Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இரட்டை இலை விவகாரம்: சி.வி.சண்முகம் வாதத்துக்கு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு விரைவில் பதில் மனு
    மாநிலம்

    இரட்டை இலை விவகாரம்: சி.வி.சண்முகம் வாதத்துக்கு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு விரைவில் பதில் மனு

    adminBy adminMay 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இரட்டை இலை விவகாரம்: சி.வி.சண்முகம் வாதத்துக்கு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு விரைவில் பதில் மனு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சி.வி.சண்முகம் முன்வைத்துள்ள வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் விரைவில் புதிய மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, அதிமுக மற்றும் அதிலிருந்து பிரிந்தவர்கள் அளித்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அதிமுக மற்றும் ஓபிஎஸ், ஓ.பி.ரவீந்திரநாத், சூரியமூர்த்தி, ராம்குமார் ஆதித்யன், வா.புகழேந்தி உள்ளிட்டோர் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்கள், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டவிதி, பாரா 15-ன் கீழ் வருகிறதா என விசாரணை நடத்தினர்.

    அப்போது அதிமுக சார்பில் ஆஜரான சி.வி.சண்முகம் தரப்பில், “இவர்கள் யாரும் அதிமுக உறுப்பினர்கள் இல்லை. அதனால் இவர்களின் மனுக்களை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. அனைவரின் மனுக்களும் பாரா 15-ன்கீழ் விசாரிக்க உகந்ததா என தேர்தல் ஆணையம் முடிவெடுத்த பின்னர், வரும் வாரங்களில் மீண்டும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சி.வி.சண்முகம் வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில், புதிய மனுவை ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறியதாவது: இன்று வரை ஓபிஎஸ்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். அதை தேர்தல் ஆணையம் இதுவரை ரத்து செய்யவில்லை. அதனால் அவர் அதிமுக உறுப்பினர் இல்லை என சி.வி.சண்முகம் சொல்ல முடியாது. இந்த வாதத்தை தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்தோம். அதை ஏற்றுதான், அதிமுகவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஓபிஎஸ் உள்ளிட்டோர் மனுக்கள் மீது விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

    அதிமுகவின் பொதுச் செயலாளரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த விதியை மட்டும் எப்போதும் மாற்ற முடியாது. ஆனால் அந்த விதிகளை திருத்தி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த பதவி செல்லாது. ஒரு கட்சியில் பிரச்சினை இருக்கும்போது, ஒரு தரப்புக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கக்கூடாது. ஆனால் பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஓபிஎஸ், அவரது வழக்கறிஞர்களுடன் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். அதில், சி.வி.சண்முகத்தின் வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி விரைவில் புதிய மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு

    June 30, 2025
    மாநிலம்

    அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

    June 30, 2025
    மாநிலம்

    தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!

    June 30, 2025
    மாநிலம்

    திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

    June 30, 2025
    மாநிலம்

    அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

    June 30, 2025
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? – மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு
    • பயிற்சியாளர்களின் கைப்பாவையா ஷுப்மன் கில்? – ‘கேப்டன்சி’ ஒரு பார்வை
    • புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு
    • ஹார்வர்ட் பல்கலைக்கழக நிபுணர் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் முதல் 10 பானங்களை வெளிப்படுத்துகிறார் மற்றும் நீங்கள் தவிர்க்க வேண்டியவை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.