியே திட்டமிடல் தேவையில்லாத பெங்களூரில் இருந்து ஒரு நாள் பயணங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஃபேஸ்புக் பயனர்கள் கவனத்துக்கு: போனில் உள்ள போட்டோக்களை ஸ்கேன் செய்யும் மெட்டா ஏஐ?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.