Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது
    மாநிலம்

    இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது

    adminBy adminJune 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இலங்கையைச் சேர்ந்த குற்றப் பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவ இருப்பதாக கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரையிலான பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, தனுஷ்கோடி அடுத்த 4-ம் மணல்திட்டு பகுதியில் சிலர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நிற்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த கடலோரக் காவல் படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து, மெரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் கபிலன் (34), நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த சுமித்ரோலன் பெர்னாண்டோ (43), மாதவிலக்கைச் சேர்ந்த சாகர குணதிலக (33) என்பதும், சட்டவிரோதமான முறையில் இலங்கை மன்னார் மாவட்டம் பேச்சாளையிலிருந்து படகு மூலம் தலா ரூ.2 லட்சம் செலுத்தி தனுஷ்கோடி வந்ததும் தெரியவந்தது. மேலும், தமிழகத்தில் ஊடுருவி, பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

    மேலும், இலங்கை தமிழர் கபிலன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் இருந்ததும், மற்ற இருவரும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.

    இலங்கையில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற திட்டத்தின் கீழ் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடையவுர்களை கைது செய்து, கடும் தண்டனை விதித்து வருவதால், அந்நாட்டில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதாக இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்

    June 29, 2025
    மாநிலம்

    ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ – ஜூலை 7 முதல் பழனிசாமி சுற்றுப்பயணம்

    June 29, 2025
    மாநிலம்

    வாக்குச்சாவடி நிலைய முகவராக மாவட்ட செயலாளர்கள் நியமனம்: திருமாவளவன் தகவல்

    June 29, 2025
    மாநிலம்

    பெண் ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கினார் ஆளுநர்

    June 29, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் மட்டும் ஊரக வளர்ச்சி துறையில் ரூ.19,000 கோடி திட்டங்கள்: தமிழக அரசு பெருமிதம்

    June 29, 2025
    மாநிலம்

    அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: அதிமுக ஐ.டி. அணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை: தொலை தொடர்பு துறை பரிசோதனை
    • ஜூனியர் ரோல் பால் இந்திய அணி சாம்பியன்
    • கண்ணப்பா: திரை விமர்சனம்
    • “ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்
    • ஏன் வேப்பம் என்பது உங்களுக்குத் தெரியாத தோல் பராமரிப்பு ஹீரோ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.