Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல்
    மாநிலம்

    இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல்

    adminBy adminSeptember 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம்: இலங்​கை​யில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடி துறை​முகத்தை இந்​திய அரசு உதவி​யுடன் மேம்​படுத்த அந்​நாட்டு அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. யாழ்ப்​பாணத்​தில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகம், இலங்​கை​யின் பிபகு​தி​களை இணைக்​கும் முக்​கிய இடமாக உள்​ளது. இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில், ராமேசுவரம் மற்​றும் வேதா​ரண்​யத்​திலிருந்து 40 கடல் மைல் தொலை​வில் உள்​ளது.

    இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்​டுப் போரின்​போது விடு​தலைப் புலிகளின் கப்​பல் படையை வீழ்த்​து​வதற்​காக, அந்​நாட்டு ராணுவம் நடத்​திய தாக்​குதல்​களில் பருத்​தித்​துறை துறை​முகம் சேதமடைந்​தது. 1995-ல் விடு​தலைப் புலிகளிடம் இருந்து இந்த துறை​முகம் இலங்கை ராணுவத்​தால் கைப்​பற்​றப்​பட்​டது.

    கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி​யின்​போதும் இந்த துறை​முகம் கடும் சேதமடைந்​தது. 7 ஹெக்​டேர் பரப்​பளவு கொண்ட இந்த துறை​முகத்​தில் 300 படகுகள் வரை​ நிறுத்த முடி​யும், இந்நிலையில் இந்தத் துறைமுகத்தை மேம்படுத்தி, மீன் பதனிடும் அறை, விற்​பனை நிலை​யம் மற்​றும் எரிபொருள் நிரப்பு நிலை​யம் ஆகிய​வை​ அமைக்​கப்பட உள்​ளன.

    பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம்.

    இலங்​கை​யின் வட மாகாணப் பகு​தி​யில் கடல் அட்டை பண்ணை வளர்ப்​பில் கவனம் செலுத்தி வரும் சீன அரசு, இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில் உள்ள இந்த துறை​முகத்தை மேம்​படுத்த தீவிரம் காட்​டியது.

    ஆனால், இலங்கை அமைச்​சரவை பருத்​தித்​துறை துறை​முகத்தை மேம்​படுத்த இந்​திய அரசுக்கே ஒப்​புதல் அளித்தது. இந்​நிலை​யில், பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகத்​தின் மேம்​பாட்டு திட்​டத்​துக்​காக, இந்​தி​யா​வின் மீன்​பிடித் துறை அமைச்​சகத்​தின்​கீழ் இயங்​கும் மீன் வளத்​துக்​கான மத்​திய கடலோரப் பொறி​யியல் நிறு​வனத்​தினர் யாழ்ப்​பாணம் சென்​றுள்​ளனர்.

    இந்​தக் குழு​வினர் யாழ்ப்​பாணத்​தில் உள்ள வட மாகாண ஆளுநர் மாளி​கை​யில், ஆளுநர் வேத​நாயகன் தலை​மை​யில் நடை​பெற்ற, பருத்தித்​துறை மீன்​பிடி துறை​முகத்​தின் மேம்​பாட்டு பணி​களுக்​கான கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர். இந்​திய துணைத் தூதர் சாய் முரளி​யும் இதில் பங்​கேற்​றார். முன்னதாக, இந்திய தூதுக் குழு​வினரை வரவேற்ற ஆளுநர் வேத​நாயகன், இந்திய அரசின் உதவிக்கு நன்றி தெரி​வித்​துக் கொண்​டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஜிஎஸ்டி பயன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்

    September 11, 2025
    மாநிலம்

    37 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக கூறுவது பொய்: பழனிசாமி குற்றச்சாட்டு

    September 11, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,275 கனஅடியாக சரிவு

    September 11, 2025
    மாநிலம்

    விஜயகாந்த் சகோதரி காலமானார்: பிரேமலதா, சுதீஷ் அஞ்சலி

    September 11, 2025
    மாநிலம்

    நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்

    September 11, 2025
    மாநிலம்

    முதல்வர் தலைமையில் காவலர் நாள் உறுதி ஏற்பு: டிஜிபி, ஆணையர் உள்பட 3 ஆயிரம் போலீஸார் பங்கேற்பு

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜிஎஸ்டி பயன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்
    • ஜான்ஹ்வி கபூர் பிராடாவின் சின்னமான சேலை -ஈர்க்கப்பட்ட கோடூரை டொரொன்டோவில் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் மீண்டும் உயிர்ப்பிக்கிறார்
    • இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா கைது
    • யார் இந்த சுசீலா கார்கி? – நேபாள ‘ஜென் ஸீ’ போராட்டக்கார்கள் ‘டிக்’ செய்த இடைக்கால பிரதமர்!
    • நெகட்டிவ் கதாபாத்திரம்: நடிகர் சர்வா ஆசை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.