Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்

    adminBy adminSeptember 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதையொட்டி 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலில் இமானுவேல் சேகரன் குடும்பத்தினரான அவரது மகள் சுந்தரி பிரபாராணி, பேரன்கள் சக்கரவர்த்தி, ஆரோக்கிய கோமன், ஜீவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    உடுமலைப்பேட்டையில் இமானுவேல் சேகரன்

    உருவப்படத்துக்கு மலர்தூவி

    மரியாதை செலுத்தியஅதிமுக

    பொதுச் செயலாளர் பழனிசாமி.

    அதைத் தொடர்ந்து தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பில் அதன் தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வராணி மற்றும் உறுப்பினர்கள் மரியாதை செய்தனர். இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

    திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கேஆர்.பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா என்ற முத்துராம லிங்கம், முருகேசன், தமிழரசி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    மணிமண்டபம் விரைவில் திறப்பு: அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, ‘‘சமூக நீதிக்காகப் போராடிய இமானுவேல் சேகரனுக்கு, அவரது குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் மணிமண்டபம் திறக்கப்படும்’’ என்றார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அதிமுக நிர்வாகி ராஜலெட்சுமி ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணிச் செயலாளர் கீர்த்திகா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர், நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி,தினகரன், தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பிரிஸில்லா பாண்டியன், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு சார்பில் (ஓபிஎஸ் அணி) எம்.பி. தர்மர், உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மதிமுக சார்பில் சதன் திருமலைக் குமார், புதூர் பூமிநாதன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் வி.கே. சுரேஷ், பாமக பொருளாளர் சையது மன்சூர் உசேன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    அதேபோல், புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர் சட்ட பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர் மதுரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி சந்தீஷ் தலைமையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம் 

    September 13, 2025
    மாநிலம்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

    September 13, 2025
    மாநிலம்

    தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்​.13 முதல் 16 வரை ரேஷன் பொருட்கள் விநியோகம்

    September 13, 2025
    மாநிலம்

    மோசடியாக நிலம் விற்கப்பட்ட வழக்கில் கவுதமி நீதிமன்றத்தில் ஆஜர்

    September 13, 2025
    மாநிலம்

    திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும்: உதயநிதி அறிவுறுத்தல்

    September 13, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலமாக ஒரு கோடி குடும்பங்கள் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம் 
    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
    • நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்: பிரதமர், அமைச்சர்கள் வாழ்த்து 
    • தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்​.13 முதல் 16 வரை ரேஷன் பொருட்கள் விநியோகம்
    • H3N2 காய்ச்சல் அறிகுறிகள்: டெல்லியில் H3N2 காய்ச்சல் எச்சரிக்கை: வைரஸ் தொற்று, அறிகுறிகள் மற்றும் மீட்பு காலம் பற்றி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.