Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக…’ – கரூர் துயரம் குறித்து ஆதவ் அர்ஜுனா கருத்து
    மாநிலம்

    ‘இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக…’ – கரூர் துயரம் குறித்து ஆதவ் அர்ஜுனா கருத்து

    adminBy adminSeptember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக…’ – கரூர் துயரம் குறித்து ஆதவ் அர்ஜுனா கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “கரூரில் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.” என தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

    பலி 41 ஆனது…கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிசிச்சையில் இருந்த கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்த கவின் (34) சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 40ஆக நேற்று அதிகரித்தது. இந்நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுகுணா (65) சிகிச்சை பலனின்றி இன்று (செப். 29-ம் தேதி) அதிகாலை மரணமடைந்தார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.

    மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா – இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மவுனம் கலைத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்த பதிவில், “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது.

    மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன். ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள்.

    இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.

    இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.

    துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

    கரூர் கூட்ட நெரிசல் பின்னணியில் சதி இருக்கலாம் என்று தவெக சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பதிவில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!” என்று குறிப்பிட்டுள்ளது கவனம் பெறுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “தவெக தொண்டர்களிடம் கட்டுக்கோப்பு இல்லை” – செல்லூர் ராஜு கருத்து

    September 29, 2025
    மாநிலம்

    “கரைவேட்டி கட்டாத திமுகவாக செயல்படுகிறது கரூர் காவல் துறை” – ஹெச்.ராஜா

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவம் எதிரொலி: தவெகவை தடை செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு

    September 29, 2025
    மாநிலம்

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 45.78 சதவீதம் பணிகள் நிறைவு: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

    September 29, 2025
    மாநிலம்

    கரூரில் இறந்தோர் பிள்ளைகளின் கல்விச் செலவை எஸ்ஆர்எம் ஏற்கும்: பாரிவேந்தர்

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ’ஓஜி’ அடுத்தடுத்த பாகத்தின் திட்டங்கள்!
    • “தவெக தொண்டர்களிடம் கட்டுக்கோப்பு இல்லை” – செல்லூர் ராஜு கருத்து
    • வயிற்று கொழுப்பு பெண்களின் இதயம், வளர்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சத்குரு வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காப்புரிமைகள் மற்றும் சோதனை வெற்றியைக் கட்டியெழுப்ப, அக்னிகுல் கண்கள் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.